search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடம்பூர் - புளியம்பட்டி - தெய்வசெயல்புரம் வரையிலான சாலையை விரிவுபடுத்த வேண்டும் - சட்டசபையில் சண்முகையா எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    சண்முகையா எம்.எல்.ஏ.

    கடம்பூர் - புளியம்பட்டி - தெய்வசெயல்புரம் வரையிலான சாலையை விரிவுபடுத்த வேண்டும் - சட்டசபையில் சண்முகையா எம்.எல்.ஏ. கோரிக்கை

    • புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவதால் வாகனம் விலகுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
    • தொகுதி மக்கள் நலன் கருதி இந்தச் சாலையை 5.50 மீட்டர் முன்னுரிமை அடிப்படையில் அகலப்படுத்தி தருமாறு சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    சட்டப் பேரவையில் நேற்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில், கடம்பூர் - புளியம்பட்டி - தெய்வசெயல்புரம் வரையிலான சாலை 3.75 மீட்டர் அகலமும் 12 கிலோமீட்டர் தூரமும் சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சாலை வழியாக புளியம்பட்டி புனித அந்தோ ணி யார் கோவிலுக்கு தினமும் அதிகப்படி யான பக்தர்கள் வருகை தருவதால் வாகனம் விலகுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. தொகுதி மக்கள் நலன் கருதி இந்தச் சாலையை 5.50 மீட்டர் முன்னுரிமை அடிப்படையில் அகலப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்.

    இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளிக்கையில், கடம்பூர்- புளியம்பட்டி - தெய்வச்செயல்புரம் முக்கியமான சாலை என்பதால் சாலை விரிவு படுத்த மானிய கோரிக்கை முடிந்தவுடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து இந்த நிதி ஆண்டிலே செப்பனிடப்படும் என்றார்

    Next Story
    ×