என் மலர்
நீங்கள் தேடியது "maalaimalar"
- வயிற்றின் வலது பக்கத்தில் உள்ள மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல்.
- நச்சுக்களை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.
கல்லீரல்: லிவர் என்று குறிப்பிடப்படும் கல்லீரல் பற்றி இன்றைய மருத்துவ உலகில் அதிகம் பேசப்படுகின்றது. ஆய்வு செய்யப்படுகின்றது. வயிற்றின் வலது பக்கத்தில் உள்ள மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல். அடர்ந்த சிகப்பு-பிரவுன் நிறம் கொண்டது. சுரப்பி என்றும் இதனை குறிப்பிடுவது உண்டு. ஏனெனில் புரதம் மற்றும் ஹார்மோன் போன்றவற்றினை உற்பத்தி செய்கின்றது. வலது மார்பு கூட்டின் அடியில் இருக்கும் உறுப்பு. சுமார் 500-க்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்வது. இதன் சில முக்கியமான வேலைகள் என்று பார்க்கும் போது
* நச்சுக்களை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது
* பழைய சிகப்பணுக்களை அகற்றுகின்றது
* பைல் திரவத்தினை உருவாக்கி செரி மானத்திற்கு உதவுகின்றது
* ரத்த உறைவிற்கான பொருட்களை உருவாக்குகின்றது.
* கிளைகோஜன், வைட்டமின்கள் இவைகளை சேமித்து வைக்கின்றது.
* வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்து கின்றது.
இப்படி பல்வேறு பணிகளை செய்யும் கல்லீரல் அதிக நச்சுகள், மது, உடலில் அதிகம் காப்பர் இவற்றால் பாதிப்படைகின்றது.
* கல்லீரல் புற்று நோய்.
* ஏ.பி. வைரஸ் தாக்குதல் போன்றவை கல்லீரலைத் தாக்குகின்றன.
மேலும் * வயிற்றில் நீர் தேக்கம் * சரும அரிப்பு * எளிதில் காயப்படுதல் * குறைந்த ரத்த அழுத்தம் * வயிற்றில் வலி * கணுக்கால் மற்றும் கால் வீக்கம் * நடுக்கம் * பலவீனம் * சோர்வு *குழப்பம் இவையும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
* கல்லீரல் பாதிப்பினை தவிர்க்கும் முறையாக மது, புகை, ரசாயனங்கள், போதைப் பொருட்கள் இவற்றினை அடியோடு தவிர்க்க வேண்டும்.
* பிறர் பயன்படுத்திய எந்த பொருளையுமே பயன்படுத்த வேண்டாம்.

* அளவான எடை, சத்தான உணவு அவசியம்.
* நீங்கள் ரசாயனப் பொருட்கள் இருக்கும் இடத்தில் இருப்பவராயின் கண்டிப்பாய் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
* வைரஸ், நீர்கட்டிகள், பரம்பரை, சிரோசிஸ், கொழுப்பு கல்லீரல், மஞ்சள் காமாலை, இன்சுலின் எதிர்ப்பினால் சர்க்கரை நோய் பிரிவு 2 ஆகியவை ஏற்படுகின்றன.
* சோர்வு, சிறுநீரில் மாற்றம், வாந்தி, குமட்டல், மஞ்சள் காமாலை, வெளிறிய (அ) தார் போன்ற வெளிப்போக்கு, அதிக சோர்வு ஆகியவை எளிதில் வெளிப்பட்டு அறிகுறிகளாக காட்டும்.
சில ஆரோக்கியமான உணவு பழக்கங்கள்
ஆரோக்கியமான உணவு பழக்கம் என்றால் உடனே அது கடுமையானதா என்ன? நம் அன்றாட உணவு முறைகளில் சின்ன சின்ன மாற்றங்களே அதனை ஆரோக்கியமானதாக ஆக்கி விடும்.
* பொதுவில் உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் லேபிளை பார்ப்போம். கால வரையறைப் பற்றி குறிப்பாக பார்ப்போம். அத்தோடு மட்டுமல்லாது அதன் சத்துக்களை அட்டவணை இட்டு இருப்பார்கள். அதனையும் படித்து உப்பு, சர்க்கரை, கொழுப்பு இவற்றினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
* உணவில் சிறிது எலுமிச்சை சாறு உண்ணும் முன் சேர்த்து கலந்து உண்ணலாம். இது மாவு சத்து வேகமாய் சர்க்கரையாக மாறுவதனை சற்று கட்டுப்படுத்தும்.
* பூண்டினை பொடியாக நறுக்குவதனை விட பூண்டு பற்கள் நசுக்கி வைத்து 10-15 நிமிடம் சென்று சேர்ப்பது நல்லது. இது இருதய பாதிப்பு, பக்கவாதம் தடுப்பு சக்தியினை கூட்டும்.

