search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

    • த.மு.மு.க. எஸ்.பி.பட்டணம் கிளை சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • மாநில செயலாளர் சாதிக் பாட்சா பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எஸ்.பி.பட்டணம் கிளையின் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட துணை செயலாளர் நிசார் பாய் தலைமையில் நடந்தது.

    த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு த.மு.மு.க.வின் சேவைகள், கடந்தகால சேவைகள் பற்றி பேசினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம் கொடி ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் யாண்பு இப்ராஹிம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வசந்தம் ரகுமான், தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் பரக்கத் அலி, மைதீன், மங்களக்குடி கிளை தலைவர் ஜாகிர், புதுவலசை கிளை துணை செயலாளர் செயலாளர் முகம்மது அப்சர், பனைக்குளம் செய்யது இப்ராஹிம், எஸ்.பி.பட்டினம் கிளை தலைவர் பஷீர் அலி, கிளை செயலாளர் ஹாஜி முகம்மது, ஒன்றிய பொருளாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் கவிஞர் பாக்கி, ம.ம.க. கிளை செயலாளர் ஜாவித், இளைஞர் அணி செயலா ளர் புஹாரி, ம.ம.க. கிளை செயலாளர் அப்துல்லாஹ், இஸ்லாமிய பிரசார பேரவை செயலாளர் முஹம்மது இலியாஸ், விளையாட்டு குழு கிளை செயலாளர் மிஸ்பா, கிளை செயலாளர் அபுத்தாஹிர், கிளை நிர்வாகி அப்சர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×