என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- கடந்த காலங்களில் வழங்கியது போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும்.
- ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்.
தஞ்சாவூர்:
கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கியது போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும், விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் சின்னையன் தலைமை தாங்கினார். சி.டபிள்யூ.எப்.ஐ மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் , மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் பேரிநீதிஆழ்வார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜூ, ராஜாராமன், முருகேசன், அன்பு, வீரையன், பாலமுருகன், ராஜா, மில்லர்பிரபு, பவாணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்