search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Myanmar"

    மியான்மர் நாட்டின் ஸ்வர் சாங் என்ற அணை உடைந்ததால் 85 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. #MyanmarFlood
    யாங்கூன்:

    மத்திய மியன்மார் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

    மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி 2 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஸ்வர் சாங் அணை நீர்ப்பாசனத்துக்காக கட்டப்பட்டது என்றும், அதிக அளவில் நீரை சேமித்து வைத்திருக்கும் இந்த அணை முறையாக பராமரிக்கப்படாததாலேயே அணை உடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. #MyanmarFlood
    ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியான்மர் ராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளது. #Myanmar #Facebook #AccountBlock
    யாங்கோன்:

    மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போலீசார் மீது ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு உள்ள அந்த இனத்தினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

    ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 7 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காள தேசத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

    இந்த கலவரத்தை தடுக்க தவறியதாக அந்த நாட்டின் தலைவர் சூ கி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவ தளபதி, தனிநபர்கள், அமைப்புகள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தனர். ரோஹிங்யா இனத்தையே அழிக்கும் வேலையில் ராணுவம் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டது. இதற்கு ‘பேஸ்புக்’ ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த நிலையில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியான்மர் ராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளது. இதேபோன்று 19 தனிநபர்கள், அமைப்புகளின் கணக்குகளும் முடக்கப்பட்டன. #Myanmar #Facebook #AccountBlock
    ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கையை இன அழிப்பு என குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. #Rohingya #Myanmar #US
    வாஷிங்டன்:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராடி வருகின்றனர். 

    பல்லாயிரக்கணக்கானோர் பலியான நிலையில், உயிரை காக்க லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

    வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை சொந்த நாட்டுக்கே அனுப்பும் ஒப்பந்தம் வங்கதேசம் - மியான்மர் இடையே கையெழுத்தானாலும், இதுவரை அகதிகளாக உள்ளவர்கள் நாடு திரும்பவில்லை. 

    மியான்மரின் செயல்பாட்டுக்கு ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்ததோடு, ரோஹிங்கியாக்கள் மீண்டும் கன்னியத்துடன் வாழ மியான்மர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இந்நிலையில், மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையை ‘இன அழிப்பு’ என்று அமெரிக்கா கூறியுள்ளது. மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்ட மியான்மர் ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் மீது தடை விதிப்பதாகவும் அமெரிக்க கருவூல துறை அறிவித்துள்ளது. 
    மியான்மர் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்ட பரிதாப சம்பவம், ரவாங் கிறிஸ்தவ இன தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. #Myanmar #Landslide
    யாங்கூன்:

    மியான்மர் நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள காசின் மாகாணத்தில் நிறைய சுரங்கங்கள் உள்ளன. அந்த சுரங்கங்கள்தான் சுமார் 70 ஆயிரம் ‘ரவாங்’ கிறிஸ்தவ இன தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளன.

    இந்த நிலையில் அங்கு செட் மூ என்ற இடத்தில் உள்ள மாணிக்க கல் சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெய்த மழையினால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் சுரங்கத்தில் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். அவர்கள் அனைவரும் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.



    இந்த பரிதாப சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி ஜின் கியாவ் நேற்று கூறும்போது, “இன்னும் ஒருவரது உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. செஞ்சிலுவை சங்கத்தினர், தீயணைப்பு படையினரின் துணையுடன் மீண்டும் மீட்புப்பணிகளை தொடங்க உள்ளோம்” என்றார். சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்ட பரிதாப சம்பவம், ரவாங் கிறிஸ்தவ இன தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.  #Myanmar #Landslide #tamilnews
    இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பல ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் இருப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர். #Rohingyarefugee
    டாக்கா:

    மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனையில் ரோஹிங்கியா என்ற இஸ்லாமிய இன மக்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். பெரும்பாலான அகதிகள் வங்கதேசத்திற்கு சென்றனர். சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்கதேசம் நாட்டில் குடியேறி உள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் அதிகம் வாழும் பகுதியான தென்கிழக்கு வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதனால் ரோஹிங்கியா மக்கள் வாழ்ந்து வந்த சுமார் 30 ஆயிரம் கூடாரங்கள் வெள்ளத்தாலும், மண் சரிவினாலும் அழிக்கப்பட்டன.  9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #Rohingyarefugee
    நாகலாந்தின் எல்லை கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவிலும், இரவில் மியான்மரிலும் என 2 நாடுகளில் வாழ்கின்றனர்.
    யங்கூன்:

    நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லாங்வா கிராமம் மியான்மர் எல்லையில் உள்ளது. இது இந்தியாவின் கடைகோடி பகுதி. இங்கு வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவில் உணவு சாப்பிடுகிறார்கள். இரவில் மியான்மரில் தூங்குகிறார்கள். இவர்கள் 2 நாடுகளிலும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

    இங்கு ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு வழிபாடு செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மியான்மர் நாட்டின் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வெளிநாட்டு மாணவர்கள் பலர் படிக்கின்றனர்.

    கடந்த 1970-ம் ஆண்டில் இந்தியா-மியான்மர் எல்லை பிரிக்கப்பட்டது. அப்போது எல்லைப்பகுதியில் 30 கிராமங்களுக்கு தலைவராக விளங்கும் லாங்கா கிராமத்தின் தலைவரின் (ஆங்) வீட்டின் குறுக்கே இந்தியா-மியான்மர் எல்லை வந்தது. இதனால், அவரது வீட்டின் ஒரு பகுதி இந்தியாவிலும், மற்றொரு பகுதி மியான்மரிலும் உள்ளது. எனவே, அவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பகலில் இந்தியாவில் சாப்பிட்டு, இரவில் மியான்மரில் தூங்குகின்றனர்.

    இதேபோல் எலையோரத்தில் இருந்த 30 கிராமங்களில் 26 கிராமங்கள் மியான்மர் வசமும், மீதி கிராமங்கள் இந்தியா கட்டுப்பாட்டில் வந்தன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் ஒரே ஒரு தலைவர் ஆங் தான்.

    இக்கிராமங்களில் ‘சோன்யாக்’ என்ற மலைவாழ் இனமக்கள் வாழ்கின்றனர். கிராம மக்கள் விறகுகளை பொறுக்க இருநாட்டு எல்லை பகுதிக்கும் வந்து செல்கின்றனர். ஏலக்காய் மற்றும் கஞ்சா, அபின் போன்றவைகளை பெற்று வருகின்றனர்.

    லாங்வா பகுதியில் கஞ்சா மற்றும் அபின் பயிரிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மியான்மர் நாட்டுக்குள் எல்லை தாண்டி செல்கின்றனர். அதேபோன்று மியான்மர் நாட்டின் எல்லை கிராம மக்கள் இந்திய பகுதிக்கு வந்து கடைகளில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    நாகலாந்தில் வாழும் நாகர்கள் மியான்மரில் 16 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் எல்லையோர நாகலாந்து மக்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தலைநகர் யங்கூன் வரை எந்தவித ஆவணமும் இன்றி பயணம் செய்கின்றனர். எந்தவித பதிவு நம்பர் இன்றி மியான்மருக்கு 2 சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். #tamilnews
    மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு அதிபர் வின் மிண்டை சந்தித்தார். #SushmaSwaraj #WinMyint
    நே பை தா:

    இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடாக விளங்கும் மியான்மர், இந்தியாவுடனான எல்லையை 1640 கி.மீட்டர் தூரத்துக்கு பகிர்ந்து உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து, மணிப்பூர் ஆகியவை மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், மியான்மருடனான உறவு முக்கியமான ஒன்றாகும்.

    இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு நேற்று சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு, மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவு கொள்கை மந்திரி உ மியிண்ட் து உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இந்நிலையில், மியான்மர் அதிபர் வின் மிண்டை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்தார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மியான்மர் அதிபர் வின் மிண்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும், இந்த சந்திப்பின்போது, வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரக்கைன் மாகாணத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

    கடந்த டிசம்பரில் ரக்கைன் மாகாணத்திற்கு சுமார் 25 மில்லியன் டாலர் உதவித்தொகையாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #WinMyint
    ×