search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Activists meeting"

    • தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் எட்டயபுரம் சாலையில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு காங்கிரஸ் துணைதலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் எட்டயபுரம் சாலையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் சேகர் ராஜன், செந்தூர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்த தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டு கைதானவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ் வழங்கினார்.

    கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி ராகுல்காந்தியை பிரதமராக்கும் வகையில் தொண்டர்கள் அயராது உழைப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மண்டல தலைவர்கள் சேகர்ராஜன், செந்தூர்பாண்டி, முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன் விஜயராஜ், ரஞ்சிதம் ஜெபராஜ், ஜெயராஜ், கோபால், நாராயணசாமி, கனகராஜ், சித்திரை பால்ராஜ், குமார முருகேசன், மரிய செல்வராஜ், வெங்கட சுப்பிரமணியம், மெர்லின் ஜெபசிங், மகேந்திரன், பாக்யராஜ், சீனிவாசன், யேசுபாலன், ராஜரத்தினம், மைக்கேல் பிரபாகர், தாமஸ், ஜோபாய் பச்சே்க், டேவிட் வசந்தகுமார், தாமஸ், ராஜா, கன்னியம்மாள், அம்மாகனி, சவரியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது.
    • கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் ஒன்றிய அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.

    காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க.வின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.
    • தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கான தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சங்கை சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.

    செயல் வீரர்கள் கூட்டத்தில் வாக்குச்சாவடி பணிக்குழு அமைப்பது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த தீர்மானங்களை தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்மொழிந்தார். தீர்மானங்கள் குறித்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், விவசாய அணி இணைச் செயலாளர் நல்ல சேதுபதி கருத்துரை வழங்கினார்.

    கூட்டத்தில் தனுஷ்குமார் எம்.பி., சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன், நகர செயலாளர் அந்தோணிச்சாமி, வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், மதி மாரிமுத்து, பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பகவிநாயகம், ராயகிரி கே.டி.சி. குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்ரமணியன், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிய ராஜா, வெள்ளையப்பன், கிருஷ்ண லீலா, புல்லட் கணேசன், பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடக்கிறது.
    • சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 22-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கு வதற்கான ஒன்றிய, நகர, பேருர் செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

    அதன்படி காலை 10 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தேவகோட்டை நகர், வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டமும், பகல் 12 மணிக்கு காரைக் குடி நகர் தி.மு.க. அலுவல கத்திலும், மாலை 4 மணிக்கு சொர்ணமகாலில் செயல்வீரர்கள் கூட்டம் பொறுப்பாளர் செந்தில் குமார் முன்னிலையில் நடக்கிறது. இதில் சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் முன்னிலையில் காலை 10 மணிக்கு யாதவா திருமண மண்டபத்திலும், 12 மணிக்கு இன்பம் மகாலிலும், மாலை 4 மணிக்கு முத்துகணேஷ் மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

    இதில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், கல்லல், நெற்குப்பை, பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    சிவகங்கை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் யாழினி முன்னிலை யில் காலை 10 மணிக்கு ஆரோ மகாலிலும், 3 மணிக்கு திருப்பத்தூர் ஏ.எம்.கே. மகாலிலும், 4மணிக்கு செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் காளையார் கோவில், நாட்டரசன் கோட்டை, சிவகங்கை, திருப்புவனம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் பார்வையாளர் தினேஷ் முன்னிலையில் திருப்புவனம் மருது பாண்டியர் மண்டபத்தில் காலை 10 மணிக்கும், 4 மணிக்கு இளையான்குடி எம்.எம்.மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார்.
    • 2,500 பேருக்கு தலைக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.

    ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன் தலைமை, தாங்கினார். யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சீனிவாசன், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார். மேலும் தீர்மான உரையாற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வடிவேலு தொகுத்து வழங்கினார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சரவ ணன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை, தலைமை செயற்குழு பரமகுரு, லாலா சங்கரபாண்டியன், பூசைப்பாண்டியன், பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி, வழக்கறிஞர் அணி மருதப்பன், பூமிநாதன், டாக்டர் சுமதி, கடற்கரை, சேர்மதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பெரியதுரை, பேரூர் செயலாளர் ரூபி பாலா, ஆயில்ராஜா பாண்டியன், மருதுபாண்டியன், ஒன்றிய நிர்வாகிகள் பேரூர் பரமசிவன், முனியாண்டி, முத்தையா, மாடசாமி, இராமச்சந்திரன், கந்தவேல், அவைத்தலைவர் துரைராஜ்,

    புல்லட் கணேசன், பிச்சுமணி, கார்த்திக், இளையராஜா, வீரமணி, மணிகண்டன், தங்கப்பாண்டியன், ராயகிரி விவேகானந்தன், மாடசாமி, மைதீன் கனி, விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் ராமராஜ், பெரியாண்டவர், தங்கரத்தினராஜ், நெல்கட்டும் செவல் ஊராட்சி தலைவர் பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சி லர்கள் விமலா மகேந்திரன், செல்வி ஏசுதாஸ், தென்மலை முனியராஜ், அருளாட்சி ஜெயராமன், ராமநாதபுரம் சரஸ்வதி, கூடலூர் அருணா தேவி, தேவிபட்டணம் கிளை செயயலாளர் முருகன், வெள்ளையப்பன், பாறைப் பட்டி கணேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், இருளப்பன், கிருஷ்ண லீலா, முத்துலட்சுமி தங்கராஜ், ராஜலட்சுமி மற்றும் மாநில , மாவட்ட, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் கிளைச்செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்தில், நாளை(1 -ந்தேதி) பிறந்தநாள் காணும் முதல்-அமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். சிவகிரி அரசு தாலுகா மருத்துவமனையினை மேம்படுத்தப்பட்ட பெண்கள் பிரசவ ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாய தோட்டத்தில் சேதங்களை ஏற்படுத்தும் வனவிலங்குகளை அடிவார பகுதிகளுக்கு வரவிடாமல் அதற்கு வேண்டிய சோலார் சிஸ்டங்களை நிறுவ வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசும்போது, முதல்-அமைச்சர் பிறந்த நாளை அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். முதல்-அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவியாக இனிப்பு, பொங்கல், சாக்லேட் வழங்குவதை விட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளை பாதுகாக்கும் வண்ணமாக இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கின்ற தி.மு.க. நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 2,500 பேருக்கு தலைக்கவசம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் செய்திருந்தார்.

    • மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலத்தில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், சாமிநாதன், லதா அதியமான், நகரச் செயலாளர் ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் மதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசபிரபு, நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், இளைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

    அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது, விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களை அனுப்புவது குறித்தும், நிர்வாகிகளிடம் ஆலோ சனை நடத்தினார்.

    விருதுநகர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கப்பலூர் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    தி.மு.க.விற்கு கொள்கை உண்டு. பா.ஜ.க.வுக்கு எந்த கொள்கையும் கிடையாது. நமது கட்சியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு எடுத்துக் கூறினாலே போதும், தொடர்ந்து 25 ஆண்டுகள் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார்.

    ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் இளைஞர்கள் வீதம் 3 தொகுதிக்கு 30 ஆயிரம் உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். இதேபோல மகளிர் அணிகளும் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எந்த வேலையும் கிடையாது. அதனால் தான் அவர் தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். அவர் கூறுவதற்கு எல்லாம் பதில் கூற தேவையில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×