search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் தொடங்கி வைக்கும் 1 கோடி பனை விதை நடும் விழா ஆலோசனை கூட்டம்- எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது
    X

    முதலமைச்சர் தொடங்கி வைக்கும் 1 கோடி பனை விதை நடும் விழா ஆலோசனை கூட்டம்- எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது

    • தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் இந்த விதையானது செப்டம்பர் மாதம் 24 - ந் தேதி என்.எஸ் எஸ். தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.

    இன்று இந்த திட்டத்தின் ஆலோசனை கூட்டம் தண்டையார்பேட்டையில் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, கொள்கை பரப்புச் செயலாளர் முனீஸ்வரன், வர்த்தகர் அணி செயலாளர் சுப்பையா, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, சமூக முன்னெடுப்பு தலைவர் மற்றும் தமிழ்நாடு தன்னார்வளர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், நாடார் பேரவை மாநில துணைத் தலைவர் முருகேசன், இளைஞர் அணி துணைச் செயலாளர் கண்ணன், பால சேகர், நாடார் பேரவை மகளிர் அணி துணைச் செயலாளர் கல்பனா,

    திருவள்ளூர் மாவட்டம் மீனா ராஜபுஷ்பம் கலையரசி வடசென்னை மாவட்டம் குணசுந்தரி ஆனந்தி விஜயலட்சுமி அனிதா வடசென்னை கிழக்கு மாவட்டம் லார்டு பாஸ்கர் கே கே சீனிவாசன் தங்கத்துரை ராஜேஷ் வட சென்னை மேற்கு மாவட்டம் வில்லியம்ஸ் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மதுரை வீரன் கிழக்கு மாவட்டம் விஜயன் திருவள்ளூர் அந்தோணி சுபாஷ் சுரேஷ் காஞ்சிபுரம் ரமேஷ் செல்வ ராஜ் ஸ்ரீராம் செங்கல்பட்டு சேகர் தென் சென்னை துரை மாணிக்கம் மத்திய சென்னை தேவேந்திரன் அருண்குமார் ராஜலிங்கம் ஈரோடு கோதண்டராமன் தஞ்சாவூர் செல்லதுரை கனகராஜ் விருதுநகர் மாரிமுத்து கரூர் ரமேஷ் மணி திருவாரூர் காளிமுத்து திருப்பூர் ஆத்திச்செல்வம் விழுப்புரம் முருகன் திண்டுக்கல் குரு பாண்டியன் தேனி சுரேஷ் காரைக்கால் விஜய் திருச்செங்கோடு சுரேஷ் பூமணி மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து நாடார் பேரவை சமத்துவ மக்கள் கழகத்தினுடைய நிர்வாகிகள் பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×