search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mk alagiri"

    திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம் என மு.க அழகிரி மதுரையில் பேட்டியளித்துள்ளார். #DMK #MKStalin #MKAlagiri
    மதுரை:

    தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்துள்ளார்.  அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவர் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தது பற்றி மதுரையில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் தலைவராவதற்கு என்னை முன்மொழிய சொல்கிறீர்களா? என பதில் கூறினார்.

    தொடர்ந்து மு.க. அழகிரி கூறும்பொழுது, இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வோம். போட்டியிடுவோம் என்று கூறினார்.
    செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி தெரிவித்துள்ளார். #MKAlagiri
    மதுரை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க அழகிரி தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

    இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது, “தற்போது திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை. நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். பேரணிக்கு பின்னர் எனது முடிவை தெரிவிப்பேன்” என அவர் தெரிவித்தார்.
    கலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    வருகிற 28-ந்தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் பற்றி எனக்குத் தெரியாது. கலைஞர் நினைவிடத்தில் எனது ஆதங்கத்தை தெரிவித்து விட்டேன்.

    கொஞ்ச நாட்களில் உங்களிடமும் ஆதங்கத்தை தெரிவிப்பேன். கலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்.

    கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை அமைதி பேரணியில் நிரூபித்து காட்டுவேன். அதற்கு பிறகும் எதிர்காலத்திலும் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன்.

    என்னை பின்னால் இருந்து பா.ஜனதா இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை நான் கேள்விபடவில்லை. கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள்.



    ரஜினியுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று கேட்கிறார்கள். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது அவரோடு இணைந்து செயல்படுவதை எப்படி சொல்ல முடியும்? அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.

    தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKAlagiri
    தி.மு.க.வில் அழகிரி பிரச்சினைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
    கோவை:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கேரள மக்களுக்கு உதவும் வகையில் பாரதிய ஜனதா சார்பில் நிவாரண பொருட்கள், நிதி சேகரிப்பு நிகழ்ச்சி கோவை ராஜ வீதியில் இன்று தொடங்கியது. இதில் பாரதிய ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

    அவரது தலைமையில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் ராஜ வீதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் கேரள வெள்ள பாதிப்புக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி பெற்றனர்.

    பின்னர் வானதி சினீவாசன் நிருபர்களிடம் கூறியதாவது-

    கேரளாவில் வரலாறு காணாத வகையில் இது வரை இல்லாத அளவு கனமழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு இது வரை 39 பேர் பலியாகி உள்ளனர்.

    ஏராளமானோர் தங்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கோவையில் பாரதிய ஜனதா சார்பில் வியாபாரிகள், பொது மக்களிடம் நிவாரண பொருட்கள், நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக கோவையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் மூலம் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள், நிதி உதவி அனுப்பி வைக்கப்படும்.

    சென்னையில் கடும் வெள்ளம் பாதித்த போது பல்வேறு மாநிலங்களில் இருந்து உதவினார்கள். தற்போது கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவுவது நமது கடமை.

    கோவையை ஒட்டி உள்ள பாலக்காடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு கோவையில் உள்ள உதவி மையம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு-

    கே- கருணாநிதி இறுதி சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள வந்தபோது போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

    ப-கருணாநிதி உடலுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்த வந்த பின்னர் கூட்டம் அதிகளவு வந்து தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனை போலீசார் உரிய முறையில் கையாண்டு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    கே-கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்ததின் பின்னணியில் பாரதிய ஜனதா இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததே?

    ப- நிச்சயமாக இல்லை.

    கே- தி.மு.க.வில் மு.க.அழகிரி பிரச்சினையில் பாரதிய ஜனதாவுக்கு தொடர்புள்ளதாக பரவலாக கூறப்படுகிறதே?

    ப-தமிழ்நாட்டில் எது நடந்தாலும் அதில் பாரதிய ஜனதா இருப்பதாக கூறுகிறார்கள். கமல் கட்சி ஆரம்பித்தாலும் யார் எதை செய்தாலும் எங்களை தான் கூறுகிறார்கள். தி.மு.க.வில் அழகிரி பிரச்சினைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தனியாக கட்சி தொடங்க மாட்டேன் என்றும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 1 மாதத்தில் தெரிவிப்பதாகவும் மு.க. அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி நேற்று சென்னையில் திடீரென அடுத்தடுத்து அளித்த பேட்டிகள் அரசியல் களத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று கூறிய அவர், கட்சி தொடர்பான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

