என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MeToo"
அது அலுவலகமாக இருந்தால், வாழ்வுக்கு அடிப்படையான வேலையைவிடாமல் இந்தத் தொந்தரவில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பெண்கள் சிந்திப்பார்கள். உறவினரோ, நம்பிக்கையுடன் பேசிய நண்பரோ அப்படி தொந்தரவு செய்தால் அவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று மனம் குழம்புவார்கள். பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.
பேஸ்புக்கில் நட்பு பாராட்டுபவர் உரையாடலை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம். ‘எப்போது உங்களைப் பார்ப்பேன்’, ‘ஐ மிஸ் யூ’, ‘ஐ லைக் யூ ’ என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி போடுபவர், எப்போதும் உரையாடலுக்கு அழைப்பவர், போன் எண்ணைக் கேட்பவர், உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை அறிந்து கொண்டு அதைச் செய்து உங்களை கவர நினைப்பவர்கள்.. போன்றவர்களிடம் மிக கவனமாக இருக்கவேண்டும். அவர் உங்களிடம் மட்டுமல்லாமல் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் அப்படி பேசுகிறாரா? என்பதை அறிந்து கொண்டு அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
“உங்கள் உடை அழகு, உங்கள் கண்கள் அழகோ அழகு, நன்றாகப் பேசுகிறீர்கள்? அழகாக எழுதுகிறீர்கள், உங்களைப் போன்ற பெண்ணை நான் பார்த்ததே இல்லை” என்று எதற்கெடுத்தாலும் உங்களை பாராட்டிக் கொண்டிருப்பவர்களிடம் தேவை கவனம்.
உங்களை மற்றொரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைப்பவர், அவருக்கு போன் செய்வதற்காக உங்கள் எண்ணை டயல் செய்துவிட்டேன் என்று பேச்சை ஆரம்பிப்பவர், உங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார் என்று உஷாராகிவிடுங்கள்.
நீங்கள் தனிமையிலும், கவலையிலும் இருப்பதை சிலர் சரியாக மோப்பம் பிடித்து பின் தொடருவார்கள். அவர்கள் அந்த சமயத்திற்காகத்தான் காத்திருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் உங்களை நெருங்கும் அவர்கள், தன்னம்பிக்கை ஊட்டுவதுபோல, “உங்களால் முடியும்” என்றும், “நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றும், “நாம் ஒன்று சேர்ந்தால் சாதித்துவிடுவோம்” என்றும் நம்பிக்கை வலைவிரிப்பார்கள். அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
தொடர்ந்து மெசேஜ் வருகிறதா?
தவறாமல் தொடர்ந்து மெசேஜ் அனுப்புபவர்கள் எதிர்காலத்தில் பாலியல் தொந்தரவு தருவதற்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருந்து விடைபெற்றாலும், தொடர்ந்து உங்கள் எண்ணை தேடிப்பிடித்து மெசேஜ் பறக்கவிடுவார்கள் அவர்கள். யாராவது ஒருவர் சிக்குவார் என்று நினைத்து, பலரிடம் இப்படி வாலை ஆட்டிக்கொண்டிருப்பார்கள்.
செல்லப்பெயர் சூட்டுகிறார்களா?
இந்த ஆசாமிகளில் சிலர், கொஞ்சிப் பேசி கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். சுவீட்டி, பேபி, ஹனி, டார்லிங் என்று செல்லமாக அழைப்பதுடன் உங்களுக்குப் பிடித்தமானதையெல்லாம் செய்யத் தவறமாட்டார்கள். அவர்களிடம் தேவை எச்சரிக்கை.
போனை மறைப்பவர்களா?
இந்த ஆசாமிகள் பெரும்பாலும் மற்றவர்கள் அவர்களை கவனிக்கிறார்களா? என்பதை தீவிரமாக கவனிப்பார்கள். நீங்கள் அவர் மீது சந்தேகத்துடன் திரும்பினால் அவர் வேறு எங்கோ பார்ப்பதுபோல திரும்பிக் கொள்வார்கள். போனைப் பார்க்க முயன்றால் மறைத்துக் கொள்வார்கள். அதுபோல பல்வேறு விஷயங்களை ஒளிவுமறைவாக செய்வார்கள், எதிலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
உண்மையை மறைக்கிறார்களா?
அவர்களது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயரை சொல்பவர்கள், பெயரை மாற்றிச் சொல்லிப் பழகுவார்கள் அல்லது உங்கள் பெயரை மாற்றி செல் போனில் சேமிப்பது, தெரிந்தவர்களிடம் வேறுபெயரை சொல்லிவைப்பது என ஆங்காங்கே உண்மைகளை மறைப்பவர்களிடம் கவனமாக இருங்கள். முடிந்தால் உங்களையும் அப்படியே பின்பற்றச் சொல்வார்கள். அவர்களின் தவறுகளுக்கு அடிபணிந்தால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். கவனம் தேவை.
சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து ராதாரவியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை.
இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது.
மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார்.
நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் சென்னை திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன்.
சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Chinmayi Sripada #RadhaRavi
பினனணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூவில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். இந்த யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி.
யூனியனுக்கு சந்தா தொகை செலுத்தாததால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வாழ்நாள் சந்தா செலுத்தி விட்டதாக சின்மயி கூறினார்.
