search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samathuva makkal kalagam"

    • தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தினரும், நாடார் பேரவை நிர்வாகிகளும் சமூக அமைப்புகள், பொது மக்களுடன் சேர்ந்து பனை விதைகளை நடுவதற்கு பாடுபட வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடை பெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் நாடார், பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்

    இதில் நாடார் பேரவை பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகர செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், காமராஜ், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் இந்தாண்டு தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி இருக்கிறார்கள். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆலந்தலை வரை சுமார் 160 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தினரும், நாடார் பேரவை நிர்வாகிகளும் சமூக அமைப்புகள், பொது மக்களுடன் சேர்ந்து பனை விதைகளை நடுவதற்கு பாடுபட வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூலம் பாசன வசதி பெறும் குளங்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடுகின்றது.

    எனவே தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட்டு மேற்கண்ட அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு கருகி நிற்கும் விவசாய பயிர்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 

    • வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மஹாலில் பனைமர தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
    • திருச்செந்தூர் கல்லா மொழியில் நடைபெற்று வரும் அனல் மின் தொழிற்சாலையில் செய்வதற்கு இந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சசிகுமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்செந்தூர் நகரச் செயலாளர் பார்த்திபன் வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்செந்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயபால் நன்றி கூறினார். கூட்டத்தில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூர் காமராஜர் சாலையில் உள்ள ராஜ் மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் பனைமர தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

    பனைத் தொழில் மற்றும் பனைத் தொழில் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு உறுப்பினர்களாக சேர்ந்து தமிழ்நாடு அரசு மூலம் கிடைக்க பெறும் சலுகைகள் மற்றும் குடும்ப பாதுகாப்பு சலுகைகள் பெற்று பயனடையலாம்.

    திருச்செந்தூர் நகரில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தினை விரைந்து செயல்படுத்திடவும் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்செந்தூர் கல்லா மொழியில் நடைபெற்று வரும் அனல் மின் தொழிற்சாலையில் செய்வதற்கு இந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். திருச்செந்தூர் அரசுமருத்துவமனையில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலர் பணிக்கு நிரந்தர பணியாளர் இல்லாததால் வெளி ஊர்களில் இருந்து வரும் பொதுமக்கள் பல மணி நேரம் சில சமயங்களில் பல நாட்கள் காத்திருந்து வாங்கும் அவலம் நடைபெற்று வருகிறது.

    எனவே அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றுகள் உடனுக்குடன் வழங்கிட நிரந்தர பணியாளரை நியமிக்க வேண்டும் என்பட உள்ளிட்ட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம், ஆத்தூர் நகரச் செயலாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது. #MekedatuDam
    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகா மாநிலத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகதாதுவில் புதிதாக அணை கட்டும் திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.

    மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். #MekedatuDam
    சமத்துவ மக்கள் கழகத்தின் முதல் மாநில செயற்குழு கூட்டம் குற்றாலத்தில் வருகிற 22- ந்தேதி நடக்கிறது என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். #ernavoornarayanan
    தென்காசி:

    சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமத்துவ மக்கள் கழகத்தின் முதல் மாநில செயற்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் வருகிற 22-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் வரவு-செலவு கணக்கு, ஆண்டு அறிக்கை வாசித்தல், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் போன்றவை நடக்கின்றன. 

    மேலும் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு கூட்டம் நடத்தி தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது பற்றியும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ernavoornarayanan 
    ×