என் மலர்
நீங்கள் தேடியது "செயல்வீரர்கள் கூட்டம்"
- அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான் என்று விஜய் தெரிவித்தார்.
- சிபிஐ விசாரணை நெருக்கடி குறித்து விஜய் இவ்வாறு தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விஜய், "அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்" என்று தெரிவித்தார்.
ஜனநாயகம் சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை நெருக்கடி குறித்து விஜய் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில், திருச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "ஒரு நடிகர் இப்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இன்றையைக்கு அவருடைய செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறபோது, 'அழுத்தத்திற்கு நான் ஒருபோதும் பயப்படமாட்டேன்' என்று வீரவசனம் பேசியிருக்கிறார். அவர் எப்படி ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு சினிமா படம் வெளியாகாமல் போனதற்காக அவரும் அவரது தந்தையும் முதலமைச்சரிடம் கைகட்டி நின்றி என்றைக்கும் நான் உங்களுக்கு எதிரி இல்லை என்றெல்லாம் சொல்லி... அழுத்தத்திற்கு பயந்து கைகட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்" என்று தெரிவித்தார்.
- அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன்.
- தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்.
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் கூறியதாவது:
* தி.மு.க.வுக்கு முன்னாடி தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பா.ஜ.க. அடிமையாக தான் இருக்கிறார்கள்.
* பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மறைமுகமாக சரண்டர் ஆகி உள்ளது.
* த.வெ.க. வந்த பிறகு ஊழல் செய்ய மாட்டேன். செய்யவும் விட மாட்டேன்.
* அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்.
* அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன். மக்கள் அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள்.
* தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
* தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது.
* அண்ணா ஆரம்பித்த கட்சியும், அண்ணாவின் பெயரைக்கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்து விட்டன.
* அடங்கிப் போவதற்கோ, அடிமையாக இருப்பதற்கோ, அண்டி பிழைப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை.
* அரசியல் பயணத்தில் முக்கியமான கால கட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினர் இருக்கிறோம்.
* தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்.
* மக்களை பாதுகாக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்ய மாட்டோம்.
* 30 ஆண்டுகளாக நம்மை குறைத்து மதிப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் குணம் ஒரு போதும் மாறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டைப் போல தாய்மொழியைக் காப்பதற்கான ஒரு போர் உலகில் வேரெந்த தேசத்திலும் நடந்தது இல்லை.
- செந்தமிழைக் காக்கும் சேனை மீண்டும் தேவைப்பட்டால் தவெக தரும். தவெக தலைவர் விஜய் தருவார்.
சாதி, மதம் மனிதனை ஒன்றிணைக்காது; மொழிதான் மனிதனை ஒன்றிணைக்கும் என தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவு கூர்ந்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் வரலாற்று உரையை நாஞ்சில் சம்பத் நிகழ்த்தினார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
மொழிக்காக தீக்குளித்த மரபு தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உடைய போர் இந்த போர். நாங்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கி றோம். இந்தி என்கிற மொழியை எதிர்க்கவில்லை. இந்தி அநீதியின் சின்னம், ஆதிக்கத்தின் சின்னம், மதத்தின் சின்னம், மனு தர்மத்தின் சின்னம், பிரிவி னையின் சின்னம். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். என்னுடைய தமிழ் மொழி யின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு உன்னு டைய மொழிக்கு எந்த தகுதியும் இல்லை.
செந்தமிழ் காக்க சேனை ஒன்று தேவை என்று பாரதி தாசன் பாடினார். செந்தமிழ் காக்க இனி ஒரு சேனை தேவைப்படுமானால் அந்த சேனையை தருகிற இயக்கம் விஜய்யின் வெற்றிக் கழகம்தான். அந்த சேனை எங்களிடம்தான் இருக்கிறது.
நீங்கள் இந்தியை எதிர்ப்ப தாக நாடகம் போடுகிறீர்கள். 40 எம்.பி.க்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். டெல்லி யுடன் யுத்தம் செய்ய, டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்குகிற படைக்கலன்தான் ஒரு எம்.பி. அந்த கடமையை செய் தீர்களா? நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்கள் நாடகம் முடிவுக்கு வரப் போகிறது.
துரியோதனின் வீழ்ச்சி அவன் தொடையில் இருந்தது. அதிசயம் ஆயிரம் செய்த ஜப்பானின் அன்றைய வீழ்ச்சி அணு குண்டில் இருந்தது.
ஒரு வல்லாதிக்கத்தின் வீழ்ச்சி அண்ணாவின் செந்நாவில் இருந்தது. உய்ய வந்த தமிழினத்தை உய்யாது தடுத்து குடும்ப புற்றில் குடியிருக்கும் பூநாகங்களின் வீழ்ச்சி விஜய்யின் கையில் இருக்கிறது என்பதை வருகிற காலத்தில் எழுதுவதற்கு நாம் மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளில் சூளுரைப்போம். வருகிற காலம் நம் காலம். எத்தனை தடைகளை போட்டாலும் தகர்த்து முன்னேறுவோம்.
நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. தேதிகள் கிழிபட உடன்படாவிட்டா லும் நாளை நடக்கும். நாளை விஜய் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது.
விஜய் பேசாமல் இருக்கி றார், ஆனால் விஜய்யை பற்றித்தான் எல்ேலாரும் பேசுகிறார்கள். இப்படி ஒரு வரலாறு எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் எங்கேயும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- த.வெ.க. நிர்வாகிகள் காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
- மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் கடந்த 22-ந்தேதி 'விசில் சின்னம்' ஒதுக்கியது. இதனால் த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறுகிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் இன்று காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் காலை 9.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது. மேடையில் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் த.வெ.க. கொள்கை பாடல் இசைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
- 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார்.
- செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகள் விசிலுடன் வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.
38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தலையொட்டி த.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியது. இது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகள் விசிலுடன் வந்தனர். அவர்கள் அரங்கமே அதிர.. விசில் ஊதி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.
- 38 நாட்கள் கழித்து அரசியல் பேச விஜய் தயாராகிறார் என கூறப்படுகிறது.
- கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு 38 நாட்கள் கழித்து அரசியல் பேச விஜய் தயாராகிறார் என கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை.
இந்நிலையி், சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் ஜனவரி 25ம் தேதியில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இந்து முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார். கோவை கோட்ட பொறுப்பாளர் அருண்குமார், மாநில செயலாளர் கே.அரிகிருஷ்ணன், மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வக்கீல் கே.கோபிநாத், மாநில பொது செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு இந்து முன்னேற்ற கழக அமைப்பை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கவும், திருப்பூரில் இந்து கோவில்கள், இந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உதவுதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. முடிவில் மாநில இளைஞரணி தலைவர் தாமோதரன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
- அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ. பேசினார். அருகில் நிர்வாகிகள் பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு, வேலுச்சாமி, ஜெயராம், அக்ரி.கணேசன், ஒச்சுபாலு, தனசெல்வம் உள்ளனர்.
..........................
மதுரை
மதுரையில் வருகிற 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளாம் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவை தென் மாவட்டமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டி கோவில் பின்புறம், மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரா ட்சிக்கழக செயலாளர்கள், தொண்டர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர்
- 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அவைத்தலைவர் ரவி (எ) இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சி.கே. அன்பு, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாளின் நூற்றாண்டு நிறைவு விழாவை கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை சேர்ப்பது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.
மாவட்ட துணை செயலாளர் செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.பெ.கிரி கலந்துகொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், செயல்படுவது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.
முன்னதாக, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள், மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் திருவுருவப்படங்களுக்கு மாலைகள் அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி குப்புசாமி தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய துணை செயலா ளர்கள் சிவக்குமார், பரசுராமன், செல்வமணி, பொருளாளர் சுப்பராயன், மாவட்ட பிரதிநிதிகள் தேவேந்திரன், இளங்கோ, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மகளிர்குழு அணி நித்தியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீழ்பென்னாத்தூர் ஒன்றிய துணை செயலாளர் சோமாஸ்பாடி சிவக்குமார் நன்றி கூறினார்.
- தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடந்தது.
- கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (26-ந் தேதி) மாலை 3.30 மணி அளவில் ராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் மகாலில் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் கருணாநிதி நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, சார்பு அணி மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடக்கிறது.
- சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கடந்த 22-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கு வதற்கான ஒன்றிய, நகர, பேருர் செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
அதன்படி காலை 10 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தேவகோட்டை நகர், வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டமும், பகல் 12 மணிக்கு காரைக் குடி நகர் தி.மு.க. அலுவல கத்திலும், மாலை 4 மணிக்கு சொர்ணமகாலில் செயல்வீரர்கள் கூட்டம் பொறுப்பாளர் செந்தில் குமார் முன்னிலையில் நடக்கிறது. இதில் சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் முன்னிலையில் காலை 10 மணிக்கு யாதவா திருமண மண்டபத்திலும், 12 மணிக்கு இன்பம் மகாலிலும், மாலை 4 மணிக்கு முத்துகணேஷ் மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.
இதில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், கல்லல், நெற்குப்பை, பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
சிவகங்கை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் யாழினி முன்னிலை யில் காலை 10 மணிக்கு ஆரோ மகாலிலும், 3 மணிக்கு திருப்பத்தூர் ஏ.எம்.கே. மகாலிலும், 4மணிக்கு செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் காளையார் கோவில், நாட்டரசன் கோட்டை, சிவகங்கை, திருப்புவனம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் பார்வையாளர் தினேஷ் முன்னிலையில் திருப்புவனம் மருது பாண்டியர் மண்டபத்தில் காலை 10 மணிக்கும், 4 மணிக்கு இளையான்குடி எம்.எம்.மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது.
- கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
காங்கயம் :
காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் ஒன்றிய அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.
காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க.வின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






