search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில்  கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி சிறுவன் பலி:தந்தை கண் முன்பு பரிதாபம்
    X

    அஸ்வின்.

    திண்டிவனத்தில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி சிறுவன் பலி:தந்தை கண் முன்பு பரிதாபம்

    • இவரும் இவரது 10 வயது மகன் அஸ்வின் ஆகிய இருவரும் திண்டிவனம் அண்ணா நகரில் இருந்து ஆட்சிப்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஆட்சிப் பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் இவரும் இவரது 10 வயது மகன் அஸ்வின் ஆகிய இருவரும் திண்டிவனம் அண்ணா நகரில் இருந்து ஆட்சிப்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது சென்னை மார்க்கமாக கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஸ்வின் சுந்தரமூர்த்தியின் கண்முன்னே டிராக்டரில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சுந்தரமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டார்.இந்த விபத்தால் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×