search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Papanasam Dam"

    • பாபநாசம் அணையில் கடந்த மாதம் தொடக்கத்தில் 20 அடிக்கும் கீழாக தண்ணீர் சென்றது.
    • அணைக்கு வினாடிக்கு 1057 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிங்கை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிட்டத்தக்க அளவு பெய்யாமல் போய்விட்டது. ஆனாலும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழையால் குடிநீர் பற்றாக்குறை அபாயத்தில் இருந்து இந்த 2 மாவட்ட மக்களும் தப்பி விட்டனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் கடந்த மாதம் தொடக்கத்தில் 20 அடிக்கும் கீழாக தண்ணீர் சென்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் அணை நீர்இருப்பு உயர்ந்து நிரம்பிவிடும் என்று நம்பியிருந்த விவசாயிகளுக்கு மழை மிகவும் ஏமாற்றம் அளித்துவிட்டது.

    எனினும் தற்போது ஓரளவுக்கு பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டிவிட்டது. இதனால் கார் பருவ சாகுபடி க்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 70.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1057 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 704.75 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    நேற்று முதல் அணை பகுதிகளில் மழை பெய்ய வில்லை. அதே நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.29 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.15 அடியாகவும் உள்ளது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. அடவிநயினார் மற்றும் குண்டாறு அணை பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினாரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆய்குடியில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    • பாபநாசம் அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.
    • இன்று முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. இந்த அணை யில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

    மொத்தம் 143 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் 5,500 கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது குறைந்தபட்சம் 60 அடி வரை அணையில் நீர்மட்டம் இருந்தால் பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவு பெய்யாவிட்டாலும், ஓரளவு பெய்த மழையின் காரணமாக இன்றைய நிலவரப்படி 70.90 அடியாக உள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது வரை திறக்கப்படாததால் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை பாசனத்திற்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

    கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், கன்னடியன் மற்றும் நதியுண்ணி கால்வாய்களில் நீரானது இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த நீரானது இன்று தொடங்கி வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை மொத்தம் 105 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. கார் சாகுபடி, குடிநீர் தேவைக்கென மொத்தம் 3015 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பொதுப்ப ணித்துறை செயற்பொ றியாளர் மாரியப்பன், தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், பேச்சிமுத்து அவர்கள், வி.கே. புரம் நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் நகராட்சி சேர்மன் பிரபாகர பாண்டியன், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பி.சி. ராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், பாஸ்கர், அருண் தவசு பாண்டியன், உதவி பொறியாளர்கள் மகேஸ்வரன், ஜெயகணேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மணிமுத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு குற்றால அருவிகளுக்கும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில நேரங்களில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    நேற்றும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 49.2 மில்லிமீட்டரும், அடவி நயினார் பகுதியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    இதேபோல் கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, சிவகிரி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்கனவே 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

    நேற்று 66 அடியாக இருந்து அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 5 அடி உயர்ந்து 71 அடியாகவும், நேற்று 50 அடியாக இருந்த ராமநதி நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று 54 அடியாகவும், 45 அடியாக இருந்த கடனாநதி நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 49 அடியாகவும், 32 அடியாக இருந்த கருப்பாநதி நீர்மட்டம் ஒரு அடியாக உயர்ந்து இன்று 33 அடியாகவும் உள்ளது.

    இன்று அதிகாலை முதலே தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

    இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய 5 வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் துரைரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், கொண்டாநகரம், சுத்தமல்லி, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    மாநகரில் இன்று காலை பெய்த சாரல் மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மழையில் குடைபிடித்து சென்றனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 143 அடி கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 53.50 அடியாக இருந்தது.

    இன்று மேலும் 6 அடி உயர்ந்து 59.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 3,299.375 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 438.50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர் மட்டம் நேற்று 90 அடியாக இருந்த நிலையில் 2 அடி உயர்ந்து இன்று 92.10 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.94 அடியாக உள்ளது.

    • அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

    நெல்லை:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் தற்போது வரை சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது வீசி வருவதால் இதமான சூழ்நிலை விலவி வருகிறது.