கமலி ஸ்ரீபால்
* இனிப்பு, பிஸ்கட், நொறுக்கு தீனி இவற்றினை வீட்டிற்குள் சேர்க்காதீர்கள். நாளைய உணவினை இன்றே யோசித்து பொருட்களை வாங்கி விடுங்கள். அப்பொழுது தான் எதிரில் என்ன கண்ணில் படுகின்றதோ அதனை முறையற்று உண்ணாமல் இருப்பீர்கள்.
* ஒரே மாதிரி உணவினையே எப்பொழுதும் உட் கொள்ள வேண்டாமே. பல வகைகளில் காய்கறிகள், பழங்கள், புது விதமான சமையல் என்று உணவில் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
* வீட்டு சமையல் மூலம் ஆரோக்கியமான உணவை சமைத்து தான் சாப்பிடுங்களேன்.
* தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை நன்கு ஊற வைத்து தயிர், கஞ்சி இப்படி எதனுடனாவது கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். சியா விதைகள் சிறந்த நார்சத்தும், மக்னீசியமும் கொண்டது.
* வால்நட் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒமேகா-3 சத்து நிறைந்தது.
* பூசணி விதைகளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம். சிங்க் சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கூட்டவல்லது. சிறிதளவு பட்டை சேர்க்க சர்க்கரை அளவு கட்டுப்படும். தேவையற்ற கொழுப்பு நீங்கும்.
* ஏதாவது ஒரு பழமாவது அன்றாடம் சாப்பிடுகின்றோமா?
* நீர் நன்கு குடியுங்கள்
* முட்டை சாப்பிடுபவர்கள் என்றால் அன்றாடம் காலை உணவில் சேர்த்துக்
கொள்ளலாமே.
* 2 முதல் 4 டேபிள் ஸ்பூன் அளவாவது ஓட்சை உணவில் சேர்க்க வேண்டும்.
* காலை உணவு அவசியம்.
* ஒரு ஆப்பிள் முடிந்தால் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.
* காரட் சமைத்து உண்பது நல்லதே. 50 சதவீதம் கூடுதல் கரோட்டின் கிடைக்கும். ஆனால் அதிக நீரில் வேக வைத்து நீரை கொட்டுவது கூடாது.
* ஆவியில் வேக வைக்கலாம். கொட்டை வகைகளை சிறிதளவு 'ஸ்நாக்ஸ்' ஆக எடுத்துக் கொள்ளலாம்.
* சூப், ஸ்மூதி போன்றவைகளும் சாப்பிடலாமே.
* ரசித்து சமையுங்கள்
* எண்ணை கொட்டி சமைக்க கூடாது. தேவையான அளவே இருக்க வேண்டும். பாப்கார்ன் வீட்டிலேயே செய்து கொரிக்கலாமே.
* ஆலி விதைகளை ஊற வைத்து அரைத்து விடுங்கள். கொத்தமல்லி, புதினா, கறி வேப்பிலை இவையெல்லாம் தாராளமாய் இடம் பெறட்டும்.
* சர்க்கரை வள்ளி கிழங்கு வேக வைத்து உண்பது நல்லது. புரோகலியினை பழக்கப் படுத்திக் கொள்ளலாமே.
* பாதாம் ஊற வைத்தாலும் தோல் நீக்காமல் பயன்படுத்தலாம்.
* தோலில் உள்ள சத்து கெட்ட கொழுப்பினை நீக்கும். இருதய நோய்களை தவிர்க்க உதவும்.
* சமையலறை, பிரிட்ஜ் இவற்றினை எப்பொழுதும் படு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அழுக்கு, பிசு பிசுப்பான டவல், துணிகளை அகற்றி விடுங்கள்.
* பாசுமதி அரிசி, குதிரவாலி, சிறுதானியங்கள் இவற்றினை அடிக்கடி பயன்படுத்தலாமே.
* மீன் சாப்பிடுபவர்கள் அவசியம் இதனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* சிகப்பு அசைவம் வாரத்தில் சில நாட்களாவது தடுத்து விடுங்களேன்.
* பீட்ரூட் சேர்ப்பது உயர் ரத்த அழுத்தம் குறைய உதவும்.
* சில காய்கறிகளை எனக்கு பழக்கமே இல்லை. எங்களுக்கு பிடிக்காது என ஒதுக்காதீர்கள். ஜப்பானியர்கள் கூறுவது ஒரு புது காய்கறியினை சேர்த்துக் கொள்ளும் பொழுது வாழ்நாளில் ஏழு நாட்கள் கூடுகின்றதாம்.
* கிராம்பு, பட்டை, இலவங்கம், அன்னாசிபூ, சோம்பு, சீரகம் இவையெல்லாம் உடலுக்கு நன்மை பயப்பவையே.
