search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nadal"

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், மற்றும் செரீனா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #USOpen #Nadal #serenawilliams
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த கரென் கஜோனாவை சந்தித்தார்.

    இதில் நடால் 5-7, 7-5, 7-6 (9-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான டெல் போட்ரா (அர்ஜென்டினா) 7-5, 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வெர்டஸ் கோவை (ஸ்பெயின்) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரர் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) ரோனிக் (கனடா) டொமினிக் தீயம் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (மெரிக்கா) 3-வது சுற்றில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை எதிர் கொண்டார்.

    இதில் செரீனா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    3-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற கணக்கில் அசரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்), பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். #USOpen #Nadal #serenawilliams
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், நடால் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #USOpenTennis
    நியூயார்க்:

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.

    2-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-லினென்டே (போலந்து) மோதினர். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற நேர் செய் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஸ்டெப்னஸ் 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரோடினாவை (ரஷியா) வீழ்த்தினார்.

    இதே போல் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), பிளஸ்கோவா (செக்குடியரசு), சபரோவா (செக்குடியரசு) ஜார்ஜர்ஸ் (ஜெர்மனி) செவஸ்டோவா (லாத்வியா), முகுருஜா (ஸ்பெயின்), மகரோவா (ரஷியா), பார்டி (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    போலாந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா முதல் சுற்றில் ஜெர்மனியின் மரியாவிடம் 3-6, 3-6 என்ற செய் தளத்தில் தோல்வி அடைந்தார்.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் ஒன்று வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) சக நாட்டு வீரர் டேவிட் பெகுருடன் மோதினார். முதல் செட்டை நடால் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டில் பெரர் 4-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது பெரர் உடல் நலகுறைவு காரணமாக விலகினார். இதையடுத்து நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-3, 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தினார். ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) இஸ்னர் (அமெரிக்கா), ரோனிக் (கனடா) சீமோன் (பிரான்ஸ்) டெல்பேர்ட்ரோ (அர்ஜென்டினா), ஆண்டர் சன் (தென் ஆப்பிரிக்கா) ஷாபோவலோவ் (கனடா), ஜான்சன் (அமெரிக்கா) டோமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். #USOpenTennis
    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் நடால், ஹெலப் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #nadal #simonahalep

    ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-ம் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதினர். இதில் நடால் 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரின் சிலிக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்சலார்ட்ஸ் மேனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கிரிஸ் இளம்வீரர் டிசிடிசிபாஸ் 6-3, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.



    இதேபோல் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), ஸ்வெரேவ் (ஜெர்மனி), ராபின் ஹாஸ் (டென்மார்க்), கரேன் கசனோஸ் (ரஷியா) கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹெலப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.



    மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் கார்சியாவிடம் தோற்று வெளியேறினார்.#nadal #simonahalep
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச் #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் 12-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இரண்டு பேரும் 10-க்கும் மேற்பட்ட கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர்கள் என்பதால் ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருந்தது.

    முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் வென்றார். 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை நடால் வெளிப்படுத்தினார். இதனால் 6-3 என 2-வது செட்டை கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் மல்லுகட்டினார்கள். இதனால் ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(11) - 6(9) என ஜோகோவிச் கைப்பற்றினார். 4-வது செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார்.



    இதனால் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என இருவரும் களம் இறங்கினார்கள். இறுதியில் ஜோகோவிச் கையே ஓங்கியது அவர் 10-8 என ஐந்தாவது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    6-4, 3-6, 7(11)-6(9), 3-6, 10-8 என நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிக் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.
    விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்ள இருக்கும் நடால், மிகப்பெரிய சவாலான போட்டி என்று தெரிவித்துள்ளார். #Wimbldeson2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்களில் ஆண்டர்சன் - இஸ்னெர், நடால் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    நடால் 2011-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அதிக தொந்தரவு கொடுக்கும் வீரராக கருதப்பட்ட ரோஜர் பெடரர் காலிறுதியில் ஆண்டர்சனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.



    இதனால் நடால் சாம்பியன் பட்டம் வெல்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடால் அப்படி பார்க்கவில்லை ‘‘நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்வது எப்போதும் மிகப்பெரிய சவாலானது’’ என்று தெரிவித்துள்ளார்.