    இதேபோல் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் நிலையில், புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ராமநதி அணை பகுதியில் கனமழை பெய்தது. நேற்று 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி அதிகரித்து இன்று 33 அடியாக உயர்ந்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் 26.50 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 28.50 அடியாக உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 25.25 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்தது. தொடர் மழையால் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 49 அடியாக உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 30 மில்லிமீட்டரும், ராமநதி, கடனா நதியில் தலா 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்த நிலையில், இன்று 3 அடி உயர்ந்து 44.20 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 56.76 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 65.09 அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது பெய்துவரும் சாரல் மழை விவசாயத்திற்கு கை கொடுக்காவிட்டாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    அதேநேரத்தில் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பார்கள். ஆனால் போதிய மழை இல்லாததால் 1 மாதம் தாமதமாகி விட்டது. எனவே மழை தீவிரம் அடைந்தால் இந்த மாதத்திலாவது பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சாலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநகரில் லேசான சாரல் பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் குடைபிடித்தபடி சென்றனர்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது.
    • தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் வறட்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

    வழக்கமாக மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 814 மில்லிமீட்டர் ஆகும். இந்த மாதம் வரை 181 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் சுமார் 72 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதிலும் சுமார் 10 அடி வரையிலும் சகதி தான் இருக்கும் என்பதால் வறட்சியின் பிடியில் அணை சிக்கியுள்ளது. தற்போது அணையானது குட்டை போல் காட்சியளிக்கிறது.

    தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 73.40 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் மொத்தம் 5,511 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும்.

    ஆனால் இன்று நிலவரப்படி அந்த அணையில் 1756 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

    • கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது.
    • தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    சிங்கை:

    தென்தமிழகத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது தாமிரபரணி நதியாகும். தன்பொருநை என்று அழைக்கப்படும் இந்த நதியானது பொதிகை மலையில் உற்பத்தியாகி சுமார் 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    இந்த நதியின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய பணிகள் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இதன் குறுக்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு தென்தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக உள்ளது.

    143 அடி உயரத்துடன் 5500 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டு 1943-ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அணைக்கட்டு மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் தாமிரபரணி நதியில் பல்வேறு இடங்களில் உறைகிணறுகள் அமைத்து அதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவாக 13.65 அடியாக ஆனது. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழ் குறைந்தது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழையின்றி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதற்கிடையே அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

    தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பொய்த்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்யும் வரை அணையில் நீர் வரத்துக்கு வழியில்லாததால் அணையின் நீர் மட்டம் உயர வழியில்லை. இனி தென்மேற்கு பருவமழை ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் தான் இருக்கும்.

    ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இயல்பான மழை அளவை விட பாதி அளவிற்கும் கீழாகவே மழை பெய்துள்ளது.

    மார்ச் 1 முதல் இன்று வரையில் நெல்லை மாவட்டம் சராசரியாக வெறும் 30 மில்லிமீட்டர் அளவிலான மழையையே பெற்றுள்ளது. இது இயல்பை விட 58 சதவீதம் அளவுக்கு குறைவு தான்.

    இனி 2 மாதத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அணையின் நீர்மட்டமும் ஒற்றை இலக்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
    • பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய பிரதான அணையாக பாபநாசம் அணை விளங்குகிறது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் மூலமாக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

    மழை குறைவு

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள 692 கால்வரத்து குளங்கள், 404 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் உள்ள 1,096 குளங்கள் உள்ளன. இதன் மூலமும் விவசாயம் நடைபெறும். இந்நிலையில் மழைகுறைவால் இவற்றில் பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டுவிட்டன.

    வழக்கமாக மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 814.8 மில்லிமீடடர் இயல்பாக மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு இயல்பைவிட குறைவாக அதாவது 722.32 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்திருந்தது. தற்போது கடந்த 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இயல்பைவிட 48.32 சதவீதம் குறைந்துள்ளது.

    38 அடியானது

    இதன்காரணமாக அணைகள் மற்றும் குளங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு, பச்சையாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12 ஆயிரத்து 882 மில்லியன் கனஅடியாகும். தற்போது அவற்றில் நீரின் இருப்பு 2 ஆயிரம் மில்லியன் கனஅடியை நெருங்கிவிட்டது.

