என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண்-வாலிபர் உள்பட 3 பேர் பரிதாப சாவு
- விருதுநகர் அருகே இளம்பெண்-வாலிபர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சந்திரன் இவரது மகள் பவித்ரா (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது சகோதரர் காசிமாயன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த பவித்ரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளை யம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் சண்முக குமார் (வயது17). நேற்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பாலாஜி (19) என்பவருடன் சண்முககுமார் மோட்டார் சைக்கிள் வெளியே சென்றார்.
அருப்புக்கோட்டை ரோடு தியேட்டர் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சண்முக குமார் மீது பஸ் ஏறி இறங்கியது.
உயிருக்கு போராடிய வரை அங்கிருந்து அவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சண்முக குமார் பரிதாபமாக இருந்தார். பாலாஜி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் இருளாண்டி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி முத்துராம லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஒத்தப்புளி- ஆனையூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மண்ணில் சிக்கிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக் குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பால கிருஷ்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்