search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palm seeds"

    • பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விழாவில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னமாரிமுத்து, வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வமணி, சுமதி இம்மானுவேல், செந்தூர்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், துணை அமைப்பாளர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் பால்பாண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித்குமார், வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனா மேரி, ஒன்றிய துணை செயலாளர் புனிதா, ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன், மீனவர் அணி துணை அமைப்பாளர் மரியசிங்கம், தொண்டரணி துணை அமைப்பாளர் சிம்மராசி, கிளை செயலாளர்கள் ராஜபாக்கியம், நல்லமுத்து, சரவணன், கண்ணன், முனியசாமி, அழகர்சாமி, ஆதிநாராயணன், சேவியர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்பப்பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பனை விதைகள் நடும் தொடக்க விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
    • நிர்வாகிகள், உறுப்பினர்கள்‌ திரளாக கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பை யூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரி யம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி, சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாரா யணன் வழிகாட்டுதலின் படி பனை விதை நடும் விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வ நாதன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், பனைமர வாரிய ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கலா கணேசன்,

    சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் பி.ஜி.ஜெகன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முரு கன், சாயல்குடி பேரூர் கழக செயலாளர் ஜெயபால், நகர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் குலாம் மைதீன், ஆப்பனூர் ஆறுமுக வேல், கோவிந்தராஜ், அண்ணாமலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநி திகள், பனைமர தொழிலா ளர் நலவாரியம் சார்ந்தோர், மற்றும் பொதுமக்கள், தமிழ் நாடு நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • திருத்துறைப்பூண்டியில் 1 லட்சம் பனைவிதைகள் நடும் பணி தொடங்க உள்ளது.
    • பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார், முசிறி விதை யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் பணி இந்த வாரம் இறுதியில் (செப்டம்பர்) தொடங்க உள்ளது.

    இதற்காக பனை விதைகள் சேகரிப்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த பணியை சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    பணிகள் முடிந்த பிறகு நெடுஞ்சாலைகள், ஆற்றங்கரைகள், குளம், வாய்க்கால், ஓடை, பள்ளி, கல்லூரி, கோவில் வளாகங்க ளில் பனை விதைகள் நடும்பணி தொடங்கும்.

    இப்பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சேவை அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    இப்பணி முழுக்க மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டபம் அருகே மானாங்குடியில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.

    காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பனை மர விதைகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முஹமது சலாவுதீன், மாவட்ட தலைவர் ராஜ கோபால், துணை தலைவர் பத்ம நாபன், ராமநாதபுரம் நக ராட்சி தலைவர் கார்மே கம், துணை தலைவர் பிர வீன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், இருமேனி ஊராட்சி தலை வர் சிவக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன், ராம நாதபுரம் நகராட்சி கவுன்சி லர் ஜஹாங்கீர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அதைதொடர்ந்து மானாங்குடி ஊராட்சி நாக நாதர்கோவில்- சின்னுடை யார்வலசை வரை ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையை மக்கள் பயன் பாட்டிற்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன், துணை தலைவர் புஷ்பம் மேகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்குமார், உஷா நந்தினி, ரஞ்சிதம், ஜோதி, நித்யா, ஊராட்சி செயலர் கருணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கல்லணை கால்வாய் கரைகளில் தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனைமர விதைகள் நடும்விழா நடை பெற்றது.
    • கலெக்டர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டு 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் லயன் வெங்கடேசனின் இளைய மகள் நிர்மலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை ரெட்டிப்பாளையம், முருகன் நகரில் உள்ள கல்லணை கால்வாய் கரைகளில் தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனைமர விதைகள் நடும்விழா வசந்தம் லயன்ஸ் சங்க தலைவர் லயன் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 ஆயிரம் பனை விதைகள்

    நடும் விழாவை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு 1,00,00,000 பனை விதை நடுதல் திட்டத்திற்காக நமது சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 10 ஆயிரம் பனை விதைகளை பெற்றுக்கொண்டார்.

    விழாவில் வட்டார தலைவர் லயன் அன்பழகன், கிறிஸ்துமஸ் விழா மாவட்ட தலைவர் லயன் ஸ்டீபன், மண்டல ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் பால்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குனர் (நடவு பொருள்) கனிமொழி, மேலவெளி ஊராட்சி தலைவர் லதா செந்தில்குமார், செயலாளர் லயன் சீனிவாசன், பொருளாளா லயன் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் லயன் வடிவேலன், செயற்குழு உறுப்பினர்கள் லயன் அழகிய மணவாளன், லயன் வில்லியம் ஸ்டீபன்சன், லயன் பிரகாஷ், லயன் அப்துல்லா, லயன் உலகநாதன், லயன் ஹரி பிரசாத், ஊராட்சி நிர்வாகிகள் மற்றம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சேவைக்கு தனது ஒரு மாத ஊதியத்தை சேவை நிதியாக வழங்கிய முன்னாள் தலைவர் லயன் வெங்கடேசனின் மகள் நிர்மலாவை பாராட்டி சங்கத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    • 1,001 பனை விதைகளை நட்டனர்
    • பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி குரும்பர் குளக்கரைகளில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் 1,001 பனை விதைகள் நடப்பட்டன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் மரமும், மனிதனும் அமைப்பை சேர்ந்த, மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் முகம்மது ஆஸிம், ஊர் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு 1,001 பனை விதைகளை நட்டனர்.

    • சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.
    • பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன் முன்னிலையில் வாழப்பாடி அரிமா சங்க பட்டய தலை வர் சந்திரசேகரன், வட்டார தலைவர் ஜவஹர் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, பன்னீர்செல்வன், கலைஞர்புகழ், சிவ.எம்கோ, அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு, செயலர் இந்திரா காந்தி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தனர்.

    பனை விதைகளை நடவு செய்த தோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்து பனை மரத் தோப்பை உருவாக்குவதென, ஊராட்சி மன்ற தலைவர் பால சுப்பிரமணியம், செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொது மக்கள் உறுதியேற்றனர். பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.

    • செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 24-ந்தேதி என்எஸ்எஸ் தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோடியாக பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் டி சிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், எலைட் பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்கள், கிரீன்நீடா அமைப்பினர்கள் கலந்து கொண்டு 1லட்சம் அளவிலான பனை விதைகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சேகரித்தனர். நிகழ்ச்சியில் எலைட் பள்ளி தாளாளர் ஜெபாஸ்டின்

    பனைமர தோட்ட உரிமையாளர் அகிலன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணன், முனிஸ்வரன், தங்கமுத்து, ஜெபராஜ்டேவிட், சீனிவாசன், ராஜேஷ், மோகன்ராஜ், தாஸ், சதீஷ், ரமேஷ், சங்கர பாண்டியன், வேல்முருகன், சண்முகசுந்தரம், சுடலை மணி, பாக்கியராஜ், ஆனந்த லிங்கம், சஞ்சீவராஜன், மகளிர் அணி கல்பனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி, அனிதா, ராஜேஸ்வரி கிரீன்நீடா அமைப்பின் சந்தான கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 25,000 பனை விதைகள் ஏரி, குளங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் நடப்பட்டது.
    • 10,000 எண்ணிக்கையில் மேற்படி மர கன்றுகள் நடப்பட்டது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தில் பனை மர விதைகள் நடுப்பணி நடைபெற்றது. இப்பணியயினை திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தாய்த் திருநாட்டின் சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்வுகளைத் தொடர்ந்து என் மண் - எனது தேசம் என்ற சிறப்பு விழிப்புணர்வு திட்ட செயலாக்கத்தின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுமார் 25,000 பனை விதைகள் ஏரி, குளங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் நடப்பட்டது.

    மேலும் பலன் தரும் மரக்கன்றுகள் (நாவல், இலுப்பை, புங்கண், மகாகனி, நெல்லி, வேம்பு, புளியங்கன்று, தென்னங் கன்று மேலும் பல வகை பலன் தரும் மரக்கன்றுகள்) சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாத்து மழை வளத்தை பெருக்கும் நோக்கத்துடனும் 10,000 எண்ணிக்கையில் மேற்படி மர கன்றுகள் நடப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகி நடன சிகாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா வீரன், துணைத் தலைவர் பவானி மகாலிங்கம் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது.
    • உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம்

    கடலூர்:

    பனை மேம்பாட்டு இயக்க திட்டம் 2023-–24 ஆம் ஆண்டின் கீழ் விக்கிரவாண்டி பகுதிகளில் 2300 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது. அதன்படி கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரியில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம் என்று உதவி இயக்குனர் ஜெய்சன் கூறினார்.

    • தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தினரும், நாடார் பேரவை நிர்வாகிகளும் சமூக அமைப்புகள், பொது மக்களுடன் சேர்ந்து பனை விதைகளை நடுவதற்கு பாடுபட வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடை பெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் நாடார், பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்

    இதில் நாடார் பேரவை பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகர செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், காமராஜ், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் இந்தாண்டு தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி இருக்கிறார்கள். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆலந்தலை வரை சுமார் 160 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தினரும், நாடார் பேரவை நிர்வாகிகளும் சமூக அமைப்புகள், பொது மக்களுடன் சேர்ந்து பனை விதைகளை நடுவதற்கு பாடுபட வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூலம் பாசன வசதி பெறும் குளங்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடுகின்றது.

    எனவே தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட்டு மேற்கண்ட அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு கருகி நிற்கும் விவசாய பயிர்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 

    • பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலைகளிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
    • இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.

    வாழப்பாடி:

    நிலத்தடி நீர் காக்கும் பனை மரங்களின் பயன்கள் குறித்தும், உதிர்ந்து விழுந்து வீணாகும் பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலை களிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்பு ணர்வு ஏற்பட்டுள்ளது.

    சேலம் அருகே அயோத்தி யாப்பட்டணம், மாசிநா யக்கன்பட்டி, உடையாப் பட்டி, பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றி ணைந்து, இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.

    இக்குழுவினர் ஏற்படுத் திய விழிப்புணர்வால், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி ஏரியில் திரண்ட பள்ளி, கல்லுாரி மாணவ–மாண வியர் மற்றும் தன்னார்வலர் கள், நுாற்றுக்கணக்கான பனை மர விதைகளை சேக ரித்து ஏரிக்கரையில் விதைத்தனர். இக்குழுவின ருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள் ளனர்.

    ×