search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் சிறுமி சாவு
    X

    சாலை விபத்தில் சிறுமி சாவு

    • ஷெரின் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீேழ விழுந்தார்.
    • விபத்தில் ஷெரின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் மேலக்காவேரி ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் ஜுல் பிகார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்

    இவரது மகள் ஷெரின் (வயது 9). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது தாத்தா ஜலாலுதீன் (வயது 67) என்பவருடன் ஷெரின் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் பாலக்கரை காவேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஷெரின் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீேழ விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ஷெரின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் ஷெரின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷெரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×