search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Herald case"

    • பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம்
    • சோனியாகாந்தி ஒரு புலி, அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர் பயப்பட மாட்டார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ந் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 18 ஆம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தும் வாய்ப்பைப் காங்கிரஸ் எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு புலி என்றும், அவர் பயப்பட மாட்டார் என்றும் கூறினார். இது போன்ற பல விஷயங்களை அவர் ஏற்கனவே சந்தித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக கடந்த மாதம் ராகுல்காந்தி ஐந்து நாட்களுக்கும் மேலாக அமலாக்க அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவகாசம் வழங்க சோனியா காந்தி கோரியிருந்தார்.
    • வரும் 21ம் தேதி சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

    ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்நிலையில், ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5வது நாளாக ராகுல் காந்தியிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.
    • ராகுல் காந்தியிடம் நேற்று 12 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது.

    இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி ராகுலும், வரும் 23-ம் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே 4 முறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 40 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

    ராகுலிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    நேற்று 5-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி. முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவிலும் நீடித்தது. பின்னர் இரவு 9 மணிக்கு இரவு உணவுக்காக ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்றார். அதன்பின்னர் மீண்டும் அமலாக்கப் பிரிவு அலுவலகம் சென்றார் ராகுல் காந்தி. இரவிலும் துருவி துருவி ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்தனர்.

    இந்நிலையில், விசாரணைக்கு பின் டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகம் அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12 மணி நேர விசாரணை முடிந்து நள்ளிரவில் வெளியேறினார்.

    • பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுகிறார்.
    • மத்திய அமலாக்கத்துறையில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை?.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களில் ராகுல் காந்தியிடம் மொத்தம் 40 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல் காந்தி துன்புறுத்தப் படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

    பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து, உறுதியான முறையில், குரல் கொடுத்து வருவதாகவும், எனவே ராகுல்காந்தியை துன்புறுத்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

    மத்திய அமலாக்கத்துறையில் மற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

    • ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராகுல் காந்தியிடம் 40மணி நேரத்துக்கும் அதிகமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி ராகுலும், வரும் 23-ம் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்தது. அப்பகுதி முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

    கடந்த 4 நாளாக ராகுல் காந்தியிடம் இதுவரை 40 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

    • ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராகுல் காந்தியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள "யங் இந்தியா" நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது

    இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 2-ந் தேதி ராகுலும், 8-ந் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    வெளிநாட்டில் இருப்பதால் விசாரணை தேதியை மாற்றுமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சோனியாவும் சம்மன் தேதியை மாற்றி வைக்க கோரினார். இதனையேற்ற அமலாக்கத்துறை ராகுல் காந்தி திங்கட்கிழமையும் (13-ந் தேதி) சோனியா காந்தி ஜூன் 23-ந் தேதியும் ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பியது.

    அதன் அடிப்படையில் கட்சியினருடன் ராகுல்காந்தி பேரணியாக சென்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை 11.10 மணிக்கு ஆஜரானார்.

    ராகுல்காந்தி அலுவலகத்தில் ஆஜரானதும் முதல் 20 நிமிடம் வருகை பதிவு மற்றும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர். மதியம் 2.30 மணிக்கு மதிய உணவுக்கான அவர் புறப்பட்டார்.

    மாலை 3.30 மணிக்கு ஆஜரான ராகுல்காந்தியிடம் இரவு 11.25 மணி வரை விசாரணை மேற்கொள்ளப் பட்டது. சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் சுற்று விசாரணையின்போது பண மோசடி தடுப்பு சட்டம் (பி.எம்.எல்.ஏ.) பிரிவு 50-ன் கீழ் தனது வாக்குமூலத்தை ராகுல்காந்தி சமர்பித்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவையும் மீறி பேரணியாக சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    டெல்லி உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

    இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி இன்றும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜாரானார். அவரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    காலை 11 மணி அளவில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்காவும் வந்தார். ராகுல் காந்தியிடம் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இன்றும் 9 மணி நேரம் வரை அவரிடம் விசாரணை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராகுல் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் இன்றும் பேரணியாக செல்ல முயன்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    கே.சி.வேணுகோபால், ஆதர்ரஞ்சன் சவுத்ரி, சவுரவ் கோகாய், திபேந்தர் சிங் ஹீடா, ரஞ்சித் ரஞ்சன், மாணிக்கம் தாகூர், இம்ரான் உள்ளிட்ட தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட கட்சியை சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நேசனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதைக் கண்டித்து நேற்று நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட கட்சியை சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கொரோனாவால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 23-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு பேரணியாக சென்றனர்.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் பத்திரிகைக்காக சலுகை விலையில் அளிக்கப்பட்ட 50 ஆயிரம் கோடி ரூபாய் அரசு நிலத்தை சோனியாவும் ராகுல் காந்தியும் அபகரித்து விட்டதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். #NationalHerald #RahulGandhi #SoniaGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருந்தது.

    சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்விவகாரத்தில் முன்னர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோராவுக்கு எதிராக வருமான வரித்துறையினர் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கை தடைகோரி மேற்கண்ட நபர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுதவிர, கடந்த 1962-63 ஆண்டுவாக்கில்  காங்கிரஸ் கட்சிக்காக நேஷனல் ஹெரால்டு என்ற பெயரில் பத்திரிகை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள பகதூர் ஷா ஜாபர் மார்க் பகுதியில் உள்ள 5-A எண் கொண்ட காலிமனையில் சுமார் 14650 சதுரடி பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான நிலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டது.



    நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் நிர்வாகம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்திடம் இருந்து யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த பத்திரிகை வெளிவருவது நின்றுபோன பின்னர் அரசு ஒதுக்கீடு செய்த மேற்கண்ட நிலத்தில் உள்ள 5 மாடி கட்டிடடத்தில் 4 மாடிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.  யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த சொத்தின் மூலம் பல கோடி ரூபாய் வாடகை சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துக்களை ஒப்பந்த விதிகளை மீறி, முறைகேடாக கையகப்படுத்தியதாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதைதொடர்ந்து, அந்த இடத்தை மத்திய அரசை சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு செய்தனர். பத்திரிகை அச்சடிப்பதற்காக தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த அச்சு இயந்திரம் அகற்றப்பட்டிருந்தது.

    அச்சடிக்க தேவையான தாள்களும் அங்கு கையிருப்பில் இல்லை. நிர்வாக அலுவலகங்கள் இயங்கிவந்த நான்குமாடி பகுதிகளிலும் பத்திரிகை நிர்வாகம் தொடர்பான பணிகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே, பத்திரிகை நடத்துவதற்காக என்று ஒதுக்கீடு செய்த அரசு நிலம் முறைகேடாக, தகாத முறையில் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    இதுதொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு சார்பில் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பரில் அனுப்பப்பட்ட இரு நோட்டீஸ்களுக்கு தகுந்த பதில் வரவில்லை என மத்திய புறநகர் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்தது.

    எனவே, அந்த இடத்தை காலிசெய்து அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு கடந்த அக்டோபர் மாதம்  யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த உத்தரவை எதிர்த்து மேற்படி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த இடத்தை காலிசெய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக காங்கிரஸ் கட்சி தலைமை இன்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில்,  பத்திரிகைக்காக சலுகை விலையில் அளிக்கப்பட்ட 50 ஆயிரம் கோடி ரூபாய் அரசு நிலத்தை சோனியாவும் ராகுல் காந்தியும் அபகரித்து விட்டதாக மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவிசங்கர் பிரசாத், விலைமதிப்பு மிக்க பொதுச்சொத்து சோனியா, ராகுல் காந்தி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் எப்படி முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை டெல்லி ஐகோர்ட் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தி விட்டது.

