search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுடன்காடு ஊராட்சியில் புதிய மின்மாற்றி- சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    புதிய மின்மாற்றி இயக்கத்தை சண்முகையா எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த காட்சி.

    கூட்டுடன்காடு ஊராட்சியில் புதிய மின்மாற்றி- சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • மின்சாரம் வாரியம் சார்பில் அய்யனார் காலனியில் 63 கிலோவாட் உற்பத்திதிறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் மின்சாரம் முறைப்படுத்தி வழங்க புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று ஊராட்சி சார்பில் சண்முகையா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனியில் 63 கிலோவாட் உற்பத்திதிறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி, துணைத்தலைவர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஜோசப் மோகன், தி.மு.க. கிளைச்செயலாளர்கள் ராமசாமி, இசக்கி, சீனிவாசகம், மாணவரணி உதயகுமார், காங்கிரஸ் பிரமுகர் கோபால், ராஜ், கப்பிக்குளம் பாபு, மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×