    நடால் 2008 மற்றும் 2010-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும், ஜோகோவிச் 2011, 2014 மற்றும் 2015-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர்.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜாம்பவான் நடால் 7 வருடத்திற்குப்பின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #Wimbledon2018 #Nadal
    டென்னிஸில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்திருப்பவர் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடால். செம்மண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனை மட்டும் 11 முறை வென்ற உலக சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபனை 2009-ம் ஆண்டிலும், விம்பிள்டனை 2008 மற்றும் 2010-லும், அமெரிக்கா ஓபரை 2010, 2013, 2017-லும் கைப்பற்றியுள்ளார்.

    32 வயதாகும் ரபெல் நடால் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு கடைசியாக 2011-ம் ஆண்டுதான் தகுதி பெற்றிருந்தார். அதன்பிறகு நான்கு சுற்றுகளுக்கு மேல் முன்னேறியது கிடையாது. தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவருக்கு ரோஜர் பெடரர் கடும் சவாலாக இருப்பார்.



    நடால் விம்பிள்டன் தொடரில் 2006-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடி இரண்டு முறை சாம்பியன் பட்டமும், மூன்று முறை 2-வது இடமும் பிடித்துள்ளார். 2009-ல் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன்பின் விம்பிள்டனில் நடாலுக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹோராசியா ஜிபல்லோசை (அர்ஜென்டினா) பந்தாடினார்.

    2017-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான 5-ம் நிலை வீரர் மரின்சிலிச்(குரோஷியா) 6-3, 6-1, 4-6, 6-7 (3), 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 82-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் குடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதே போல் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோ 7-6 (7), 7-6(6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னணி வீரர் வாவ்ரிங்காவுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிளாரி லுவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த சாய்சாய் ஜெங்கை (சீனா) 7-5, 6-0 என்ற நேர் செட்டிலும், சுலோவக்கியாவின் சிபுல்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஹோகன்னா கோன்டாவையும் (இங்கிலாந்து) தோற்கடித்து 3-வது சுற்றை உறுதி செய்தனர்.

    ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- விஷ்ணு வர்தன் கூட்டணி 7-6 (7-5), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து)- வெஸ்லி கூலோப் (நெதர்லாந்து) இணையை வென்றது.

    மற்றொரு ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் கிராஜிசெக்குடன் இணைந்து களம் இறங்கினார். இவர்கள் 6-7 (5), 6-7 (3), 6-7(2) என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சான்டர் அரென்ட்ஸ்- மிடில் கூப் இணையிடம் தோற்று வெளியேறினர்.  #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal  #tamilnews
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நடால், முகுருஜா தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். #Wimbledon2018 #Muguruza #Nadal
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சுற்றில் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் துடிசெலாவை (இஸ்ரேல்) எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரர் ஆஸ்திரியாவின் டொமினிக் திம் 4-6, 5-7, 0-2 என்ற செட் கணக்கில் பாக்தாதிசுக்கு எதிராக (சைப்ரஸ்) பின்தங்கி இருந்த போது முதுகு வலி காரணமாக விலகினார். இதனால் பாக்தாதிஸ் 2-வது சுற்றை எட்டினார்.

    ஒற்றையர் பிரிவில் களம் இறங்கிய ஒரே இந்தியரான யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் 6-2, 3-6, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் வீழ்ந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் எந்த வெற்றியும் பெறாத யுகி பாம்ப்ரி 5-வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியிருக்கிறார்.

    அதே சமயம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெல் போட்ரோ (அர்ஜென்டினா), கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) உள்ளிட்டோர் முதல் தடையை எளிதில் கடந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் நவோமி பிராடியை (இங்கிலாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சிபுல்கோவா (சுலோவக்கியா), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

    2011, 2014-ம் ஆண்டு சாம்பியனான கிவிடோவா (செக்குடியரசு) 4-6, 6-4, 0-6 என்ற செட் கணக்கில் சாஸ்னோவிச்சிடம் (பெலாரஸ்) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார். #Wimbledon2018 #Muguruza #Nadal
    செம்மண் கோர்ட்டில் அதிக போட்டிகளில் விளையாடியதால் விம்பிள்டன் பயிற்சி தொடரான குயின் கிளப் தொடரில் இருந்து நடால் விலகியுள்ளார். #Wimbledon #Nadal
    டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரபெல் நடால் பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனை 11-வது முறையாக கைப்பற்றி சாதனைப் படைத்தார். விரைவில் அடுத்த கிராண்ட் ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடர் நடக்க இருக்கிறது.

    இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் ஆண்களுக்கான குயின் கிளப் டென்னிஸ் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரான நடால் விலகியுள்ளார். தொடர்ச்சியாக செம்மண் கோர்ட்டில் விளையாடியதன் காரணமாக ஓய்வு தேவைப்படுவதால் விலகியதாக நடால் கூறியுள்ளார்.



    மேலும், நடால் இந்த தொடரில் இருந்து விலகியது குறித்து கூறுகையில் ‘‘குயின் கிளப் தொடர் மிகவும் சிறப்பான தொடர். 2008-ம் ஆண்டு நான் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்வான் நினைவாகும். இந்த வருடம் விளையாட விரும்பினேன். ஆனால் செம்மண் கோர்ட்டில் நீண்ட சீசன் விளையாடியுள்ளேன்’’ என்றார்.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நாடாலூடன் அர்ஜெண்டினா வீரரான டியாகோ ஷ்வாட்மேன் மோதுகிறார். #FrenchOpen #Nadal #Schwartzman
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நாடால் (ஸ்பெயின்) மோதும் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

    அவர் கால் இறுதியில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ஷ்வாட்மேனை சந்திக்கிறார்.

    நடால் இந்த தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் கால் இறுதிக்கு வந்துள்ளார். களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான அவர் அர்ஜென்டினா வீரரை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளார். அர்ஜென்டினா வீரர் டியாகோ 4-வதுசுற்றில் ஆண்டர்சனை வீழ்த்தி இருந்தார். இதனால் அவர் நடாலை நம்பிக்கையுடன் சந்திக்கிறார்.

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா)- ஆறாவது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். நேற்று நடந்த கால் இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் கடும் போராட்டத்துக்கு பிறகு இத்தாலி வீரர் மார்கோ செச்சினட்டோவிடம் தோற்றார். மார்கோ அரை இறுதியில் டொமினிக் தீம்மை (ஆஸ்திரியா) சந்திக்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதியில் மோதும் வீராங்கனைகள் வருமாறு:-

    ஷிமோனோ ஹெலப் (ருமேனியா)- கெர்பர் (ஜெர்மனி)

    முகுருஜா (ஸ்பெயின்)- ‌ஷரபோவா (ரஷியா). #FrenchOpen #Nadal #Schwartzman
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் நடால், காஸ்குயட், ஷபோவாலோவ், கே ஆண்டர்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ரபெல் நடால் சிமோன் பொலேல்லியை எதிர்கொண்டார். இதில் நடால் முதல் இரண்டு செட்டுகளையும் 6-4, 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் நடால் 7 (11) - 6 (9) என கைப்பற்றி வெற்றி பெற்றார்.


    ஷபோவாலோவ்

    6-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் தரம் நிலை பெறாத பயோலோ லாரென்சியை எதிர்கொண்டார். இதில் ஆண்டர்சன் 6-1, 6-2, 6-4 என எளிதில் வெற்றி பெற்றார்.

    3-ம் நிலை வீரரான மரின் சிலிச் 6-3, 7-5, 7(7) - 6(4) என டக்வொர்த்தை வீழ்த்தினார். 19 வயதே ஆன கனடாவின் இளம் வீரரான டெனிஸ் ஷபோவாலோவிற்கு இதுதான் அறிமுக பிரெஞ்ச் ஓபன் ஆகும். முதல் சுற்றில் மில்மானை எதிர்கொண்டார். இதில் ஷபோவாலோவ் 7-5, 6-4, 6-2 என வெற்றி பெற்றார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நடால் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. #FrenchOpen #nadal
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப்போட்டியின் 2-வது நாள் ஆட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நடால் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அவர் தொடக்க சுற்றில் இத்தாலியை சேர்ந்த சிமோன் போலிலியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 6-3, 0-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.



    இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த பல ஆட்டங்களும் பாதிக்கப்பட்டது. இதே போல பெண்கள் பிரிவில் ‌ஷரபோவா மோதிய ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டங்கள் இன்று நடக்கிறது. #FrenchOpen #nadal
    ×