search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new building"

    • சோலைமலையான்பட்டியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • விழாவில் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளாத்திகுளம் ஊராட்சி சோலைமலையான்பட்டி கிராமத்தில் 15-வது நிதிக்குழு ஒன்றிய நிதியில் இருந்து ரூ. 9.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் துரைராஜ், கீழ விளாத்திகுளம் ஊராட்சி தலைவர் நவநீத கண்ணன், துணைத்தலைவர் செண்பகராஜ், ஊராட்சி செயலர் செந்தில், ரவிச்சந்திரன், செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் புகைப்படத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், வி.திரவியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
    • தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி புதிய கட்டிடத்தை அர்ச்சித்தார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலை ப்பள்ளியின் புதிய கட்டிடம் திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, பழைய மாணவர்கள் கூடுகை விழா ஆகிய முப்பெரும் விழா தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலை ப்பள்ளியில் நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு விழாவிற்கு தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கு வந்த சபா நாயகரை பள்ளி தாளாளர் மருத்துவர் மி.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பள்ளி ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் வரவேற்றனர்.

    பள்ளியில் அமைக்கப்ப ட்டிருந்த காமராஜர் புகைப்படத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பள்ளியின் முன்னாள் மாணவர் வி. திரவியம் ஆகியோர் திறந்து வைத்தனர். டி.டி.என்/ கல்வி குழும தலைவர் டி.டி.என். லாரன்ஸ் குத்து விளக்கேற்றினார்.

    புதிய கட்டிடம்

    தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி புதிய கட்டிடத்தை அர்ச்சித்தார். பள்ளி தலைமை ஆசிரியை லெற்றீசியா வரவேற்று பேசினார். விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி. ஜோசப் பெல்சி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜ் குமார், துரைகுடியிருப்பு பங்குத்தந்தை ஆலிபன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பி னர் பாஸ்கர், கள்ளிகுளம் மருத்துவ அலுவலர் ஜெயம் டெல்சி, கள்ளிகுளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் கமலம், வார்டு உறுப்பினர் லிங்கம், செயலர் சுமிலா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சமூகை முரளி, வள்ளியூர் வணிகர் நல சங்க செயலாளர் முல்லை. கவின் வேந்தன், பம்பாய் களிகை சங்க துணைத்தலைவர் சேவியர் ஆல்வின் மற்றும் உறுப்பினர் அருள் ரவி, முன்னாள் மாணவியும் சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையு மான பாக்கிய லெட்சுமி, கள்ளிகுளம் அலோசியஸ் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேளாங்கண்ணி, பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை தங்கஜோதி, பள்ளி கட்டிட ஒப்பந்தக்காரர்கள் புனிதன், கவுதம், சண்முகசுந்தரம், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ -மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், கல்வி பரிசு வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தாவும், காமராஜ் பள்ளி தாளாளருமான மருத்துவர் மி. ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவர் சங்க உறுப்பி னர்கள் நிமலேஷ், மணி கண்டன், பனிமாதா பேரா லய நிர்வாகிகள் மற்றும் மாணவ- மாணவிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது.
    • நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட நந்தாநகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி தனியார் பங்களிப்புடன் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டார். இதன் பயனாக போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது. இதை தொடர்ந்து 8-வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதன் திறப்புவிழா நடைபெற்றது. விழாவுக்கு போயம்பாளையம் ரோட்டரி சங்க தலைவர் முத்துராஜ், 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். ரோட்டரி நிர்வாகிகள் தனசேகரன், ஆனந்தராம், மெல்வின்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முடிவில் ரோட்டரி திட்ட தலைவர் ராஜன், பொருளாளர் ஜெகதீஷ்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    விழாவில் தி.மு.க. பாண்டியன்நகர் பகுதி செயலாளர் ஜோதி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.சரவணன், இந்திய ஜனநாயக கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பாரிகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • இக் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பிற பகுதிகள் மிகவும் பழுதடைந்து, மழை காலங்களில் மழைநீர் ஊராட்சி மன்ற அலுவலகத் திற்குள் புகுந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

    தற்போது வரை அதே கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இக் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பிற பகுதிகள் மிகவும் பழுதடைந்து, மழை காலங்களில் மழைநீர் ஊராட்சி மன்ற அலுவலகத் திற்குள் புகுந்தது.