* நொறுக்கு தீனி, தட்டை, முறுக்கு போன்றவை தேவையில்லை.
* முழு தானிய உணவு அவசியம் என உங்களுக்குத் தெரியுமே.
* உணவு உண்ணும் பொழுது உணவில் கவனம் செலுத்தி உண்ண வேண்டும். டி.வி. பார்த்து கொண்டும், போன் பேசிக் கொண்டும் சாப்பிடுபவர்கள் கூடுதலாக 15 சதவீதம் உணவு உட்கொள்கின்றார்கள்.
* மிளகாய் பொடி, பூண்டு தூள், எலுமிச்சைசாறு இவற்றினை தூவி சுவையினை கூட்டுங்கள். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் போன்ற அதிக உப்புள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
* பல தடவை படித்து, கேட்டு நீங்கள் மனதில் பதிய வைத்துள்ளதை திரும்ப பார்ப்போம். அதிக சர்க்கரை சேர்த்த குளிர் பானங்கள் கூடாது என்பதுதான்.
* கடையில் குறைவாக வாங்குங்கள். அடிக்கடி கடைக்கு நடந்து சென்று கூட வாங்கலாமே.
* சிறிய தட்டு நிறைய காய்கறி, புரதம், குறைவான சாதம் எடுத்துக் கொள்வது அதிக ஆரோக்கியம்.
* வானவில் 7 நிறத்தில் உங்கள் காய்களும், பழங்களும் இருக்க வேண்டும்.
* ரசித்து, ருசித்து சாப்பிடுங்கள்.
* குறைவான, அளவான 3 வேளை உணவு, ஆரோக்கியமான தின்பண்டங்கள் இரு முறை. இவை சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
* வீட்டில் முடிந்தவரை தரையில் அமருங்கள். தரையில் அமர்ந்து உண்பது மிக நல்ல பழக்கம்.
* உங்கள் வயிறு உங்களோடு பேசும். அதனை காது கொடுத்து கேளுங்கள்.
* காலை இளம் வெய்யில் சற்று உடலின் மீது படட்டுமே.
* புன்னகையுங்கள்.
* ரூமிலேயோ (அ) வீட்டுக்குள்ளேயோ அடைந்து கிடக்க வேண்டாமே. வெளியே வரலாமே.
* உங்கள் மருத்துவர் பரிசோதனையானது நீங்கள் நன்றாகவே இருந்தாலும் முறைப்படி நடக்கட்டும்.
* உங்கள் கைப்பைகளை சுத்தமாக வைத்திருக்கலாமே.
* உடற்பயிற்சி, நடை பயிற்சியெல்லாம் நாம் தவறாமல் செய்ய வேண்டும்.
* தனிமை சிறிது நேரம் என்பது இனிமையே. * தியானம்- இதனை நாம்தான் பழக்கத்தில் கொண்டு வந்து விட்டோமே. ஒரு ஆய்வாளர் கொடுத்த இந்த குறிப்புகளைக் கொண்டு நாம் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாமே!
- ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.
- விபத்து நடந்தபோது இரண்டு ரெயில்களும் அதிவேகத்தில் சென்றதால் பாதிப்பு அதிகம் என தகவல்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மாலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ரெயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.
ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.
சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளன.
அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் சென்றன.
மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
- ரஜினியை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
- நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு சென்றார்.
பின்னர், உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தை நடிகர் ரஜினி, அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் பார்த்தார். இவர்களுடன் லதா ரஜினிகாந்தும் இருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
அங்கு, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி காந்த் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். ரஜினியை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன், ரஜினியின் மனைவி லதா ரஜினி காந்தும் உடன் இருந்தார்.
நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
- சினிமா பார்வையாளர்களுக்காக சினிமா மலர் என்ற யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- பார்வையாளர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாலைமலர் குழுமம் வாசகர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் என அனைவரையும் குதூகலப்படுத்தும் வகையில் பல முன்னெடுப்புகளை எடுத்து அவர்களை மகிழ்வித்து வருகிறது. மாலைமலர் இணையதளம் மட்டுமல்லாது யூடியூபிலும் தங்களுடைய பிரத்யேகமான பிரபலங்களின் பேட்டி, இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, அரசியல் நிகழ்வுகள் என பல விஷயங்களை கொடுத்து வருகிறது.

சினிமாமலர்
இந்நிலையில் மாலைமலர் பார்வையாளர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் சினிமாவுக்காக தனியான சினிமா மலர் என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளது. அதில் திரைப்பிரபலங்களின் பேட்டி, இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சினிமா நிகழ்வுகள் என இன்னும் பல விஷயங்களை கொடுக்க இருக்கிறது. எனவே மாலைமலர் நேயர்கள் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.






