search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanmugaiah MLA"

    • சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • நிகழ்ச்சியில் தாசில்தார் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் ஊராட்சி தெற்கு காலனியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதிகள் ஜோசப்மோகன், தங்ககுமார், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, வர்த்தகர் அணி முத்துகுமார், ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து, புதியம்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வி, ஊராட்சி செயலர் உத்திரகனி, கிளை செயலாளர்கள் சற்குனபாண்டி, பாலகுருசாமி, ராஜாவின் கோவில் கிளை செயலாளர் காளியப்பன், தொண்டரணி கோபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மின்சாரம் வாரியம் சார்பில் அய்யனார் காலனியில் 63 கிலோவாட் உற்பத்திதிறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் மின்சாரம் முறைப்படுத்தி வழங்க புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று ஊராட்சி சார்பில் சண்முகையா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனியில் 63 கிலோவாட் உற்பத்திதிறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி, துணைத்தலைவர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஜோசப் மோகன், தி.மு.க. கிளைச்செயலாளர்கள் ராமசாமி, இசக்கி, சீனிவாசகம், மாணவரணி உதயகுமார், காங்கிரஸ் பிரமுகர் கோபால், ராஜ், கப்பிக்குளம் பாபு, மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதியில் தங்குமிடம், சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
    • மாணவர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும்

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் தாட்கோ நிதி மூலம் ரூ. 2 கோடியே 51 லட்சம் செலவில் புதிய ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    எம்.எல்.ஏ. ஆய்வு

    அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மாணவர் விடுதியில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி விடுதியை திறந்து வைத்தார்.

    பின்னர் மாணவர் விடுதியில் தங்குமிடம், உணவு அருந்தும் இடம் மற்றும் சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

    அப்போது மாணவ ர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும் என விடுதி காப்பாளரிடம் அறிவுறுத்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாட்கோ செயற்பொறியாளர் பால்ராஜ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், வட்ட வழங்க அலுவலர் கருப்பசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், விடுதி காப்பாளர்கள் வேல்முருகன், சுரேஷ், முத்துசெல்வம், முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ராதேவி, கனகரத்தினம், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், இளையராஜா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவதால் வாகனம் விலகுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
    • தொகுதி மக்கள் நலன் கருதி இந்தச் சாலையை 5.50 மீட்டர் முன்னுரிமை அடிப்படையில் அகலப்படுத்தி தருமாறு சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    சட்டப் பேரவையில் நேற்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில், கடம்பூர் - புளியம்பட்டி - தெய்வசெயல்புரம் வரையிலான சாலை 3.75 மீட்டர் அகலமும் 12 கிலோமீட்டர் தூரமும் சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சாலை வழியாக புளியம்பட்டி புனித அந்தோ ணி யார் கோவிலுக்கு தினமும் அதிகப்படி யான பக்தர்கள் வருகை தருவதால் வாகனம் விலகுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. தொகுதி மக்கள் நலன் கருதி இந்தச் சாலையை 5.50 மீட்டர் முன்னுரிமை அடிப்படையில் அகலப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்.

    இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளிக்கையில், கடம்பூர்- புளியம்பட்டி - தெய்வச்செயல்புரம் முக்கியமான சாலை என்பதால் சாலை விரிவு படுத்த மானிய கோரிக்கை முடிந்தவுடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து இந்த நிதி ஆண்டிலே செப்பனிடப்படும் என்றார்

    ×