என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
தஞ்சையில் நாளை சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
- சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