    இதனால் அலுவலகத்திற்கு உள்ளே இருந்த கம்ப்யூட்டர் சாதனங்கள் பழுதடைந்தது. பல்வேறு ஆவணங்களும் மழையில் நனைந்து சேதம் அடைந்தது. இதனால் அலுவலகப் பணியாளர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே பழுதடைந்த மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பெண்கள் படிக்க படிக்க தான் சமூகம் முன்னேற்றம் வரும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
    • படித்தால் மட்டுமே பெண்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றனர் என கனிமொழி கூறினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செக்காரக்குடி கிராமத்தில் ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை, ரூ.11 லட்சம் செலவில் புதிய நூலக கட்டிடம், ஒட்டநத்தம் கிராமத்தில் ரூ.35 லட்சம் செலவில் வட்டாரத் துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் மற்றும் ரூ.30 லட்சம் செலவில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்து பேசியதாவது:- பெண்கள் படிக்க படிக்க தான் சமூகம் முன்னேற்றம் வரும். பெண்கள் வீடுகளில் வீட்டு வேலைகளை முடித்து ஓய்வு நேரங்களில் புத்தகங்களை படிக்க வேண்டும். பெண்கள் படித்தால் மட்டுமே குழந்தைகளுக்கு படிக்க கற்று கொடுக்க முடியும். பெண்கள் படிப்பதை பார்த்து குழந்தைகளுக்கும் படிக்கும் எண்ணம் வரும். சமூகத்தில் யார் யாருக்கெல்லாம் படிக்க மறுக்கப்பட்டதோ அதை மாற்றிக் காட்டி படிக்க வைத்த அரசு அண்ணா கலைஞர் வழிகாட்டிய அரசுதான். படித்தால் மட்டுமே பெண்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றனர் என்றார்.

    விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் தாசிலர் நிஷாந்தினி, சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், மண்டல துணை தாசிலர் ஸ்டாலின், பஞ்சாயத்து தலைவர்கள் தேன்மொழி, சரிதா ராமலட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் உதவி பொறியாளர் ரவி கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு ரூ. 23.56 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவரும், மானூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி தி.மு.க. செயலாளருமான மகாராஜன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் மாரி வண்ணமுத்து, மாரியப்பன், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லிக்கோ ட்டை செல்லத்து ரை, மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி முத்து, பாப்பாக்குடி ஊராட்சிமன்ற தலைவர்கள் ஆனைக்குட்டி பாண்டியன், சொர்ணா, பாலசுப்பிர மணியன், முப்புடாதி, ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்மதி, சுப்புலட்சுமி, காசி, முபின், முத்துமாரி, சுபாவாணி, மாவட்ட பிரதிநிதிகள் சிவன்பாண்டியன், அருணாசல பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
    • பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டியன்கோவில் ஊராட்சியில் தாயம் பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார துணை நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்ப ட்டுள்ளது. இதன் திறப்பு விழா காங்கேயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதா ரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தாயம் பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல்.எஸ்.குமார், கண்டியன் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் .

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் துளசிமணி சண்முகம், லோகு பிரசாந்த் மற்றும் பெருந்தொழுவு ரவி,அர்ச்சுணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், டாக்டர். சாம்பால், சுகாதார ஆய்வாளர் கந்த சாமி மற்றும் சுகாதார துறை மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ராஜபாளையம் பஸ் நிலையத்தில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
    • இதில் நகரசபை தலைவர் பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் டவுன் பஸ் நிலையமான பழைய பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிக்காக இடிக்கப்பட்டு மறு நிர்மாணம் செய்யப்படுகிறது. தற்பொழுது முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் பூமிபூஜையை நடத்தி வைத்தார்.

    ஆணையாளர் பார்த்தசாரதி, துணைதலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்கள், பொறியாளர், இளநிலை பொறியாளர், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக கட்டுமானத்தை முடிக்க வேண்டும் என்று நகரசபை தலைவர் வலியுறுத்தினார். 

    • அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
    • மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும். அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கினார்.

    இதில் மத்திய தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் உள்ள திரு.வி.க. நகரில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

    பின்னர் 58-வது வார்டு ஆரப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்க ளை பெறுகின்ற வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதா ரர்களுக்கு அத்தியாவசிய பொருட்க ளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குரு மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாடானையில் அரசு மருத்துவமனை பிணவறை பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையானது தாலுகாவின் தலைமையிடமாகும். இந்த தாலுகாவை சுற்றிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் தாலுகா அரசு பொது மருத்துவ மனையாக திருவாடானையில் உள்ள அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது.

    இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல ஆண்டுகளாகவே இந்த கட்டிடம் எந்த அடிப்படை வசதியுமின்றி பழுதடைந்து ஜன்னல், கதவு உடைந்து பாதுகாப்பின்றி உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பிணவறை கட்டிடம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இது வேதனை அளிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்டு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக இங்கு தரையில் கிடத்தப்படும் அவலநிலை தான் உள்ளது.

    குளிர்சாதனப்பெட்டி போன்ற எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. பழுதடைந்த இந்த கட்டிடத்தை முற்றிலும் அகற்றிவிட்டு நவீன வசதிகளோடு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ ர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர்.
    • கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி, கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.

    இதை அறிந்த நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
    • பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, புலிப்பாறைப்பட்டி, குண்டாயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திட்டப்பணிகள்

    தாயில்பட்டி ஊராட்சி யில் கலைஞர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தி கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மயான பணிகளையும், கல்லமநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும், புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ஜெ.ஐ.சி.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    பின்னர் குண்டா யிருப்பு ஊராட்சி, சுப்பிர மணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி இயக்குநர் (தணிக்கை) அரவிந்த், வட்டாட்சியர் ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×