search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "planting work"

    • திருத்துறைப்பூண்டியில் 1 லட்சம் பனைவிதைகள் நடும் பணி தொடங்க உள்ளது.
    • பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார், முசிறி விதை யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் பணி இந்த வாரம் இறுதியில் (செப்டம்பர்) தொடங்க உள்ளது.

    இதற்காக பனை விதைகள் சேகரிப்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த பணியை சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    பணிகள் முடிந்த பிறகு நெடுஞ்சாலைகள், ஆற்றங்கரைகள், குளம், வாய்க்கால், ஓடை, பள்ளி, கல்லூரி, கோவில் வளாகங்க ளில் பனை விதைகள் நடும்பணி தொடங்கும்.

    இப்பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சேவை அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    இப்பணி முழுக்க மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பா நெல் நடவு பணிகள் விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது.
    • தொடர் மழை விவசாயி களை மட்டுமின்றி பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் வழக்கத்தைவிட வெயில் கொளுத்தி வந்தது. பகல் நேரங்களில் வெளியில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    மதுரை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திக ழும் வைகை அணை வறண்டதால் விவசாயம் கேள்விக்குறியானது. வழக்க மாக விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகளை தொடங்காமல் இருந்தனர். மேலும் பருவ மழையை எதிர்பார்த்தும் காத்திருந்தனர்.

    இந்தநிலையில் தென் மேற்கு பருவமழை நிறைவ டைய உள்ள நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்க ளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த தொடர் மழையால், ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், குறிப் பாக திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டா ரங்களில் உள்ள விவசாயி கள், நேரடி விதைப்பு முறை யில் சம்பா பருவ சாகுப டியை தொடங்கியுள்ளனர்.

    மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வெளி யான அதிகாரப்பூர்வ தக வல்களால் சம்பா நடவு பணியில் விவசாயிகள் முழு வீச்சில் இறங்கியுள்ள னர். இந்த பருவத்தில் மாவட்டத் தில் 1.3 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, ராமநாத புரம் மாவட்டத்தில் செப்டம் பர் மாதத்தில் 5.4 மி.மீ. மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை சராசரியாக 13.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களில் விதைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

    மீதமுள்ள பகுதிகளில் சாகுபடிக்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம், திருவா டானை விவசாயிகள் சங்க அமைப்பாளரும், விவசாயி யுமான கவாஸ்கர் கூறுகை யில், சம்பிரதாயப்படி, சில விவசாயிகள் தமிழ் மாத மான ஆவணி (ஆகஸ்ட்–-செப்டம்பர்) மற்றும் புரட் டாசி (செப்டம்பர்-ஆகஸ்ட்) ஆகிய மாதங்களில் சாகுபடி பணிகளை தொடங்கினர்.

    தொடர்ந்து பல நாட்க ளாக பெய்த மழையால், ஆவணி மாதத்தில், விதைப்பு பணிகளை துவக்கியுள்ள விவசாயிகள், 15, 20 நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் வரவில்லை என்றால், மீண்டும் விதைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு ஏக்க ருக்கு சராசரியாக 25,000 முதல் 26,000 வரை செலவ ழிக்க வேண்டும் என்றார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை விவசாயி களை மட்டுமின்றி பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • பெரம்பலூர் பகுதியில் சின்ன வெங்காய நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
    • இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்வோர் அதிகம் உள்ளனர். தற்போது அதற்கான பருவகாலம் என்பதால் நடவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் முதலில் வயலை நன்கு உழுது இயற்கை உரமான எரு உள்ளிட்டவற்றை நிலத்தில் இட்ட பின்னரே விதை வெங்காயத்தை வயலில் நடவு செய்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் வெங்காயத்தின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 150 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தாா்.
    • ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் வங்கிகள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் மூலம் அரசுக்கு சொந்தமான இடங்கள், பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.வடிவேல், மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×