search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MeToo"

    பெண்கள் பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.
    ‘மீ டூ’ விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததில், ஆண்கள் மட்டுமல்ல பெண்களுமே கலங்கித்தான் போயிருக்கிறார்கள். அனைவரும், ஜென்டில்மேனாக நினைத்த பல பிரபலங்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது. நல்லவர்போல பழகிக் கொண்டிருக்கும் ஒருவர், பாலியல் தொந்தரவில் ஈடுபடும்போது அந்த இடமே நரகம்போலத் தோன்றும்.

    அது அலுவலகமாக இருந்தால், வாழ்வுக்கு அடிப்படையான வேலையைவிடாமல் இந்தத் தொந்தரவில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பெண்கள் சிந்திப்பார்கள். உறவினரோ, நம்பிக்கையுடன் பேசிய நண்பரோ அப்படி தொந்தரவு செய்தால் அவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று மனம் குழம்புவார்கள். பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.

    பேஸ்புக்கில் நட்பு பாராட்டுபவர் உரையாடலை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம். ‘எப்போது உங்களைப் பார்ப்பேன்’, ‘ஐ மிஸ் யூ’, ‘ஐ லைக் யூ ’ என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி போடுபவர், எப்போதும் உரையாடலுக்கு அழைப்பவர், போன் எண்ணைக் கேட்பவர், உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை அறிந்து கொண்டு அதைச் செய்து உங்களை கவர நினைப்பவர்கள்.. போன்றவர்களிடம் மிக கவனமாக இருக்கவேண்டும். அவர் உங்களிடம் மட்டுமல்லாமல் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் அப்படி பேசுகிறாரா? என்பதை அறிந்து கொண்டு அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

    “உங்கள் உடை அழகு, உங்கள் கண்கள் அழகோ அழகு, நன்றாகப் பேசுகிறீர்கள்? அழகாக எழுதுகிறீர்கள், உங்களைப் போன்ற பெண்ணை நான் பார்த்ததே இல்லை” என்று எதற்கெடுத்தாலும் உங்களை பாராட்டிக் கொண்டிருப்பவர்களிடம் தேவை கவனம்.

    உங்களை மற்றொரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைப்பவர், அவருக்கு போன் செய்வதற்காக உங்கள் எண்ணை டயல் செய்துவிட்டேன் என்று பேச்சை ஆரம்பிப்பவர், உங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார் என்று உஷாராகிவிடுங்கள்.



    நீங்கள் தனிமையிலும், கவலையிலும் இருப்பதை சிலர் சரியாக மோப்பம் பிடித்து பின் தொடருவார்கள். அவர்கள் அந்த சமயத்திற்காகத்தான் காத்திருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் உங்களை நெருங்கும் அவர்கள், தன்னம்பிக்கை ஊட்டுவதுபோல, “உங்களால் முடியும்” என்றும், “நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றும், “நாம் ஒன்று சேர்ந்தால் சாதித்துவிடுவோம்” என்றும் நம்பிக்கை வலைவிரிப்பார்கள். அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

    தொடர்ந்து மெசேஜ் வருகிறதா?

    தவறாமல் தொடர்ந்து மெசேஜ் அனுப்புபவர்கள் எதிர்காலத்தில் பாலியல் தொந்தரவு தருவதற்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருந்து விடைபெற்றாலும், தொடர்ந்து உங்கள் எண்ணை தேடிப்பிடித்து மெசேஜ் பறக்கவிடுவார்கள் அவர்கள். யாராவது ஒருவர் சிக்குவார் என்று நினைத்து, பலரிடம் இப்படி வாலை ஆட்டிக்கொண்டிருப்பார்கள்.

    செல்லப்பெயர் சூட்டுகிறார்களா?


    இந்த ஆசாமிகளில் சிலர், கொஞ்சிப் பேசி கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். சுவீட்டி, பேபி, ஹனி, டார்லிங் என்று செல்லமாக அழைப்பதுடன் உங்களுக்குப் பிடித்தமானதையெல்லாம் செய்யத் தவறமாட்டார்கள். அவர்களிடம் தேவை எச்சரிக்கை.

    போனை மறைப்பவர்களா?

