search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்வீரர்கள் கூட்டம்"

    • நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது.
    • இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பந்தலின் முகப்பு தோற்றம் அன்பகம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

      நாமக்கல்:

    சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது.

    பிரமாண்ட பந்தல்

    இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது.

    இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பந்தலின் முகப்பு தோற்றம் அன்பகம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    பந்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இளைஞர் அணியினர் பங்கேற்கும் வகையில் தனித்தனியாக இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பந்தல் முன்பு வாழை மரங்கள், மலர்கள் உள்ளிட்டவற்றால் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    உற்சாக வரவேற்பு

    இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை சீருடையில் பங்கேற்க உள்ளனர். ஈரோட்டில் இருந்து கார் மூலம் வரும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணி அளவில் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்கி மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதேபோல் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போதமலைக்கு, சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை சாலை வசதி செய்யப்படவில்லை. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடும் செய்து உள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில், வெண்ணந்தூர் அருகே தேங்கல்பாளையம் பிரிவு சாலையில் மலைவாழ் மக்களின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பலத்த பாதுகாப்பு

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி பொம்மைக்குட்டை மேடு மற்றும் அவர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
    • தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    செயல்வீரர்கள் கூட்டம்

    அந்த வகையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நாளை (22-ந் தேதி ) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். அதற்காக இன்று இரவு நாமக்கல்லில் இருந்து சேலம் வருகிறார்.

    அமைச்சர் உதயநிதிஸ்டா லினுக்கு மாவட்ட எல்லை யான மல்லூர் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள். தொடர்ந்து சேலம் வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை ( 22 -ந் தேதி) காலை 10 மணியளவில் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் தி.மு.க. இளை ஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் மாவட்ட செயலா ளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பா ளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இளைஞரணி செயல்வீ ரர்கள் கூட்டம் முடிந்ததும், பெத்தநாயக்கன் பாளையத்தில் இளைஞரணி மாநில மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அப்போது மாவட்ட செயலாளர் மற்றும் மாநாட்டு வழிகாட்டு குழுவினருடன் ஆேலாசனை நடத்துகிறார். பின்னர் அவர் காரில் கிருஷ்ணகிரி புறப்பட்டு செல்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி அவர் செல்லும் வழிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது
    • ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மார்த்தாண்டம், நவ.4-

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் பாலூர் தேவா தலைமை தாங்கினார். துணை செயலாளர் துரைராஜ், பொருளாளர் தங்கதுரை, மத்திக்கோடு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜெனோ, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜெப ஜான், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், எஸ்.எம்.கான், மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் நடைபெற இருக்கின்ற முகாம்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து பூத் முகவர்களும் தங்களுடைய பூத்களில் சென்று பணி செய்வதென்றும், நலிவடைந்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    • மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
    • தி.மு.க. வை வெற்றிபெற இப்போது முதலே தொண்டர்கள் அனைவருடன் இணைந்து களப்பணி ஆற்றுவேன் என்று ஜெயபாலன் பேசினார்.

    தென்காசி:

    தென்காசி அருகே இலஞ்சி யில் நடைபெற்ற தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தேர்தலில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இனிவரும் தேர்தல்களில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வை வெற்றிபெற இப்போது முதலே தொண்டர்கள் அனைவருடன் இணைந்து களப்பணி ஆற்றுவேன். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தென்காசி தொகுதியை தி.மு.க. கைப்பற்ற இப்போது முதல் கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடன் இணைந்து உழைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளராக ஜெயபாலனை நியமித்த தி.மு.க. தலைவர், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக ஏற்பட்ட பாலியல் வன்கொ டுமைக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள இளைஞர் அணி மாநாட்டில் தெற்கு மாவட்டம் சார்பாக திரளாக கலந்து கொள்வது, ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் தெற்கு மாவட்டம் சார்பாக திரளாக கலந்து கொள்வது எனவும், தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமையும் என அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் நல்லது நடக்கும். வருகிற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், பொருளாளர் ஷெரிப், துணைச் செயலா ளர்கள் கனிமொழி, தமிழ்ச்செல்வன், கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஜேசுராஜன், ஆறுமுகச்சாமி பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் சாமித்துரை, அருள், ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, ரஹீம், ரவிச்சந்திரன், சேக் தாவூத், சமுத்திரபாண்டி, எழில்வாணன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, அப்துல் காதர் செல்லப்பா, ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், செல்லத்துரை, மாரி வண்ணமுத்து, அன்பழகன், சிவன், பாண்டியன், சீனித்துரை, ஜெயக்குமார், மகேஷ் மாயவன், திவான் ஒலி, ரவிசங்கர், சுரேஷ், தென்காசி நகர்மன்ற தலைவரும், தென்காசி நகர செயலாள ருமான சாதிர், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், அப்பாஸ், பேரூர் செயலாளர்கள் சுடலை, பண்டாரம், ராஜராஜன், வெள்ளத்துரை, தங்கப்பா, லட்சுமணன், ஜெகதீசன், அழகேசன், முத்து, சிதம்பரம், நெல்சன், கோபால், மாவட்ட வக்கீல் அணி வேல்சாமி, மேலகரம் பேரூராட்சிமன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொறியாளர் அணி தங்கபாண்டியன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணராஜா, தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், இலஞ்சி பேரூர் கழகச் செயலாளர் முத்தையா பாண்டியன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மேலகரம் பேரூராட்சிமன்ற தலைவர் வேணி வீரபாண்டி யன், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் சண்முகம் என்ற சேகர், கபில், நாகராஜ்சரவணார், குத்துக்கல்வலசை கிளைச் செயலாளர் காசிகிருஷ்ணன், அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது.
    • கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் ஒன்றிய அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.

    காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க.வின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடக்கிறது.
    • சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 22-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கு வதற்கான ஒன்றிய, நகர, பேருர் செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

    அதன்படி காலை 10 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தேவகோட்டை நகர், வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டமும், பகல் 12 மணிக்கு காரைக் குடி நகர் தி.மு.க. அலுவல கத்திலும், மாலை 4 மணிக்கு சொர்ணமகாலில் செயல்வீரர்கள் கூட்டம் பொறுப்பாளர் செந்தில் குமார் முன்னிலையில் நடக்கிறது. இதில் சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் முன்னிலையில் காலை 10 மணிக்கு யாதவா திருமண மண்டபத்திலும், 12 மணிக்கு இன்பம் மகாலிலும், மாலை 4 மணிக்கு முத்துகணேஷ் மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

    இதில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், கல்லல், நெற்குப்பை, பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    சிவகங்கை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் யாழினி முன்னிலை யில் காலை 10 மணிக்கு ஆரோ மகாலிலும், 3 மணிக்கு திருப்பத்தூர் ஏ.எம்.கே. மகாலிலும், 4மணிக்கு செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் காளையார் கோவில், நாட்டரசன் கோட்டை, சிவகங்கை, திருப்புவனம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.

    மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் பார்வையாளர் தினேஷ் முன்னிலையில் திருப்புவனம் மருது பாண்டியர் மண்டபத்தில் காலை 10 மணிக்கும், 4 மணிக்கு இளையான்குடி எம்.எம்.மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடந்தது.
    • கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (26-ந் தேதி) மாலை 3.30 மணி அளவில் ராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் மகாலில் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    • உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர்
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    அவைத்தலைவர் ரவி (எ) இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

    தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சி.கே. அன்பு, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாளின் நூற்றாண்டு நிறைவு விழாவை கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை சேர்ப்பது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.

    மாவட்ட துணை செயலாளர் செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.பெ.கிரி கலந்துகொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், செயல்படுவது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.

    முன்னதாக, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள், மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் திருவுருவப்படங்களுக்கு மாலைகள் அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

    இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி குப்புசாமி தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய துணை செயலா ளர்கள் சிவக்குமார், பரசுராமன், செல்வமணி, பொருளாளர் சுப்பராயன், மாவட்ட பிரதிநிதிகள் தேவேந்திரன், இளங்கோ, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மகளிர்குழு அணி நித்தியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீழ்பென்னாத்தூர் ஒன்றிய துணை செயலாளர் சோமாஸ்பாடி சிவக்குமார் நன்றி கூறினார்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
    • அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.


    உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ. பேசினார். அருகில் நிர்வாகிகள் பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு, வேலுச்சாமி, ஜெயராம், அக்ரி.கணேசன், ஒச்சுபாலு, தனசெல்வம் உள்ளனர்.

    ..........................

    மதுரை

    மதுரையில் வருகிற 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளாம் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இந்த விழாவை தென் மாவட்டமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டி கோவில் பின்புறம், மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரா ட்சிக்கழக செயலாளர்கள், தொண்டர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இந்து முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார். கோவை கோட்ட பொறுப்பாளர் அருண்குமார், மாநில செயலாளர் கே.அரிகிருஷ்ணன், மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வக்கீல் கே.கோபிநாத், மாநில பொது செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு இந்து முன்னேற்ற கழக அமைப்பை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கவும், திருப்பூரில் இந்து கோவில்கள், இந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உதவுதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. முடிவில் மாநில இளைஞரணி தலைவர் தாமோதரன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
    • சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    ஊட்டி 

    மீன் பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை மத்திய இணை மந்திரி சஞ்சீவ் பல்யான் நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    நான் தற்போது தான் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.1,565 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் மத்திய அரசின் நிதி ஆகும்.

    இதேபோல் மத்திய அரசு நிதி மூலம் சென்னையில் கடல்வாழ் தாவரங்களுக்காக புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது ஒரு லட்சத்து 75 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகும். மக்கள் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உழைப்பதால், அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    படுகர் இன மக்களை எஸ்.டி. பிரிவில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி தேயிலை விலை குறைவாக இருப்பதால் பாதுகாப்பு துறை மூலம் தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் செக்சன் பிரிவு பகுதியில் உள்ள 7000 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, கழிப்பறை, கியாஸ் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே இந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாக ஆலோசனை கூட்டத்தில்மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி, குமார், மண்டல தலைவர் பிரவீன், மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், கார்த்தி, ராஜேந்திரன், மற்றும் கதிர்வேல், பாலகுமார், முருகேசன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலத்தில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், சாமிநாதன், லதா அதியமான், நகரச் செயலாளர் ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் மதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசபிரபு, நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், இளைஞரணி முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

    அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது, விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களை அனுப்புவது குறித்தும், நிர்வாகிகளிடம் ஆலோ சனை நடத்தினார்.

    விருதுநகர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கப்பலூர் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    தி.மு.க.விற்கு கொள்கை உண்டு. பா.ஜ.க.வுக்கு எந்த கொள்கையும் கிடையாது. நமது கட்சியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு எடுத்துக் கூறினாலே போதும், தொடர்ந்து 25 ஆண்டுகள் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார்.

    ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் இளைஞர்கள் வீதம் 3 தொகுதிக்கு 30 ஆயிரம் உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். இதேபோல மகளிர் அணிகளும் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எந்த வேலையும் கிடையாது. அதனால் தான் அவர் தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். அவர் கூறுவதற்கு எல்லாம் பதில் கூற தேவையில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×