    பாபநாசம் அணையில் 5,500 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கமுடியும். ஆனால் தற்போது அணையில் 522 மில்லியன் கனஅடிநீர் மட்டுமே இருக்கிறது. அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்துவிட்டது. பெரும்பாலும் 15 அடி வரை சகதி இருக்கும் என்ற நிலையில், இன்னும் 20 அடி வரை மட்டுமே அணையில் நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
    • மாஞ்சோலை பகுதியில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் 300 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று 2000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,029 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 90 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 96.70 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 807 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 11.8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை கடந்த நிலையில் இன்று மேலும் 8 அடி உயர்ந்து 108.07 அடியானது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 90.40 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 70 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து 801 கனஅடியாக அதிகரித்துள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மாஞ்சோலை பகுதியில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தை பொறுத்தவரை கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. அம்பையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. ராதாபுரம் தாலுகாவில் பலத்தமழை பெய்தது. இன்று காலையில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று பெய்த மழையினால் ஒருசில இடங்களில் சாலையில் தேங்கிய தண்ணீர் வடியாமல் உள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறி உள்ளது. அவற்றை தற்காலிகமாக சீரமைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    அங்குள்ள மெயினருவி, பழையகுற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தை தூரத்தில் நின்றபடி ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ள தால் அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லிமீட்டரும், குண்டாறில் 18.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணமாக கடனா அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 79.25 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணையில் 34.50 அடி நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
    • பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98.60 அடியை எட்டி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீவிரமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை கடந்த 3 நாட்களாக குறைந்து விட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடிக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் லேசான சாரல் பெய்கிறது. எனினும் இதுவரை பெய்த மழையால் பெரும்பாலான குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை தொடங்கி உள்ளனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை தொடர்மழை பெய்ததன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஆனால் தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 98.60 அடியை எட்டி உள்ளது.

    அந்த அணைக்கு வினாடிக்கு 998.73 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்றும் ஒருசில நாட்களில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 85 அடி வரை நீர் இருப்பு இருந்தாலே விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்துவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அணை பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயர தொடங்கி உள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 2 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்துள்ளது.

    இதனால் அணை நீர்மட்டம் 83.45 அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 96.23 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1197.45 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 404.75 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாநகர பகுதியில் சில இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 2.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மொத்தம் 36.10 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 99.50 அடி நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக இன்று காலை முதலே அருவிக்கரைகளில் குவிந்தனர்.

    நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார்சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து ஆண்டுேதாறும் கார், பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கார் சாகுபடியையொட்டி வழக்கம்போல் கடந்த 1-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை சபாநாயகர் அப்பாவு இயக்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், இசக்கி சுப்பையா மற்றும் பலர் உள்ளனர்.
    தற்போது அணையின் நீர்மட்டம் 71.55 அடியாக இருப்பதால், இன்று முதல் விவசாயிகளின் நலன் கருதி அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சபாநாயகர் அப்பாவு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து கார்சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பாபநாசம் அணையில் 135 அடி தண்ணீர் இருந்தது.

    இதனால் ஜூன்1-ம் தேதி திறந்து விடப்பட்டது. தற்போது 71 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. எனினும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும் என்பதால் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக்ெகாள்ள வேண்டும். நெல், நாற்று உற்பத்தி செய்ய இன்று முதல் 20 நாட்களுக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்பின்னர் நீர் இருப்பை பொறுத்து தேவையான அளவு தண்ணீர் திறந்து விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், இசக்கி சுப்பையா, மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரினால் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 2,260 ஏக்கரும், தெற்கு கோடைமேலழகியான் கால்வாயில் 870 ஏக்கரும், நதியுண்ணி கால்வாயில் 2460 ஏக்கரும், கன்னடியன் கால்வாய் மூலம் 12,500 ஏக்கரும், கோடகன் கால்வாய் மூலம் 6000 ஏக்கரும், பாளையங்கால்வாய் மூலம் 6200 ஏக்கரும், நெல்லை கால்வாய் மூலம் 2525 ஏக்கரும் பாசன வசதி பெறும்.

     மொத்தம் 32,815 ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாகவும்,. மறைமுகமாகவும் பயன் பெறும் என்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று முதல் வருகிற அக்டோபர் மாதம் 12-ந்தேதி வரை நீர் இருப்பை பொறுத்து 132 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.
    விவசாயிகள் நலன் கருதி பாபநாசம் அணையில் இருந்து 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் பகுதி முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம்  கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் பகுதி முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

     பாபநாசம் காரையார் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி சாகுபடிக்காக  தண்ணீர் திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். இந்த கால்வாய் மூலமாக வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம் வரையில் சுமார் 12,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் .

    தற்போது பாபநாசம் அணையில் 60 அடிக்கு மேலாக நீர் இருப்பு உள்ளதால் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் கன்னடியன் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனை தண்ணீர் திறப்பதற்கு முன்பு தூர்வாரி சீரமைக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    மேலப்பாளையத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து அம்பை செல்லும் சாலையில் பெரும்பாலான கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

     இதுதவிர விளம்பர பதாகைகள், சிமெண்ட் தளம் உள்ளிட்டவையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
    ×