    மு.க.அழகிரியின் இந்த பேட்டியால், தி.மு.க.வில் அவருக்கும், செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டு இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பை பொது மக்களும், அரசியல் நிபுணர்களும் உற்றுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

    ஸ்டாலினைப் பொருத்த வரை அவர் இன்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தை கூட்டி முடித்து விட்டார். அடுத்த மாதம் பொதுக்குழு கூட உள்ளது. அதில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு விடுவார். இதன் தொடர்ச்சியாக தி.மு.க. சார்பில் 5 நகரங்களில் நடத்தப்படும் “கருணாநிதிக்கு புகழ் வணக்கம்” தெரிவிக்கும் கூட்டங்களில் அவர் ‘பிசி’யாகி விடுவார்.

    இந்த நிலையில் மு.க. அழகிரியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் எப்படி இருக்கும் என்பதே மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர் பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதற்கு விடை காண மு.க.அழகிரியை “மாலை மலர்” நிருபர் தொடர்பு கொண்டு பேட்டி கண்டார்.

    அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மு.க. அழகிரி அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறதே?

    பதில்:- செயற்குழுவிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

    கேள்வி:- உங்கள் ஆதரவாளர்களை திரட்டி எப்போது அடுத்த கட்ட முடிவு எடுப்பீர்கள்?

    பதில்:- ஒரு மாதம் காத்திருங்கள். அதன்பிறகு நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்.

    கேள்வி:- மதுரையில் “கலைஞர் தி.மு.க.” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதே? நீங்கள் புதிய கட்சி தொடங்க திட்டமா?

    பதில்:- தனியாக கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது. பொறுத்திருங்கள்.

    கேள்வி:- உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்?


    பதில்:- தி.மு.க. தலைவர் சமாதியில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். அவர் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறார். விரைவில் நல்ல முடிவு வரும்.

    கேள்வி:- தி.மு.க.வில் உங்களை மீண்டும் சேர்க்கக் கூடாது என பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

    பதில்:- என் பாதை தனி. அந்த பாதையில் நான் போய் கொண்டே இருப்பேன்.

    இதற்கிடையே மு.க. அழகிரி தனது குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலும் சில பேட்டிகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் மு.க.அழகிரி கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.வில் சில தவறுகள் நடக்கிறது. அதனால்தான் என்னை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க அவர்கள் பயப்படுகிறார்கள். என்னை கட்சியில் சேர்த்தால் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பேன் என்று பயப்படுகிறார்கள். எனவே என்னை கட்சியில் திரும்ப சேர்க்க மாட்டார்கள்.

    நான் வெளிப்படுத்திய ஆதங்கம் எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டது இல்லை. கட்சி தொடர்பானது. தி.மு.க.வுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த சொத்துக்களும், கட்சி நிதிகளும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது.

    தி.மு.க. நிதி வட்டிக்கு விடப்பட்டுள்ளது. அந்த வட்டியில் இருந்து கிடைக்கும் லாபம் கட்சிக்கு வரவில்லை. அந்த லாப பணம் எங்கே போகிறது? கட்சியில் இருப்பவர்களுக்கு இந்த தவறு நன்கு தெரியும். தி.மு.க. நிதியில் இருந்து கிடைக்கும் லாபத்தால் யார்-யார் பயன் அடைகிறார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

    நான் தி.மு.க.வில் இருந்திருந்தால் இந்த தவறை செய்ய விட்டு இருக்க மாட்டேன். அதனால்தான் என்னை கட்சியில் சேர்க்க அவர்கள் விரும்பவில்லை. என்றாலும் கட்சி நிதி மற்றும் சொத்துக்களை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    நான் இப்படி சொல்வதால் தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்று அர்த்தம் அல்ல. தலைவராக எனக்கு விருப்பமும் இல்லை. ஆசையும் இல்லை. எனது தந்தையை போல கட்சிக்கு உழைக்கவே நான் ஆசைப்படுகிறேன். தொண்டனாகவே இருந்து தி.மு.க.வை வலிமைப்படுத்த செயல்படுவேன்.

    தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகள், சித்தாந்தம் அனைத்தும் தனிப்பட்ட சிலரது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் நலனை முன் நிறுத்தி தி.மு.க.வின் கொள்கைகளை விட்டுக் கொடுத்து சமரசம் ஆகி விட்டனர்.

