என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
8-ம் வகுப்பு மாணவனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆசிரியர்: போலீசில் பெற்றோர் புகார்
- கடந்த 14-ந் தேதி அன்று எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு வந்துள்ளான்.
- சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 20-ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தேன்.
இரணியல்:
இரணியல் அருகே உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் வீட்டில் சோர்வாக காணப்பட்டுள்ளான்.
இது பற்றி அவனது தந்தை விசாரித்தபோது, மாணவனுக்கு பள்ளி ஆசிரியர் ஓருவர் செக்ஸ் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுகுறித்து மாணவனின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது 13 வயது மகன், அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியில் பாடம் எடுத்து வரும் 47 வயது ஆசிரியர் ஒருவர் எனது மகனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 14-ந் தேதி அன்று எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு வந்துள்ளான். அப்போது அவர், எனது மகனை ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவனை தகாத உறவுக்கு ஈடுபடுத்தி உள்ளார். இதனால் அவனது பிறப்புறுப்பு வீங்கி வலியால் அவதிப்பட்டு வந்தான். இது குறித்து கேட்டபோதுதான் பள்ளி ஆசிரியர் தவறாக நடந்தது குறித்து கூறினான். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 20-ம் தேதி பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்