search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் வாசுதேவநல்லூர் வடக்கு  ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
    X

    செயல் வீரர்கள் கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம். 

    சிவகிரியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

    • மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார்.
    • 2,500 பேருக்கு தலைக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.

    ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன் தலைமை, தாங்கினார். யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சீனிவாசன், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார். மேலும் தீர்மான உரையாற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வடிவேலு தொகுத்து வழங்கினார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சரவ ணன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை, தலைமை செயற்குழு பரமகுரு, லாலா சங்கரபாண்டியன், பூசைப்பாண்டியன், பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி, வழக்கறிஞர் அணி மருதப்பன், பூமிநாதன், டாக்டர் சுமதி, கடற்கரை, சேர்மதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பெரியதுரை, பேரூர் செயலாளர் ரூபி பாலா, ஆயில்ராஜா பாண்டியன், மருதுபாண்டியன், ஒன்றிய நிர்வாகிகள் பேரூர் பரமசிவன், முனியாண்டி, முத்தையா, மாடசாமி, இராமச்சந்திரன், கந்தவேல், அவைத்தலைவர் துரைராஜ்,

    புல்லட் கணேசன், பிச்சுமணி, கார்த்திக், இளையராஜா, வீரமணி, மணிகண்டன், தங்கப்பாண்டியன், ராயகிரி விவேகானந்தன், மாடசாமி, மைதீன் கனி, விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் ராமராஜ், பெரியாண்டவர், தங்கரத்தினராஜ், நெல்கட்டும் செவல் ஊராட்சி தலைவர் பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சி லர்கள் விமலா மகேந்திரன், செல்வி ஏசுதாஸ், தென்மலை முனியராஜ், அருளாட்சி ஜெயராமன், ராமநாதபுரம் சரஸ்வதி, கூடலூர் அருணா தேவி, தேவிபட்டணம் கிளை செயயலாளர் முருகன், வெள்ளையப்பன், பாறைப் பட்டி கணேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், இருளப்பன், கிருஷ்ண லீலா, முத்துலட்சுமி தங்கராஜ், ராஜலட்சுமி மற்றும் மாநில , மாவட்ட, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் கிளைச்செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்தில், நாளை(1 -ந்தேதி) பிறந்தநாள் காணும் முதல்-அமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். சிவகிரி அரசு தாலுகா மருத்துவமனையினை மேம்படுத்தப்பட்ட பெண்கள் பிரசவ ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விவசாய தோட்டத்தில் சேதங்களை ஏற்படுத்தும் வனவிலங்குகளை அடிவார பகுதிகளுக்கு வரவிடாமல் அதற்கு வேண்டிய சோலார் சிஸ்டங்களை நிறுவ வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசும்போது, முதல்-அமைச்சர் பிறந்த நாளை அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். முதல்-அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவியாக இனிப்பு, பொங்கல், சாக்லேட் வழங்குவதை விட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளை பாதுகாக்கும் வண்ணமாக இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கின்ற தி.மு.க. நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 2,500 பேருக்கு தலைக்கவசம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் செய்திருந்தார்.

    Next Story
    ×