search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pity"

    • அதிகாரிகளின் பேச்சை நம்பி வீட்டை இழந்து இலங்கை அகதிகள் தவிக்கிறார்கள்.
    • கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கிலூரணியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 32 ஆண்டுகளுக்கு மேலாக 186 குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் அங்கு வந்த அதிகாரிகளிடம் முதல்-அமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போதுள்ள வீட்டை இடித்து விட்டு சிறிது காலம் வெளியே தங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    புதிய வீடு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறிய உறுதிமொழியால் முகாமில் இருந்த 52 குடும்பங்களை ேசர்ந்தவர்கள்புதிய வீடு கட்டுவதற்கு தங்கள் வீட்டை இடித்தனர். இதன் காரணமாக அவர்கள் வாடகை வீட்டில் குடியேறினர்.

    இந்த நிலையில் அதிகாரிகள் கூறியபடி தற்போது வரை வீடுகள் கட்டி தரப்படவில்லை. இது தொடர்பாக கேட்டால் உரிய பதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இலங்கை அகதிகள் தங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

    மேலும் அதிகாரிகள் கூறியபடி முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் உடனே வீடு கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னசேலம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • சின்னசாமி பையில் வைத்திருந்த 8 ஆயிரம் ரூபாயை தொலைத்து விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34 )இவருடைய தந்தை சின்னசாமி (வயது 47) இவர் கூலி வேலை செய்து வந்தார். சின்னசாமி கடந்த 23-ந் தேதி அவரது பையில் வைத்திருந்த 8ஆயிரம் ரூபாயை தொலைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனை மனைவி ,மகன் மணிகண்டன் ஆகியோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சின்னசாமி விஷம் குடித்தார்.

    அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளி க்காமல் சின்னசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சின்னசாமி மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 19).கடலூர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை மாநிலததில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது,
    • இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது  இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4 பேரும் முந்திரிக் கொட்டை பொறுக்கும் வேலைக்கு சென்றனர்.

    இந்த முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர். இதில் கண்ணிவெடி வெடித்து 4 பேரும் தனித்தனியே தூக்கி வீசப்பட்டனர். இதில் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானது. பலத்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பிற தொழி லாளர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் விருத்தா சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரங்க நாதன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கும், மதுரை பாண்டியன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் விசாரணைதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமை யிலான போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாய நிலத்தின் உரிமை யாளருக்கு தெரியாமல் முந்திரிதோப்பில் கண்ணி வெடி புதைத்து வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றது.முந்திரி தோப்பில் கண்ணிவெடி வெடித்து ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

    • சரவணன் (வயது 48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • தூக்க கலக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் வி. சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.   இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி இரவு உணவை அருந்தினார். பின்னர், இவர் சொந்தமாக கட்டிவரும் வீட்டில், கைப்பிடி இல்லாத மொட்டை மாடியில் படுத்து தூங்கி விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்தவர், தூக்க கலக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை  அளித்தும், சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்து விட்டார்.இது தொடர்பாக அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த சரவணனுக்கு நிரல்யா, தூசிகா என்ற 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய கிளீனர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • லாரியை டிரைவர் நிறுத்தி இறங்கியபோது அவருக்கு நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பர்னிச்சர் கடைக்கு இன்று அதிகாலை சரக்குகளை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தா னில் இருந்து கண்டெய்னர் லாரி வந்தது. கடை 10 மணிக்கு திறக்கப்படும் என்பதால் லாரியை திருமங்கலம் நகரின் வெளியே சாலையோரத்தில் டிரைவர் ஜபார் (வயது 27) நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அவரும், கிளீன ரும் லாரிக்குள் தூங்கினர். இதனிடையே அங்கு வந்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் லாரியின் அடியில் தூங்கியதாக தெரிகிறது.

    காலை 10 மணிக்கு பிறகு எழுந்த டிரைவர் ஜபார் லாரியில் உள்ள சரக்குகளை கடைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் லாரியை இயக்கினார். அப்போது லாரியின் அடியில் படுத்திருந்த நபரின் தலையில் பின்னால் உள்ள டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர் கூச்ச லிட்டனர். இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்தி இறங்கியபோது அவருக்கு நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னர். அப்போது லாரியின் டயரில் சிக்கி இறந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியை சேர்ந்த பால்ராஜ் (52) என தெரிய வந்தது.

