search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "participation"

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.
    • இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.

    கோரிக்கை மனு

    இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    நேற்று முதல் நாள் பாளை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனு க்களை பெற்றுக் கொண்ட நிலை யில் இன்று 2-வது நாளாக அங்கு நடந்த கூட்ட த்தில் கலெக்டர் பங்கேற்றார்.

    2-ம் நாள்

    2-ம் நாளான இன்று பாளை வட்டம் மேலப்பா ட்டம் குறு வட்டத்திற்குட்பட்ட அரியகுளம், திருத்து, கீழப்பாட்டம், கான்சாபுரம், மருதூர், கீழநத்தம், நடுவக்கு றிச்சி, சீவலப்பேரி, அவினா ப்பேரி உள்ளிட்ட கிராமங்க ளில் ஜமாபந்தி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரி க்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். பாளை தாலுகா அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணன், உதவி இயக்கு னர்கள் வாசு தேவன், கிருஷ்ண குமார், வருவாய் ஆய்வாளர் ராஜசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி அருகே நடந்த கபடி போட்டியில் 43 அணிகள் பங்கேற்றனர்.
    • சாமிபட்டி அணி முதல் பரிசை பெற்றது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சேர்ந்த கோட்டை கிராமத்தில், ஆண்டுதோறும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கபடி போட்டி நடத்தப்படும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டு 42-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், லக்கி கார்னர் உள்பட பல போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரியவர்கள், சிறியவர்கள்,பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரசு பணியில் புதிதாக இணைந்தவர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுத்தொகை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    எஸ்.ஆர்.எம். கபடி குழுவினர் நடத்திய கபடி போட்டியில் சேர்ந்த கோட்டை, சாமிபட்டி, ஆலங்குளம், கலையூர், ஏனாதி ஆகிய கிராமங்கள் உட்பட ஏராளமான பகுதியிலிருந்து 43 கபடி அணிகள் பங்கேற்றன. போட்டியில் சாமிபட்டி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    இந்த அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த சேர்ந்த கோட்டை எஸ்.ஆர்.எம். "பி" அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்க பரிசும், 3-ம் இடம் பிடித்த எஸ்.ஆர்.எம். "ஏ" அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், 4-ம் இடம் பிடித்த ஆலங்குளம் அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனாக நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் செய்திருந்தனர்.

    • இலவச சேவை மையத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு விழா நடந்தது.இதை மானாமதுரை எம்.எல்.ஏ.-முன்னாள் அமைச்சர் தமிழரசி திறந்துவைத்து, கணினியை இயக்கி வைத்தார். பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

    தொகுதியில் உள்ள குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், தி.மு.க. நிர்வாகிகள் நெட்டூர் அய்யா சாமி, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • த.மு.மு.க. எஸ்.பி.பட்டணம் கிளை சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • மாநில செயலாளர் சாதிக் பாட்சா பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எஸ்.பி.பட்டணம் கிளையின் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட துணை செயலாளர் நிசார் பாய் தலைமையில் நடந்தது.

    த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு த.மு.மு.க.வின் சேவைகள், கடந்தகால சேவைகள் பற்றி பேசினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம் கொடி ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் யாண்பு இப்ராஹிம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வசந்தம் ரகுமான், தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் பரக்கத் அலி, மைதீன், மங்களக்குடி கிளை தலைவர் ஜாகிர், புதுவலசை கிளை துணை செயலாளர் செயலாளர் முகம்மது அப்சர், பனைக்குளம் செய்யது இப்ராஹிம், எஸ்.பி.பட்டினம் கிளை தலைவர் பஷீர் அலி, கிளை செயலாளர் ஹாஜி முகம்மது, ஒன்றிய பொருளாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் கவிஞர் பாக்கி, ம.ம.க. கிளை செயலாளர் ஜாவித், இளைஞர் அணி செயலா ளர் புஹாரி, ம.ம.க. கிளை செயலாளர் அப்துல்லாஹ், இஸ்லாமிய பிரசார பேரவை செயலாளர் முஹம்மது இலியாஸ், விளையாட்டு குழு கிளை செயலாளர் மிஸ்பா, கிளை செயலாளர் அபுத்தாஹிர், கிளை நிர்வாகி அப்சர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா கடலூர் அடுத்த கிளிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது
    • கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்

    கடலூர்:

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா கடலூர் அடுத்த கிளிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சம்பத், பன்னீர், ராஜேஷ், சக்திமுருகன், ஏழுமலை, ராம்பிரகாஷ், லிங்கேஷ், சித்திரவேல், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    மதுரை

    மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் எம்.எஸ்.ஷா , தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் வெண்ணிலா ஆகியோர் பேசுகிறார்கள்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். பேராசிரியர் ராம சீனிவசான் சிறப்புரை யாற்றுகிறார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    • கடலுார் முதுநகர் ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்,

    கடலூர்:

    கடலுார் முதுநகர் ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், கீதா குணசேகரன், தமிழரசன், சரத் தினகரன், பாரூக் அலி, சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேதட குமார், கர்ணன், வக்கீல் சிவராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், பள்ளி வாசல் நிர்வாகிகள் காசிம் மான்பஈ, இமாம் பேஷிம்மா, இப்ராகிம் மரைக்காயர், காதர் மொய்தீன், முகமது காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. முப்பெரும் விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
    • ஓ.பி.எஸ். அணி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை அ.தி.மு.க. புற நகர் வடக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞரணி மாநில செய லாளர் ராஜ்மோகன், மாணவரணி துணை மாநில செயலாளர் ஒத்தகடை பாண்டியன், பேரவை மாநில இணைச்செயலாளர் சோலை குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் பேசும்போது கூறியதாவது:-

    வருகிற 24-ந் தேதி திருச்சியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெறுகிறது. இந்த விழா முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நாயகன் ஓ.பி.எஸ். கரத்தினை வலுப்ப டுத்தும் வகையில் மாநாடு போல நடைபெறும்.

    இந்த விழாவில் அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வரிசையாக வாகனங்களில் அணிவகுத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

    • திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் டி.குணா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். காமில் கலந்து கொண்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., உறுப்பினர் சேர்க்கை மேலிட பார்வையாளர் முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர். எ.வ.வே. கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்கள்.

    நிகழ்ச்சியில் நகர வர்த்தக சங்கத் தலைவர் கே.ஏ.ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜன், எல்.தங்கராஜ், அண்ணாதுரை, ஜல்லிபிரகாஷ், மகாலிங்கம், துரைராஜன், பிரமிளாராகவன், சண்முக வள்ளி ஜெகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கட், லதா சரவணன், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வி.சந்திரசேகரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

    • விருதுநகரில் இன்று மாலை பா.ஜ.க. ஆன்மீக பாதயாத்திரை நடக்கிறது.
    • ராம.சீனிவாசன் தலைமையில் 2000 பேர் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். இதன் அடிப் படையில் தேசிய அளவில் முதலாவதாக 'பி.எம்.மித்ரா' மெகா ஜவுளிப் பூங்கா விருதுநகரில் அமைய உள்ளது.

    இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. விருதுநகரில் சுமார் 1052 ஏக்கர் பரப்ப ளவில், ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பொதுமக்களிடம் வர வேற்பை பெற்றுள்ளது.

    இந்தநிலையில் தமிழக பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம. சீனிவாசன், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யில், விருதுநகரில் பாத யாத்திரை நடத்த முடிவு செய்தார்.

    அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் சாத்தூர் பத்திரகாளி அம்மன் கோவி லில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரை ஆன்மீக பாதயாத்திரை நடைபெறு கிறது.

    ராம.சீனிவாசன் தலை மையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் மெகா ஜவுளி பூங்கா தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்து வார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

    இந்த யாத்திரையில் மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் 200 கார்களில் விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலை மையில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபுராஜா, உசிலம்பட்டி மண்டல தலைவர் கீரிப்பட்டி வி. போஸ் மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் நாகராஜ், காளிதாஸ், ஓ.பி.சி. அணி வேல்முருகன், வெற்றி வேல்முருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் ஆகியோர் செய்துள் ளனர்.

    ராம சீனிவாசன் தலை மையில் நடைபெற உள்ள இந்த ஆன்மீக பாதயாத்திரை தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தும் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடக்கிறது.
    • சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 22-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கு வதற்கான ஒன்றிய, நகர, பேருர் செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

    அதன்படி காலை 10 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தேவகோட்டை நகர், வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டமும், பகல் 12 மணிக்கு காரைக் குடி நகர் தி.மு.க. அலுவல கத்திலும், மாலை 4 மணிக்கு சொர்ணமகாலில் செயல்வீரர்கள் கூட்டம் பொறுப்பாளர் செந்தில் குமார் முன்னிலையில் நடக்கிறது. இதில் சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் முன்னிலையில் காலை 10 மணிக்கு யாதவா திருமண மண்டபத்திலும், 12 மணிக்கு இன்பம் மகாலிலும், மாலை 4 மணிக்கு முத்துகணேஷ் மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

    இதில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், கல்லல், நெற்குப்பை, பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    சிவகங்கை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் யாழினி முன்னிலை யில் காலை 10 மணிக்கு ஆரோ மகாலிலும், 3 மணிக்கு திருப்பத்தூர் ஏ.எம்.கே. மகாலிலும், 4மணிக்கு செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் காளையார் கோவில், நாட்டரசன் கோட்டை, சிவகங்கை, திருப்புவனம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் பார்வையாளர் தினேஷ் முன்னிலையில் திருப்புவனம் மருது பாண்டியர் மண்டபத்தில் காலை 10 மணிக்கும், 4 மணிக்கு இளையான்குடி எம்.எம்.மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் அறப்போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காரைக்குடி மகர்நோன்பு திடலில் உள்ள காந்தி சிலை அருகே மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர்.

    முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், காரைக்குடி நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவி மாங்குடி, காமராஜ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், வட்டாரத் தலைவர்கள் செல்வம், கருப்பையா, தேவகோட்டை அப்பச்சி சபாபதி, சஞ்சய், கவுன்சிலர்கள் அமுதா, அஞ்சலிதேவி.

    மானாமதுரை நகர்மன்ற கவுன்சிலர் புருஷோத்தமன், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இமயமெடோனா, கண்டனூர் நகரத்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் நகர்செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், எஸ்.எஸ். ரமேஷ், புதுவயல் முத்துக்கண்ணன், ஜெயப்பிரகாஷ், முகமது மீரா, மானாமதுரை சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செய லாளர்கள் ராஜீவ்கண்ணா, ஆதி. அருணா.

    மணச்சை பழனியப்பன், கருப்பையா, ராமசாமி, தட்சிணாமூர்த்தி, முகமது ஜின்னா, பழ.காந்தி, லோட்டஸ் சரவணன், கனிமுகமது, ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன் இளைஞர் காங்கிரஸ் பாலா, சசி, முத்து, அசார், மாஸ்மணி, மாணவர் காங்கிரஸ் தியோடர், வசந்தா தர்மராஜ், சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×