    2009-ம் ஆண்டு தேர்தலின்போது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை தி.மு.க.வுக்கு முதன் முதலாக பெற்று அங்கு தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தோம். ஆனால் 2014-ம் ஆண்டு அதே தொகுதியில் தி.மு.க. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதில் இருந்தே தி.மு.க.வில் உள்ளவர்களின் அணுகு முறை எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

    தி.மு.க. தற்போது இருக்கும் நிலையிலேயே திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தால் தோல்விதான் கிடைக்கும். சரியானபடி திட்டமிடாவிட்டால் தி.மு.க.வுக்கு ஆர்.கே.நகரில் என்ன நிலை ஏற்பட்டதோ அந்த நிலைதான் ஏற்படும். மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும்.

    எனவேதான் தி.மு.க.வை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் என்னை கட்சி பணியாற்ற விரும்புகிறார்கள். நானும் நீண்ட நாட்களாக இருந்த ஆதங்கத்தை வெளியிட்டுள்ளேன். இனி என் தந்தை பார்த்துக் கொள்வார்.

    தற்போது நான் வெளியிட்டுள்ள கருத்து என் குடும்பத்தினரால் வந்தது இல்லை. என்னை கட்சியில் சேர்க்க குடும்ப உறவுகள் யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களது நோக்கம் என்ன என்றும் தெரியவில்லை. என் தந்தையிடம் தவறான தகவலை சொல்லியே என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.


    என் தந்தை உயிருடன் இருந்தால், நிச்சயம் ஒருநாள் என்னை மீண்டும் கட்சியில் சேர்த்து இருப்பார். அவருக்கு என்னைப் பற்றி தெரியும். கட்சிக்காக நான் எப்படி கடினமாக உழைப்பேன் என்பதும் அவருக்குத் தெரியும்.

    கட்சிக்காக நான் பல தடவை வெற்றி தேடி கொடுத்துள்ளேன். வெற்றியோ தோல்வியோ... கட்சிக்காக நான் கடுமையாக பாடுபட்டுள்ளேன். சட்டசபை தேர்தலின்போது என்னை ஆண்டிப்பட்டி தொகுதி பொறுப்பாளராக நியமனம் செய்திருந்தனர்.

    அப்போது அந்த தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டார். நான் களப்பணி ஆற்றியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா அந்த தொகுதியில் மேலும் 2 நாட்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்து விட்டுப் போனார்.

    தி.மு.க.வின் வளர்ச்சி தற்போது முடங்கியுள்ளது. ஸ்டாலின் தலைமையில் கட்சி மோசமாகி விட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு ஒன்றே அதற்கு உதாரணமாக உள்ளது. கட்சிக்கு இன்னும் பல பிரச்சனைகள், சோதனைகள் வர உள்ளது. அதையெல்லாம் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    இப்போதே சில தி.மு.க. தலைவர்கள் ரஜினியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தலைவர் இருந்த போதும் கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் எழும். ஆனாலும் தலைவர் கட்சியை திறம்பட வழி நடத்திச் சென்றார். அது அவரது பாணி.

    ஸ்டாலினுக்கு அந்த தந்திரங்கள் தெரியவில்லை. அவர் ஒரு குழு போல செயல்படுகிறார். கட்சியில் உள்ள மற்றவர்கள் பற்றி அவர் கண்டுகொள்வதே இல்லை.

    தி.மு.க.வில் என்னை மீண்டும் சேர்க்கும்படி நான் ஒரு போதும் கேட்கமாட்டேன். அவர்களாக என்னை கட்சியில் சேர்க்க வேண்டும். ஆனால் அப்படி சேர்க்கமாட்டார்கள்.

    அப்படி நான் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டால் எனக்கு முக்கியத்துவம் வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அதோடு கட்சியில் நான் முக்கியமான ஆளாக மாறிவிடுவேன் என்று நினைக்கிறார்கள். என் மீதான இந்த கெட்ட எண்ணத்தால்தான் என்னை கட்சியில் சேர்க்காமல் இருக்கிறார்கள்.

    நான் இப்போது சிறிதளவு தான் எனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளேன். விரைவில் இதுபற்றி முழுமையான தகவல்களை தெரிவிப்பேன். தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு பதில் சொல்வேன்.

    நான் அதிரடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது. காலம் வரும் போது அவை வெளியில் வரும்.

    தற்போதைய தி.மு.க. தலைமை ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து சரியான முறையில் அரசியல் செய்யவில்லை. முட்டை கொள்முதல் மற்றும் வினியோகத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் அதை தி.மு.க. தலைமை கண்டுக்கொள்ளவில்லை.

