search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூரில் தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு முகாம்:அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
    X

    திருக்கோவிலூரில் தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு முகாம்:அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

    • திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் டி.குணா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். காமில் கலந்து கொண்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., உறுப்பினர் சேர்க்கை மேலிட பார்வையாளர் முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர். எ.வ.வே. கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்கள்.

    நிகழ்ச்சியில் நகர வர்த்தக சங்கத் தலைவர் கே.ஏ.ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜன், எல்.தங்கராஜ், அண்ணாதுரை, ஜல்லிபிரகாஷ், மகாலிங்கம், துரைராஜன், பிரமிளாராகவன், சண்முக வள்ளி ஜெகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கட், லதா சரவணன், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வி.சந்திரசேகரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×