search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pension"

    • நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஊக்க ஓய்வூதியம் ரூ.4000 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்ட ஓய்வூதி யர்கள் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச் செயலாளர் தில்லைவனம் முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.

    இதில் நுகர்பொருள் சங்க சி.ஐ.டி.யூ மண்டல செயலாளர் பாண்டித்துரை, அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன், மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, நுகர் பொருள் வாணிப கழக போராட்ட குழுவை சார்ந்த வேணுகோபாலன், முருகேசப்பிள்ளை, மாரியப்பன், தியாகராஜன், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சார்பதிவாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் 50 சதவீதம் சார்பதிவாளர் அலுவலக பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தேவைக்கேற்ப பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 150 சார்பதிவாளர்களை பணியிட நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரியும், பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் 10 அம்ச உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப் பட்டது.

    இதில் மயிலாடுதுறை மாவட்டம் முழுதும் இருந்து சார் பதிவாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பா ட்டத்திற்கு மாவட்ட தலைவர் பசுபதி தலைமை தாங்கினார்.

    இளையபெருமாள் வெங்கடேஷ் பால சரவணன் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலக சங்கத்தினர் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூா்:

    சமூக நீதி மறுக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளைத் தனியார்ம யமாக்கும் முயற்சியைக் கைவிட செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    முடக்கப்பட்ட சரண் விடுப்பு, மறுக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீட்டெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியை தொடங்கினர்.

    சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரணியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலர் ரெங்கசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பேரணியானது பனகல் கட்டிடம் முன்பு முடிவடைந்தது . பின்னர் அங்கு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் செயல்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர்.

    பேரணிக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

    பேரணியை மாநிலச் செயலாளர் டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார்

    பேரணியில் சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதி திட்டத்தைஅமுல்படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தர பணிகளை அழித்திடும் அரசாணை 152, 139 ஐ ரத்து செய்திட வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல்படுத்த வேண்டும், இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115ஐ ரத்து செய்திட செய்து சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கான பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ர மணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

    தமிழ்நாடு அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனு டையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 30.12.2022 மூலம் ரூ.1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன்படி கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் 18,047 மாற்றுத்திறனுடைய பயனாளிகளுக்கு 2023 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் ரூ.1,000 ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 2023 ஜனவரி மாதம் முதல் ரூ.1,500 கிடைக்கப் பெறாத சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளில் 40 சதவீதம் மாற்றுத்திறன் உடையோர் எவரும் இருந்தால், தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்களது வட்டத்தின் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை நேரில் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழைய- புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
    • பணிக்கொடை தொகை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பண பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் கரந்தை பணிமனை முன்பு இன்று காலை போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை தலைமை வகித்தார். கவுரவ தலைவர்சந்திரமோகன்,

    தலைவர் மல்லி. ஜி.தியாகராஜன் முன்னி லை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தொடக்கி வைத்தார்.

    ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க கவுரவத் தலைவர் சுந்தர பாண்டியன் , பொருளாளர் ராஜமன்னன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய- புதிய அகவிலைப்படி உயர்வுகள் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும்,உயர்த்தி வழங்கப்பட வேண்டும், கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வுபெற்றவர்கள், பணியின் போது இறந்தவர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை தொகை, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஓய்வு பெற்றோர் சங்க துணை பொதுச் செயலாளர் வெங்கடா பிரசாத், மனோகரன், தங்கராசு, முருகையன் , துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், இருதயராஜ், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, ஞானசேகரன், பிகுணசேகரன், சம்பத்குமார், வீராச்சாமி, அழகிரி, கோவிந்தராஜன், லதா பார்த்திபன், நவநீதம் உதயகுமார், சாந்திதுரை ராஜ், முத்துச்செல்வி சேகர், சித்ரா சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் பால சுப்பிரமணியம் நன்றி கூறினார். 

    • காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் உடனடியாக வழங்க வேண்டும்.
    • பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பி னர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் கலைவாணன், இளவரசன் தலைமை தாங்கினர்.

    அரசு ஊழியர் சங்க செயலாளர் அசோக்குமார், மாநில துணைத்தலைவர்.தமிழ்நாடு உயர்நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் மாநில தீர்ப்பு குழு உறுப்பினர் தமிழ்நாடு வெங்கட்டு ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் சுந்தரம் வரவேற்றார்.

    அப்போது தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.
    • சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டுசெல்ல வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் 2023 ஆம் ஆண்டிற்குரிய உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அவரவர்கள் பணிபுரிந்த கிளைகள் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளைகளில் வருகிற மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.

    சான்று சமர்ப்பிக்க ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்று கொண்டுசெல்ல வேண்டும்.

    குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் பெண் ஓய்வூதியர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ ஒன்றுடன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மறுமணம் செய்து கொள்ளவில்லை என சான்றிதழ் பெற்று சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

    உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க சந்தேகங்கள் மற்றும் உதவிகள் தேவைப்பட்டால் தஞ்சாவூர் கீழராஜவீதி அரண்மனை எதிரில் உள்ள மாவட்ட ஏ. ஐ .டி .யூ .சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கும்பகோணம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரையை 9566715758 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கும்பகோணம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

    • கடந்த காலங்களில் வழங்கியது போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும்.
    • ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கியது போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும், விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட தலைவர் சின்னையன் தலைமை தாங்கினார். சி.டபிள்யூ.எப்.ஐ மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் , மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் பேரிநீதிஆழ்வார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜூ, ராஜாராமன், முருகேசன், அன்பு, வீரையன், பாலமுருகன், ராஜா, மில்லர்பிரபு, பவாணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
    • டிசம்பர் முதல் இதை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:

    சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூ.500ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி 2011ம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500ஆக வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடியே 56 லட்சம் கூடுதல் செலவாகும்.

    தற்போது தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெற்று வரும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் வரும் மாத ஓய்வூதியத்தை ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

    2022 டிசம்பர் முதல் இதை நடைமுறைப் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி, 2023ல் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து ரூ.65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500க்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தினைவழங்க வேண்டும்.
    • மென்பொருள் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்திணை ரத்து செய்து, அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஓய்வூதியத்தினைவழங்கிட வேண்டும்.

    மறுக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பை உடன் வழங்கிட வேண்டும். மாநகராட்சி நகராட்சியில் நிரந்தர பணியிடங்களை அளித்திடும் அரசாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும்.

    தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை, சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமுல்படுத்தி விட வேண்டும்.

    அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட் சோரிங் முறைகளை ரத்து செய்து, காலம் முறை ஊதியத்தை உடனடியாக காலியிடங்களை நிரப்பிட வேண்டும்.ஏ மற்றும் பி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும்பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம் ஆர் பி செவிலியர்கள், நூலகர்கள், உள்ளிட்டு தொகுப்பூதியம், சிறப்பு காலம் முறை ஊதியம் பெறும் ஊழியர்களை, நிரந்தரப்படுத்தி காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும்.

    கருவூலம் உள்ளிட்ட அரசுத் துறையில் பயன்படுத்தப்படும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பது கைவிட வேண்டும்.

    ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்ட த்தில் தமிழ்நாடு அரசு உயர் சங்கத்தின், நன்னிலம் வட்டக்கிளை நிர்வாகிகள், மற்றும்மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ×