search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MKStalin"

    • மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டது.
    • இந்த வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட உள்ளனர்.

    நெல்லை:

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள மகளிர் பல்வேறு விதமான உற்பத்தி சார்ந்த பொரு ளாதார செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் மகளிரின் வாழ்வாதா ரத்தினை முன்னேற்றம் அடைய செய்திடும் விதமா கவும், மாவட்ட அளவில் பூமாலை வணிக வளா கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்காக மாவட்ட ங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும் என அரசு அறிவித்தது. தொடர்ந்து நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் அமையப் பெற்றுள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து மேம்படுத்தப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அதனை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    இந்த வளாகத்தில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சி மற்றும் சந்தைப்படுத்திட உள்ளனர்.

    12 கடைகள்

    புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் பனை ஓலை பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், பனங்கருப்பட்டி, கருவாடு வகைகள், பாக்கு மட்டைகள், ஆயத்த ஆடைகள், பத்தமடை பாய் பொருள்கள் மற்றும் பேன்சி பொருட்கள் என மொத்தம் 12 கடைகள் அமைக்கப்பட்டு விற்ப னைக்காக பொரு ட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடை யப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
    • மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

    இந்த நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் பீகார் புறப்பட்டார்.

    இந்நிலையில், பீகார் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார்.

    மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    மேலும், இரு தலைவர்களின் சந்திப்பின் அடையாளமாக கருணாநிதி பற்றிய நூல் ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் இன்று காலை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் இன்று மாலை தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.
    • விபத்து நடந்தபோது இரண்டு ரெயில்களும் அதிவேகத்தில் சென்றதால் பாதிப்பு அதிகம் என தகவல்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மாலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், ரெயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.

    ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.

    சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளன.

    அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் சென்றன.

    மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

    • எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்துகள்.
    • பயணத்தை முடித்த பின்பு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.

    எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்ற பெற தமிழக வீராங்கனை முத்தமிழ்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்துகள் என்றும் பயணத்தை முடித்த பின்பு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி அவர்கள்.

    எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன்.

    எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விடுதியில் தங்குமிடம், சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
    • மாணவர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும்

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் தாட்கோ நிதி மூலம் ரூ. 2 கோடியே 51 லட்சம் செலவில் புதிய ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    எம்.எல்.ஏ. ஆய்வு

    அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மாணவர் விடுதியில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி விடுதியை திறந்து வைத்தார்.

    பின்னர் மாணவர் விடுதியில் தங்குமிடம், உணவு அருந்தும் இடம் மற்றும் சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

    அப்போது மாணவ ர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும் என விடுதி காப்பாளரிடம் அறிவுறுத்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாட்கோ செயற்பொறியாளர் பால்ராஜ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், வட்ட வழங்க அலுவலர் கருப்பசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், விடுதி காப்பாளர்கள் வேல்முருகன், சுரேஷ், முத்துசெல்வம், முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ராதேவி, கனகரத்தினம், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், இளையராஜா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.
    • மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்ளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

    மஞ்சுவிரட்டில் களைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் தப்பி ஓட முயற்சித்தன. அப்போது, புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.

    இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் படுகாயம் அடைந்த நபரை மீட்க சென்ற மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.

    இந்நிலையில், மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பலியான சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
    • மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 பெறும் பயனாளி நெகிழ்ச்சியடைந்தார்.



    மாற்றுத் திறனாளி கருப்பையா

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திற னாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் மாற்றத்தை கொண்டு வரும் திறனாளிகள் என்ற உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு அவர்களுக்கான திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுய வேலை வாய்ப்பினை உருவாக்கிட கைபேசி, கணினி போன்ற எண்ணற்ற பயிற்சிகள் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை, திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது.

    காது கேளாத மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கு அடிப்படை பயிற்சி, கட்டண மில்லா பஸ் பயண அட்டை, மின்கல சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கால் மற்றும் நவீன ஒப்பு காதொலி கருவி, முடம் நிக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம் வட்டத்தில் 1583 மாற்றுத்திறனாளி களுக்கும்,ராமேசுவரம் வட்டத்தில் 429 மாற்றுத்திற னாளிகளுக்கும், திருவாடானை வட்டத்தில் 1033 மாற்றுத்திறனாளிக ளுக்கும், கீழக்கரை வட்டத்தில் 803 மாற்றுத்திற னாளிகளுக்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 725 மாற்றுத்திறனாளிகளுக்கும், கடலாடி வட்டத்தில் 1138 மாற்றுத்திறனாளிகளுக்கும், கமுதி வட்டத்தில் 838 மாற்றுத்திறனாளிகளுக்கும், முதுகுளத்தூர் வட்டத்தில் 1001 மாற்றுத்திறனாளி களுக்கும், பரமக்குடி வட்டத்தில் 1336 மாற்றுத்திற னாளிகளுக்கும் என மொத்தம் 8886 மாற்றுத்திற னாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 32 ஆயிரத்து 378 நபர்கள் மாற்றுத்திறன் கொண்ட வர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள வழங்கப்பட்டுள்ளது.

    14 ஆயிரத்து 905 நபர் களுக்கு மத்திய அரசின் UDID திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளும் வழங்கப் பட்டுள்ளது. கடந்த மே 2021 முதல் பிப்ரவரி 2023 வரை மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட வங்கிக்கடன் மானியமாக 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 528 மதிப்பிலான மானியத் தொகையும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38.63 லட்சம் மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 2 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.30 லட்சம் மதிப்பிலும், நவீன செயலிகளுடன் கூடிய கைபேசி 124 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.50 லட்சம் மதிப்பிலும், முடநீக்கியல் கருவி 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 120 மதிப்பிலும், 3 சக்கர சைக்கிள் மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.90 ஆயிரத்து 500 மதிப்பி லும், சக்கர நாற்காலி 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து10 ஆயிரத்து 600 மதிப்பிலும் என 467 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 90 ஆயிரத்து 748 மதிப்பீட்டில் வழங்கப் பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளி கருப்பையா கூறும்போது, மூளை வாத முடக்கு நோயால் பாதிக்கப் பட்டேன். மாற்றுதிறனாளி களுக்கான அடையாள அட்டை பெற்று மாதம் ரூ.1,000 பெற்று வந்தேன். தற்போது முதல்-அமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் முதல் 1,500 வழங்கிட உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி வருவதன் மூலம் எனக்கு ரூ.1,500 கிடைக்கிறது.

    மாற்றுத்திறனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாற்றுத்திற னாளிகளின் பாதுகாவ லனாக திகழ்ந்து வருகின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன் றியை தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.

    இந்த தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி செய்தி தொடர்பு அலுவலர் விஜய குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
    • 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலையை அடுத்துள்ள மேனேந்தல் மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொதுவாழ்வு மற்றும் அரசியல் பயணம் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை காண வரும் மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கும் வகையில் அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது.

    மிசா காலத்தில் மு.க. ஸ்டாலின் சிறையில் பட்ட துன்பங்களை காணும் வகையில் சிறைச்சா லைக்குள் அவரை போலீ சார் தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.

    மாணவ- மாணவிகள் மற்றும் குழந்தைகள் கண்காட்சியை பார்வையிட்ட பிறகு பொழுது போக்கு வதற்காக மைதானத்தில் ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு ஸ்டால்கள், குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், இந்த புகைப்பட கண்காட்சி வருங்கால இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது வாரிசு அரசியலுக்கு இடமில்லை. உழைப்பால் உயர்ந்தவர் முதல்வர் என்பது தெரிகிறது என்றார்.

    அமைச்சர் மூர்த்தி கூறுகையில், 10 நாட்கள் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட உள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் நடிகர் வடிவேல் பார்வையிட உள்ளார். 25-ந் தேதி மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை காண வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி மதுரை வடக்கு, மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடை பெறுகிறது என்றார்.

    திறப்பு விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன், எம்.எல்.ஏ. க்கள் சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம், உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பி னர் குழந்தைவேல்,மாநில தீர்மானக் குழு உறுப்பினர் அக்ரி.கணேசன்.

    பொதுக்குழு உறுப்பினர் உசிலை சரவண குமார், மகிழன், அவைத் தலைவர்கள் பாலசுப்ர மணியன், ஒச்சுபாலு, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி, வக்கீல் கலாநிதி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி.பி. ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி.

    பகுதி செயலாளர்கள் சசிகுமார், ஈசுவரன், கிருஷ்ணபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், வேட்டையன், இளைஞரணி மூவேந்திரன், வைகை மருது, மதி வெங்கட், அரசு வக்கீல் ஸ்ரீதர், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈசுவரி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் வக்கீல் குட்டி என்ற ராஜரத்தினம், கருப்புசாமி, ரோகிணி பொம்மதேவன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி, யாதவா் கல்லூரி, லேடி டோக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

    • வருகிற 20-ந்தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பாபநாசம் தபால் நிலையம் முன்பு நடைபெறுகிறது.
    • போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் அனைத்து வர்த்தகர்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

    பாபநாசம்:

    கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிப்பை வருகின்ற சட்டசபை கூட்டத் தொடரிலேயாவது அறிவித்திடக்கோரி தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் கவன ஈர்ப்பு போராட்டம் வருகிற 20-ந்தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பாபநாசம் தபால் நிலையம் முன்பு நடைபெறுகிறது.

    இப்போராட்டத்தில் வர்த்தகர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் பாபநாசத்தில் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தி அழைப்பிதழை வழங்கினார்.

    பாபநாசம் வணிகர் சங்க தலைவர் குமாரை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அனைத்து வர்த்தகர்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

    பின்னர் பாபநாசம் நீதிமன்றத்திற்கு சென்று அங்குள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் நேரில் சந்தித்து போராட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தினார் அப்போது போராட்டக் குழு நிர்வாகிகளும் உடன் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சி நடக்கிறது.
    • இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஊமச்சிகுளத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரை ஊமச்சிகுளம் மேனேந்தலில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த நெடிய பயணம் குறித்த புகைப்படங்களும், மிசா போன்ற அடக்குமுறை காலத்தில் அவர் பங்கேற்ற போராட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.

    மேலும் மதுரையில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை காண பள்ளி மாணவர்கள் வருகை தரும் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புகைப்பட கண்காட்சி பிற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக இருக்கின்ற வகையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேல், தீர்மான குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவைத்த லைவர்கள் ஒச்சுபாலு, பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாநில தலைமை குழு உறுப்பி னர்கள் தனசெல்வம், ஆறு முகம், மாமன்ற குழு தலை வர் ஜெயராமன், ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், மணிமேகலை, வேட்டையன், வக்கீல் கலாநிதி, இளைஞர் அணி ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் மருதுபா ண்டி, சசிகுமார், ஈஸ்வ ரன், கிருஷ்ணா பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, கவுன்சிலர்கள் காளிதாஸ், ரோகிணி பொம்மதேவன், இளைஞர் அணி மூவேந்திரன், மதி வெங்கட், சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நலத்திட்டங்களில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    • வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சுற்று வட்டார சாலையில் உள்ள அம்மா திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது. இதனை மக்களிடம் சென்று சொல்லிவிடுவோம் என்கிற பயத்தில் அ.தி.மு.க. கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர். அ.தி.மு.க. எனும் இயக்கம் தொண்டர்களால் ஆனது. விவசாய குடும்பத்தில் பிறந்த நானும் ஒரு தொண்டன்தான். தொண்டர்களாக இருந்து இந்த இயக்கத்தை வழி நடத்தி வருகிறோம்.

    ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது தொண்டர்கள் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் சிதைந்து விடுவார்கள்.

    தி.மு.க.வின் 22 மாத ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் எனபதை ஸ்டாலின் உணர வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் ரூ.2கோடி செலவில் நினைவு சின்னமாக எழுதாத பேனாவை வைக்கலாம். மீதமுள்ள ரூ.79 கோடிக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எழுதும் பேனாவை இலவசமாக வழங்கலாம்.

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவில்லை. இதேபோல அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மினி கிளினிக், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்பட பல திட்டங்களை முடக்கி உள்ளது. இதுதான் தி.மு.க..வின் சாதனை.

    தற்போது அ.தி.மு.க.வை சிதைக்கும் முயற்சியில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எதையும் எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது. எங்களை பற்றி சிந்திப்பதை விடுத்து, மக்கள் நலனில் ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும். நலத்திட்ட உதவிகளை தடுத்து ஏழைகளை வஞ்சிக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக சிவங்கை அரண்மனை வாசலில் உள்ள ராணி வேலு நாச்சியார் சிலை, பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலை ஆகியவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், கோகுல இந்திரா, எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, வி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, சிவாஜி, ஸ்டீபன்அருள்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகளிரணி வெண்ணிலா சசிக்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.பி.ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மோசஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாதவன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அன்பு, அமைப்பு சாரா அணி துணை செயலாளர்அழகர்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் எஸ்.பி.ராம், காரைக்குடி நகர வட்ட செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் ெஜ.ஷோபியா பிளாரன்ஸ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்த கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி முன்னதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து சிவகங்கை அரண்மனையில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலு த்தினார்.

    ×