search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
    X

    கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    சிவகிரியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

    • சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.
    • தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கான தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சங்கை சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.

    செயல் வீரர்கள் கூட்டத்தில் வாக்குச்சாவடி பணிக்குழு அமைப்பது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த தீர்மானங்களை தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்மொழிந்தார். தீர்மானங்கள் குறித்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், விவசாய அணி இணைச் செயலாளர் நல்ல சேதுபதி கருத்துரை வழங்கினார்.

    கூட்டத்தில் தனுஷ்குமார் எம்.பி., சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன், நகர செயலாளர் அந்தோணிச்சாமி, வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், மதி மாரிமுத்து, பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பகவிநாயகம், ராயகிரி கே.டி.சி. குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்ரமணியன், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிய ராஜா, வெள்ளையப்பன், கிருஷ்ண லீலா, புல்லட் கணேசன், பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×