search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GROUP OF ACTIVISTS"

    • கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இந்து முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார். கோவை கோட்ட பொறுப்பாளர் அருண்குமார், மாநில செயலாளர் கே.அரிகிருஷ்ணன், மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வக்கீல் கே.கோபிநாத், மாநில பொது செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு இந்து முன்னேற்ற கழக அமைப்பை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கவும், திருப்பூரில் இந்து கோவில்கள், இந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உதவுதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. முடிவில் மாநில இளைஞரணி தலைவர் தாமோதரன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • அரியலூர் அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்த்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, அ.தி.மு.க. 51 வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியினை ஏற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் மற்றும் ஒன்றிய, நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    ×