    லாரி கிளீனராக பணி யாற்றி வந்த இவர், அஜாக்கிரதையாக லாரியின் அடியில் தூங்கியதால் டயரில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

    • ஷெரின் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீேழ விழுந்தார்.
    • விபத்தில் ஷெரின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் மேலக்காவேரி ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் ஜுல் பிகார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்

    இவரது மகள் ஷெரின் (வயது 9). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது தாத்தா ஜலாலுதீன் (வயது 67) என்பவருடன் ஷெரின் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் பாலக்கரை காவேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஷெரின் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீேழ விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ஷெரின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் ஷெரின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷெரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • இவரும் இவரது 10 வயது மகன் அஸ்வின் ஆகிய இருவரும் திண்டிவனம் அண்ணா நகரில் இருந்து ஆட்சிப்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஆட்சிப் பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் இவரும் இவரது 10 வயது மகன் அஸ்வின் ஆகிய இருவரும் திண்டிவனம் அண்ணா நகரில் இருந்து ஆட்சிப்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது சென்னை மார்க்கமாக கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஸ்வின் சுந்தரமூர்த்தியின் கண்முன்னே டிராக்டரில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சுந்தரமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டார்.இந்த விபத்தால் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • விருதுநகர் அருகே இளம்பெண்-வாலிபர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திரன் இவரது மகள் பவித்ரா (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது சகோதரர் காசிமாயன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த பவித்ரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளை யம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் சண்முக குமார் (வயது17). நேற்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பாலாஜி (19) என்பவருடன் சண்முககுமார் மோட்டார் சைக்கிள் வெளியே சென்றார்.

    அருப்புக்கோட்டை ரோடு தியேட்டர் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சண்முக குமார் மீது பஸ் ஏறி இறங்கியது.

    உயிருக்கு போராடிய வரை அங்கிருந்து அவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சண்முக குமார் பரிதாபமாக இருந்தார். பாலாஜி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் இருளாண்டி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி முத்துராம லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஒத்தப்புளி- ஆனையூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மண்ணில் சிக்கிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக் குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பால கிருஷ்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
    • உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஜவுளிகடை தெரு சேர்ந்தவர் சண்முகம் (வயது 58) விவசாயி. மேலும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ெரயில் சண்முகம் மீது மோதியது.

    இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    • காப்பு காட்டில் மரம் வெட்டிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெட்டியா ந்தொழுவம் கிராமத்தில் அடந்த காப்பு காடு உள்ளது.

    இந்த காப்பு காட்டில் தைலம் மரங்கள் வெட்ட கரூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித மில் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

    மேலும் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அய்யசாமி உள்ளிட்ட 25 நபர்கள் ஆரணி அடுத்த வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தைலம் மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று வெட்டியாந்தொழுவம் காப்புகாட்டில் தைலம் மரங்களை வெட்டிய போது எதிர்பாரதவிதமாக மரம் அய்யசாமி மீது மரம் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அய்யாசாமியை உடன் இருந்த கூலி தொழிலாளிகள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே அய்யசாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தகவலிறந்து வந்த ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் வழக்கு பதிந்து சக தொழிலாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ஆரணி அருகே மரம் வெட்டிய போது தொழிலாளி மீது விழுந்ததில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இறந்த அய்யசாமிக்கு செல்வியம்மாள் என்ற மனைவியும் வெங்கடேஷ், பிரகாஷ் என்ற 2 மகன்களும் கவிதா என்ற மகளும் உள்ளனர்.

    • ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
    • சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபா ண்டியன் (வயது 37).

    இவர் மணக்குடி கடைத்தெரு அருகே சாலை ஓரத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்று ள்ளார்.

    அப்போது அந்த வழி யாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாரத விதமாக மோதியது.

    இதில் சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தலைஞாயிறு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×