யூனியனில் இருந்து நீக்கப்பட்டதால் டப்பிங் பேசும் வாய்ப்பும் சின்மயிக்கு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தனது வாய்ப்புகள் பறிபோக காரணமான நடிகர் ராதாரவி மீது சின்மயி புதிய புகார் தெரிவித்துள்ளார். ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம்.
ஆனால் இந்த பட்டத்தை ராதாரவி தவறாக பயன் படுத்துகிறார். அவருக்கு அப்படி ஒரு பட்டமே வழங்கப்படவில்லை என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மலேசிய நாட்டின் மெலேகோ மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் ராதா ரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருப்பதாக அரசு செயலர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ராதாரவி பயன் படுத்துவது போலி பட்டம் என்று விமர்சித்துள்ளார். சின்மயி கிளப்பி இருக்கும் இந்த புதிய சர்ச்சை மீண்டும் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Chinmayi #Radharavis
இசை அமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கி இருக்கும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஆல்பமான ‘கெட் யுவர் ப்ரீக்கிங் ஹேண்ட்ஸ் ஆப் மீ’ என்னும் இசை குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆல்பத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்பே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார்.
பெண்ணுக்கு தலைவர் பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது. பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான்.
மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்வது நன்றாக உள்ளது. நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உள்ளடக்கிய சொல்தான் அது. தற்போது இது கோரசாக எழுகிறது.
இப்போது ஏன் அதனை சொல்கிறார்கள் என்று சிலர் கோபித்துக் கொள்கிறார்கள். எப்போது எழுந்தால் என்ன? நியாயமாக, தைரியமாக எழ வேண்டிய குரல் எழுந்து கொண்டிருக்கிறது, அது எழட்டும். அதனை கேலி செய்யாதீர்கள். உடன்கட்டை ஏறுதல் என்பதை 200 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னாலும் தவறுதான், அதை தற்போது சொன்னாலும் தவறுதான். எப்போது கேட்டால் என்ன. நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது.
நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது. மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
நிகழ்வுக்கு பிறகு பெரும்பாக்கம் அருகே எழில் நகரில் உள்ள தமிழக அரசின் குடிசை மாற்று வாரியை குடியிருப்பு வளாகத்துக்கு கமல்ஹாசன் சென்றார்.
அப்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள், புகார் தெரிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHaasan #MeToo
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்திய “மீடூ” இயக்கத்தால் முதலில் பாதிக்கப்பட்டவர் எம்.ஜே. அக்பர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை இணை மந்திரியாக இருந்த அவர் மீது அடுத்தடுத்து பெண் பத்திரிகையாளர்கள் சிலர் பாலியல் தொல்லை புகார்களை வெளியிட்டனர். இதனால் எம்.ஜே.அக்பர் கடந்த மாதம் மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
தன் மீது மீடூ மூலம் பாலியல் புகார்களை வெளியிட்ட பெண் பத்திரிகையாளர்கள் மீது அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் பல்லவி கோகோய் தன்னிடம் எம்.ஜே.அக்பர் எப்படியெல்லாம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டார் என்ற தகவலை “த வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
23 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிகையில் நான் சேர்ந்தேன். ஒரு நாள் நான் ஒரு செய்திக்கு வித்தியாசமாக தலைப்பிட்டிருந்தேன். அந்த செய்தியை பத்திரிகை ஆசிரியராக இருந்த எம்.ஜே. அக்பரிடம் கொண்டு சென்று காட்டினேன்.
இதையடுத்து அவரை சந்திப்பதை நான் தவிர்த்தேன். சில மாதங்கள் கழித்து பத்திரிகை பணிக்காக நாங்கள் ஜெய்ப்பூருக்கு சென்றிருந்தோம். அப்போது கட்டுரை தொடர்பாக பேச வேண்டும் என்று அக்பர் என்னை மட்டும் அழைத்தார்.
அவரது அறையில் மற்ற ஊழியர்களும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றேன். அவரது அறைக்குள் சென்றதும் அவர் திட்டமிட்டு வலுக்கட்டாயமாக என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தார். அவரது பலத்தை எதிர்த்து போராடி என்னால் தப்ப முடியாமல் போய் விட்டது.
என்னை மிரட்டி கற்பழித்தார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதை விட அவமானம் அதிகமாக தாக்கியது. இதனால் என்னால் அன்று புகார் கொடுக்க இயலவில்லை.
அடுத்த மாதங்களிலும் அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். என் வயது சக ஊழியர்களுடன் நான் பேசினால், என்னை அழைத்து திட்டினார். நான் லண்டனுக்கு சென்ற பிறகும் அக்பரின் தொல்லை நீடித்தது.
ஒரு தடவை அவர் என்னை தாக்கவும் முயற்சி செய்தார். இதனால் நான் அவருக்கு கீழ் பணியாற்றாமல் விலகினேன்.
இவ்வாறு பெண் பத்திரிகையாளர் பல்லவி கோகோய் கூறினார். இது குறித்து அக்பரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “பல்லவி சொல்வதெல்லாம் பொய்” என்றார். #MJAkbar #MeToo #Pallavigogoi
மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.
பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-
2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.
நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்துகிறேன். இதுவரை இதை சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. மீடூ இயக்கத்தால் துணிச்சல் வந்தது.
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
இவர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையின் போது நித்யானந்தாவுக்கு ஆதரவாக வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டார்.
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்துவரும் வெளி நாட்டவர் ஒருவரும் மீடூ வில் நித்யானந்தா என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நித்யானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்