என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகம்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்
- மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டது.
- இந்த வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட உள்ளனர்.
நெல்லை:
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள மகளிர் பல்வேறு விதமான உற்பத்தி சார்ந்த பொரு ளாதார செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் மகளிரின் வாழ்வாதா ரத்தினை முன்னேற்றம் அடைய செய்திடும் விதமா கவும், மாவட்ட அளவில் பூமாலை வணிக வளா கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்காக மாவட்ட ங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும் என அரசு அறிவித்தது. தொடர்ந்து நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் அமையப் பெற்றுள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து மேம்படுத்தப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதனை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இந்த வளாகத்தில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சி மற்றும் சந்தைப்படுத்திட உள்ளனர்.
12 கடைகள்
புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் பனை ஓலை பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், பனங்கருப்பட்டி, கருவாடு வகைகள், பாக்கு மட்டைகள், ஆயத்த ஆடைகள், பத்தமடை பாய் பொருள்கள் மற்றும் பேன்சி பொருட்கள் என மொத்தம் 12 கடைகள் அமைக்கப்பட்டு விற்ப னைக்காக பொரு ட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடை யப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்