    அதுபோல சென்னை- சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள பசுமைவழி திட்டம் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் தி.மு.க. தலைமை அந்த பிரச்சனையை சரியான முறையில் கையாளவில்லை. ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டனர். அறிக்கை மட்டும் வெளியிட்டால் போதுமா?

    ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை தி.மு.க. சரியான முறையில் எதிர்க்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்த்து போராடவும் இல்லை. அரசுக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள். ஆளும் கட்சியுடன் அவர்களுக்கு ரகசிய உடன்பாடு உள்ளது. அவ்வளவுதான்.

    இவ்வாறு மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
    எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி... எக்காரணம் கொண்டும் அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்று அன்பழகன் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. #DMK #MKAlagiri
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. செயற்குழு கூட்டம் முதன் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.

    அதோடு தி.மு.க. மூத்த தலைவர்களுடன் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்யும் பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவது பற்றி இறுதி முடிவுகள் நாளை எடுக்கப்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தி.மு.க.வில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண் டும் கட்சியில் சேர்க்க கோரிக்கைகள் எழுந்துள்ளது பற்றியும் பேசப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. அவர் தென்மண்டல பொறுப்பாளர் பதவியை விரும்பவில்லை என்றும் மாநில அளவில் முக்கிய பொறுப்பை எதிர்பார்ப்பதாகவும் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் பரவியது.

    மேலும் மு.க.அழகிரி மகனுக்கு முரசொலி அறக்கட்டளையில் இடம் அளிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருந்தது.

    மு.க.அழகிரி தரப்பிலும் மு.க.ஸ்டாலின் தரப்பிலும் சிலர் சந்தித்து இது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால் யூகத்தின் அடிப்படையில் வெளியான இந்த தகவல்கள் எதிலும் அடிப்படை உண்மை இல்லை என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். மு.க.அழகிரிக்கு தி.மு.க.வில் மீண்டும் பதவி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த தி.மு.க. நிர்வாகிகள் உறுதிபட தெரிவித்தனர்.

    இதுபற்றி தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்த போது, “தற்போது மு.க.ஸ்டாலினின் கவனம் எல்லாம் தி.மு.க. முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதை பற்றியதாகத்தான் உள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியை ஒருமுகப்படுத்தி செயல்பட அவர் ஆலோசித்து வருகிறார். வேறு எந்த வி‌ஷயங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை” என்றனர்.

    இந்த நிலையில் மு.க. அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க ஆலோசனை நடப்பதாக வந்த தகவலை கண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என அவர் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அன்பழகனை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் அன்பழகன், “எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி... குடும்பத்துக்குள் இருந்து நெருக்கடி வந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வேண்டாம்” என்று வலியுறுத்தி கூறினாராம்.


    அன்பழகனின் அறிவுரை காரணமாக இப்போதைக்கு அழகிரி தி.மு.க.வில் சேர்க்கப்பட மாட்டார் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இது தொடர்பாக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “இப்போது அழகிரியை கட்சியில் சேர்த்தால் குழப்பம் வந்து விடும். அமைதியாக போய் கொண்டிருக்கும் நிர்வாகம் சீர்கெட்டு விடும். அது பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராவதில் இடையூறை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே மீண்டும் தி.மு.க.வில் அழகிரியை சேர்ப்பது பற்றி ஆலோசிக்கப்படும்” என்றார்.

    இந்த நிலையில் மு.க.அழகிரியும் பதவிக்காக தம்பியிடம் சண்டை போட வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். தனது முக்கிய ஆதரவாளர்களில் சிலருக்கு மட்டும் பதவி பெற்றுக் கொடுக்க அவர் விரும்புவதாக சொல்கிறார்கள். எனவே அவரால் தி.மு.க.வில் எந்தவித சலசலப்பும் சர்ச்சையும் உருவாகாது என்று சொல்கிறார்கள்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தனது பதவியை விட்டு கொடுக்கப் போவதாக முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் பொதுச்செயலாளர் பதவியில் நீடிப்பார் என்று தெரிய வந்துள்ளது. எனவே நிர்வாக அமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

    இதை உணர்ந்தே அழகிரியும் பிரச்சனை உருவாக்காமல் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்களில் கே.பி. ராமலிங்கம், இசக்கிமுத்து போன்றவர்கள்தான் தொடர்ந்து அவர் பக்கம் உள்ளனர். மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் உள்பட பலர் அழகிரி ஆதரவு நிலையில் இருந்து மாறி விட்டனர்.

