search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்கு நடால் தகுதி பெறுவாரா? அர்ஜென்டினா வீரருடன் இன்று மோதல்
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்கு நடால் தகுதி பெறுவாரா? அர்ஜென்டினா வீரருடன் இன்று மோதல்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நாடாலூடன் அர்ஜெண்டினா வீரரான டியாகோ ஷ்வாட்மேன் மோதுகிறார். #FrenchOpen #Nadal #Schwartzman
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நாடால் (ஸ்பெயின்) மோதும் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

    அவர் கால் இறுதியில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ஷ்வாட்மேனை சந்திக்கிறார்.

    நடால் இந்த தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் கால் இறுதிக்கு வந்துள்ளார். களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான அவர் அர்ஜென்டினா வீரரை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளார். அர்ஜென்டினா வீரர் டியாகோ 4-வதுசுற்றில் ஆண்டர்சனை வீழ்த்தி இருந்தார். இதனால் அவர் நடாலை நம்பிக்கையுடன் சந்திக்கிறார்.

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா)- ஆறாவது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். நேற்று நடந்த கால் இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் கடும் போராட்டத்துக்கு பிறகு இத்தாலி வீரர் மார்கோ செச்சினட்டோவிடம் தோற்றார். மார்கோ அரை இறுதியில் டொமினிக் தீம்மை (ஆஸ்திரியா) சந்திக்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதியில் மோதும் வீராங்கனைகள் வருமாறு:-

    ஷிமோனோ ஹெலப் (ருமேனியா)- கெர்பர் (ஜெர்மனி)

    முகுருஜா (ஸ்பெயின்)- ‌ஷரபோவா (ரஷியா). #FrenchOpen #Nadal #Schwartzman
    Next Story
    ×