    இதுதொடர்பாக, நடந்த தில்லுமுல்லுகளையும் இந்த தீர்ப்பு தோலுரித்து காட்டி, விமர்சனமும் செய்துள்ளது. அந்த இடத்தை அபகரிப்பதில் மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்ட சோனியா மற்றும் ராகுல் காந்தியின் நடவடிக்கைகளை கேள்விக்குரிய செயலாக கோர்ட் கருதுகிறது.

    நிலைமை இப்படி இருக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விவகாரம் தொடர்பாக எங்களை கேள்வி கேட்கிறார். ரபேல் விவகாரம் தொடர்பாக  விசாரிக்க ஏதுமில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பிறகும் அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.

    ராகுலுக்கும் சோனியாவுக்கும் நாங்கள் முன்வைக்கும் கேள்வி டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு பதில் கூறுங்கள் என்பதுதான். அரசு ஒதுக்கீடு செய்த சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஒரு குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது எப்படி என்பது தொடர்பாக நீங்கள் இந்த நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். #NationalHerald #RahulGandhi #SoniaGandhi
    நே‌ஷனல் ஹெரால்டு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #NationalHerald #SoniaITcase #RahulITcase

    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமரான மறைந்த ஜவகர்லால் நேரு 1930-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களுடன் சேர்ந்து ‘நே‌ஷனல் ஹெரால்டு’ என்ற பத்திரிகையை தொடங்கினார்.

    2008-ம் ஆண்டு இந்த பத்திரிகை தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை விலைக்கு வாங்கியது.

    அந்த பத்திரிகையை தொடர்ந்து நடத்த காங்கிரஸ் சார்பில் வட்டி இல்லாமல் ரூ. 90 கோடி கடன் வழங்கியது. அந்த பணம் திரும்பி செலுத்தவில்லை.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகை தொடர்பாக டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் பல கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில் அதை காங்கிரஸ் விலைக்கு வாங்கியதாகவும், இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் முறைகேடாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

     


    இந்த வழக்கு தொடர்பாக சோனியா, ராகுல் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்தும் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும் இருவரும் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    இதையடுத்து இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகலாம் அல்லது அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜர் ஆகலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ‘நே‌ஷனல் ஹெரால்டு’ முறைகேடு வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

    இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர்சிங் கோடா ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது.

    ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை காங்கிரஸ் வாங்கிய பின்பு அதன் பதிப்பகங்களை பல இடங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அரியானாவில் நிலம் வழங்கிய முறைகேடு தொடர்பாக பூபேந்தர்சிங் கோடா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகை அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் பெயரில் பதிவு செய்யப்பட்டு பங்கு பரிவர்த்தனை நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் தலைவராக மோதிலால் வோரா பெயர் இடம் பெற்று இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #NationalHerald #SoniaITcase #RahulITcase

    நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை விவகாரத்தில் பழைய வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து சோனியா, ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுக்களை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
    புதுடெல்லி:

    அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துவக்கப்பட்டது. 

    மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.

    பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்குமேல் பெறுமானமுள்ள அசையா சொத்துக்கள் உண்டு.

    இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி  ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.

    2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும். 

    காங்கிரஸ் கட்சி யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது.

    அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி பெறுமானமுள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.

    தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல்  AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது. 

    இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது. 

    ரூ. 2000 கோடி பெறுமானமுள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் ரூ. 50 லட்சம் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார். 

    இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது. 

    கடந்த  2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    இதற்கு தடை விதிக்ககோரி டெல்லி ஐகோர்ட்டில் இவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோரை கொண்ட அமர்வு இன்று உத்தரவிட்டது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். #NationalHeraldCase #SubramanianSwamyStatement
    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளை ஒப்பந்த விதிகளை மீறி, முறைகேடாக கையகப்படுத்தியதாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி இருக்கும். எனினும் சோனியா, ராகுல் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி அந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் ஒரு பகுதியை நீதிபதி சமர் விஷால் பதிவு செய்துகொண்டார். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலத்தின் மீதமுள்ள பகுதியும் பதிவு செய்யப்படும். #NationalHeraldCase #SubramanianSwamyStatement
    ×