    தற்போது அழகிரிக்கு ஆதரவாக விரல் விட்டு எண்ணும் வகையில்தான் தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள்தான் அழகிரிக்கு எப்படியாவது தி.மு.க.வில் மீண்டும் ஒரு முக்கிய பதவியை பெற்று விட வேண்டும் என்பதில் அவசரம் காட்டி வருகிறார்கள். இதற்காக அவர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.


    அழகிரி ஆதரவாளர்களின் இந்த நடவடிக்கையை மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் மு.க.ஸ்டாலின் கையாண்டு வருகிறார். அழகிரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பரபரப்பு தகவல்களுக்கு தி.மு.க.வினர் யாரும் பதில் போடக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதங்களிலும் தி.மு.க.வினர் பங்கேற்று எந்த கருத்தையும் சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட இன்னும் 80 நாட்கள் அவகாசம் உள்ளது. எனவே பதவிகள் குறித்து பேச அவகாசம் உள்ளது. ஆகையால் அழகிரிக்கு பதவி கொடுப்பது பற்றி இப்போதே பேச வேண்டியதில்லை” என்றார்.

    பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவுரையைத் தொடர்ந்து தி.மு.க. மூத்த தலைவர்களும் அதே மனநிலைக்கு வந்துள்ளனர். இது அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான இசக்கிமுத்துவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எனவே அவர் நேற்று மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளார்.

    பொதுச்செயலாளர் அன்பழகனை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில், “அழகிரியை நான் மகான் என்று சொல்லவில்லை. அவரும் சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் மதுரை மண்டலத்தில் தி.மு.க. வெற்றி பெற அவர் ஆதரவு நிச்சயமாக அவசியமாகும். எனவே அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வலியுறுத்துவேன்” என்றார். #DMK #MKStalin #MKAlagiri #Anbazhagan
    தி.மு.க.வில் மாநில அளவிலான பதவி வேண்டும் என்று மு.க. அழகிரி கேட்பதாகவும், இது குறித்து பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. #DMK #MKAlagiri #MKStalin
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்த தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு மீண்டும் பதவி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று தி.மு.க.வின் ஒரு பிரிவினர் விரும்புகிறார்கள்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு போல தி.மு.க.வில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. மேலிடத் தலைவர்களும், கருணாநிதியின் குடும்பத்தினரும் விரும்புகிறார்கள்.

    அதனால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சி பணிக்கு கொண்டு வரவும், அவருக்கு ஏற்கனவே வழங்கிய தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள்.

    ஆனால் மு.க.அழகிரி அந்த பொறுப்பை பெற விரும்பவில்லை என்றும், மாநில அளவிலான பதவி வேண்டும் என்று கேட்பதாகவும் தெரிகிறது.

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் பிரச்சனைகளை நேரடியாக ஆய்வு நடத்தும் அதிகாரம் இருந்தால் தான் தனக்கு கவுரவமாக இருக்கும் என்று அவர் விரும்புவதாக தெரிகிறது.

    இந்த பொறுப்பை வழங்கினால் விரைவில் வர உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் முன்னின்று எடுக்க தயாராக இருப்பதாக மு.க.அழகிரி தரப்பில் கூறப்படுகிறது.

    மு.க.அழகிரியின் விருப்பம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    மு.க.அழகிரி ஒதுங்கி இருக்காமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதற்குரிய பதவி அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கருணாநிதியின் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதனால் மு.க.அழகிரிக்கு விரைவில் பதவி வழங்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

    இது குறித்து செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டாலும் பொதுக்குழுவில் தான் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது. #DMK #MKAlagiri #MKStalin
    திமுக தலைவர் கருணாநிதியுடன் அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான முக அழகிரி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்தார். #DMK #Karunanidhi #MKAlagiri
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி தற்போது உலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது அண்ணா அறிவாலயம், சிஐடி காலனி சென்று வருவார். இந்நிலையில், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான முக அழகிரி கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்தார்.

    அங்கு, கருணாநிதி மற்றும் தாயார் தயாளு அம்மாள் ஆகியோரை சந்தித்து அழகிரி உடல்நலம் விசாரித்தார். பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சில நாட்களுக்கு முன்னர், திமுகவில் உண்மை தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அழகிரி, ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தி.மு.க.வின் செயல்படாத தலைவர் மு.க.ஸ்டாலின் என்று முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கிண்டல் செய்துள்ளார். #MKAlagiri #MKStalin
    மதுரை:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டியில் தனது ஆதரவாளரின் இல்ல திருமண விழாவை, முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நடத்தி வைத்தார்.

