search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை தொழிலாளர்"

    • தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் இந்த விதையானது செப்டம்பர் மாதம் 24 - ந் தேதி என்.எஸ் எஸ். தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.

    இன்று இந்த திட்டத்தின் ஆலோசனை கூட்டம் தண்டையார்பேட்டையில் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, கொள்கை பரப்புச் செயலாளர் முனீஸ்வரன், வர்த்தகர் அணி செயலாளர் சுப்பையா, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, சமூக முன்னெடுப்பு தலைவர் மற்றும் தமிழ்நாடு தன்னார்வளர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், நாடார் பேரவை மாநில துணைத் தலைவர் முருகேசன், இளைஞர் அணி துணைச் செயலாளர் கண்ணன், பால சேகர், நாடார் பேரவை மகளிர் அணி துணைச் செயலாளர் கல்பனா,

    திருவள்ளூர் மாவட்டம் மீனா ராஜபுஷ்பம் கலையரசி வடசென்னை மாவட்டம் குணசுந்தரி ஆனந்தி விஜயலட்சுமி அனிதா வடசென்னை கிழக்கு மாவட்டம் லார்டு பாஸ்கர் கே கே சீனிவாசன் தங்கத்துரை ராஜேஷ் வட சென்னை மேற்கு மாவட்டம் வில்லியம்ஸ் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மதுரை வீரன் கிழக்கு மாவட்டம் விஜயன் திருவள்ளூர் அந்தோணி சுபாஷ் சுரேஷ் காஞ்சிபுரம் ரமேஷ் செல்வ ராஜ் ஸ்ரீராம் செங்கல்பட்டு சேகர் தென் சென்னை துரை மாணிக்கம் மத்திய சென்னை தேவேந்திரன் அருண்குமார் ராஜலிங்கம் ஈரோடு கோதண்டராமன் தஞ்சாவூர் செல்லதுரை கனகராஜ் விருதுநகர் மாரிமுத்து கரூர் ரமேஷ் மணி திருவாரூர் காளிமுத்து திருப்பூர் ஆத்திச்செல்வம் விழுப்புரம் முருகன் திண்டுக்கல் குரு பாண்டியன் தேனி சுரேஷ் காரைக்கால் விஜய் திருச்செங்கோடு சுரேஷ் பூமணி மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து நாடார் பேரவை சமத்துவ மக்கள் கழகத்தினுடைய நிர்வாகிகள் பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 24-ந்தேதி என்எஸ்எஸ் தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோடியாக பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் டி சிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், எலைட் பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்கள், கிரீன்நீடா அமைப்பினர்கள் கலந்து கொண்டு 1லட்சம் அளவிலான பனை விதைகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சேகரித்தனர். நிகழ்ச்சியில் எலைட் பள்ளி தாளாளர் ஜெபாஸ்டின்

    பனைமர தோட்ட உரிமையாளர் அகிலன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணன், முனிஸ்வரன், தங்கமுத்து, ஜெபராஜ்டேவிட், சீனிவாசன், ராஜேஷ், மோகன்ராஜ், தாஸ், சதீஷ், ரமேஷ், சங்கர பாண்டியன், வேல்முருகன், சண்முகசுந்தரம், சுடலை மணி, பாக்கியராஜ், ஆனந்த லிங்கம், சஞ்சீவராஜன், மகளிர் அணி கல்பனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி, அனிதா, ராஜேஸ்வரி கிரீன்நீடா அமைப்பின் சந்தான கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×