    நான் திருமணத்தை நடத்தி வைக்க வருகிறேனா? அல்லது கட்சி மாநாட்டிற்கு வருகிறேனா? என்று தெரியாத அளவுக்கு கொடி தோரணங்களோடு என்னை வாழ்த்தி வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதை பார்க்கும்போது, பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது. தற்போது தி.மு.க.வில் உள்ளவர்கள் கட்சிக்கு உழைக்காதவர்கள். அவர்கள் அனைவரும் பதவிக்காகவே இருக்கிறார்கள். செயல்படாத ஒரு தலைவர் செயல் தலைவர் என்று சென்னையில் இருக்கிறார். ஆனால் செயல்படுகிற செயல் வீரர்கள் அதிகம் பேர் என்னிடம்தான் உள்ளனர்.


    இவ்வாறு அவர் பேசினார்.

    செயல்படாத தலைவர் என்று தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்து மு.க. அழகிரி திருமண விழாவில் பேசிய பேச்சு தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் செயல்வீரர்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள் என்று மு.க. அழகிரி கூறியிருப்பது விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் மு.க. அழகிரி ஈடுபடுவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  #MKAlagiri #MKStalin
    என்னுடன் இருப்பவர்கள் பதவிக்காக இல்லை. ஆனால், அங்கு இருப்பவர்கள் அப்படி இல்லை என்று தி.மு.க.வை மறைமுகமாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி விமர்சித்துள்ளார். #DMK #MKAlagiri
    மதுரை:

    மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மகள் பிரீத்தி-சுவாதித்தன் திருமணம் இன்று விரகனூர் ரிங்ரோடு வேலம்மாள் மருத்துவக்கல்லூரி கல்யாண மகாலில் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, மனைவி காந்தி அழகிரி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இது யாருடைய இல்ல விழா என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயரே மன்னன்.

    கலைஞரின் ஆசியுடன் துணை மேயராக பொறுப்புக்கு வந்தார். இந்த திருமணத்திற்கு வரும்போது நல்லவேளையாக என் வேட்டியை உருவிவிடாமல் இருந்தார்கள். அந்த அளவுக்கு மாநாடுபோல கூட்டம் உள்ளது. மன்னன் என்னிடம் எந்த எண்ணத்திலும் இல்லை. அவருக்கு பதவி ஆசை கிடையாது.

    இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் கடுமையாக உழைத்து கலைஞரின் கையில் வெற்றிக் கனியை பறித்து தந்தவர், மன்னன்.

    மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் ஆகட்டும், திருமங்கலம், திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஆகட்டும் மன்னனின் உழைப்பு மகத்தானது. மன்னனும், அவரது நண்பர்களும் என்னிடம் பதவிக்காக இல்லை. ஆனால் அங்கே (தி.மு.க.) இருப்பவர்கள் அப்படி அல்ல.

    அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அப்போது அங்கே எத்தனைபேர் இருப்பார்கள்? எத்தனை பேர் போவார்கள்? என்பது தெரியவரும். நான் அடுத்த வருடம் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் தோழர்களின் வற்புறுத்தலால் இங்கு பேசவேண்டியதாகி விட்டது.

    நடிகை மனோரமா சினிமாவில் கின்னஸ் சாதனை படைத்தார். பின்னணி பாடகி சுசிலா 17 ஆயிரத்து 500 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தார். இதேபோல மன்னனுக்கும் தொலைபேசியில் பேசுவதற்காக கின்னஸ் சாதனை தரலாம்.

    அவர் என்னிடம் பேசும் போதும், என்னுடன் பயணம் செய்யும்போதும் அவருக்கு நிறைய போன் கால்கள் வரும். இதில் இருந்தே அவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

    மன்னனின் இல்ல திருமண விழாவுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் நண்பர்கள் வந்து இருக்கிறார்கள். இதன் மூலம் அவரது நண்பர்கள் வட்டம் எவ்வளவு பெரியது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மன்னன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதில் எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த பெருமை ஆகும். மணமக்களுக்கு கலைஞரின் நல்வாழ்த்தையும் தெரிவித்து மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி, டைரக்டர்கள் பாலா, சமுத்திரக்கனி, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKAlagiri
    ×