    இந்த ஆசாமிகள் பெரும்பாலும் மற்றவர்கள் அவர்களை கவனிக்கிறார்களா? என்பதை தீவிரமாக கவனிப்பார்கள். நீங்கள் அவர் மீது சந்தேகத்துடன் திரும்பினால் அவர் வேறு எங்கோ பார்ப்பதுபோல திரும்பிக் கொள்வார்கள். போனைப் பார்க்க முயன்றால் மறைத்துக் கொள்வார்கள். அதுபோல பல்வேறு விஷயங்களை ஒளிவுமறைவாக செய்வார்கள், எதிலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    உண்மையை மறைக்கிறார்களா?

    அவர்களது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயரை சொல்பவர்கள், பெயரை மாற்றிச் சொல்லிப் பழகுவார்கள் அல்லது உங்கள் பெயரை மாற்றி செல் போனில் சேமிப்பது, தெரிந்தவர்களிடம் வேறுபெயரை சொல்லிவைப்பது என ஆங்காங்கே உண்மைகளை மறைப்பவர்களிடம் கவனமாக இருங்கள். முடிந்தால் உங்களையும் அப்படியே பின்பற்றச் சொல்வார்கள். அவர்களின் தவறுகளுக்கு அடிபணிந்தால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். கவனம் தேவை.
    ‘டத்தோ’ பட்டம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளதால் சின்மயியை சும்மா விடமாட்டேன் என்று ராதாரவி ஆவேசமாக கூறியுள்ளார். #ChinmayiSripada #RadhaRavi

    சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து ராதாரவியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை.

    இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது.

    மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார்.

    நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் சென்னை திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன்.

    சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Chinmayi Sripada #RadhaRavi

    ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். அப்படி ஒரு பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சின்மயி கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Chinmayi #Radharavis

    பினனணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூவில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். இந்த யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி.

    யூனியனுக்கு சந்தா தொகை செலுத்தாததால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வாழ்நாள் சந்தா செலுத்தி விட்டதாக சின்மயி கூறினார்.

    யூனியனில் இருந்து நீக்கப்பட்டதால் டப்பிங் பேசும் வாய்ப்பும் சின்மயிக்கு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


    தனது வாய்ப்புகள் பறிபோக காரணமான நடிகர் ராதாரவி மீது சின்மயி புதிய புகார் தெரிவித்துள்ளார். ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம்.

    ஆனால் இந்த பட்டத்தை ராதாரவி தவறாக பயன் படுத்துகிறார். அவருக்கு அப்படி ஒரு பட்டமே வழங்கப்படவில்லை என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக மலேசிய நாட்டின் மெலேகோ மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த கடிதத்தில் ராதா ரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருப்பதாக அரசு செயலர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே ராதாரவி பயன் படுத்துவது போலி பட்டம் என்று விமர்சித்துள்ளார். சின்மயி கிளப்பி இருக்கும் இந்த புதிய சர்ச்சை மீண்டும் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Chinmayi  #Radharavis

    டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவித்து வருவதாக ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார். #MeToo #Chinmayi #RadhaRavi
    கவிஞர் வைரமுத்து மீது சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.

    இது கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வாரம் நீக்கினார்கள். ஆனால் சின்மயிதான் வாழ்நாள் உறுப்பினருக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி கூறியதாவது:-

    வைரமுத்து உள்ளிட்டோர் மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்து பிளாக் மெயில் செய்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதால் டப்பிங் யூனியன் பக்கம் திரும்பிவிட்டார்.

    சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையர் வாசுகி அம்மாள். நீக்கிய பிறகு அவர் சங்கம் பற்றி பேசக் கூடாது. வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வங்கி கணக்கு மூலம் செலுத்தியதாக சின்மயி கூறுவது பொய். வைரமுத்து வி‌ஷயத்தில் அவர் கூறிய பாஸ்போர்ட் கதை போன்று தான் வங்கிக் கணக்கு கதையும்.



    எல்லாமே பொய். வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள்.

    சின்மயி யார் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் தெரிவிக்கட்டும். ஏன் அவர் பிறந்தபோதே மீ டூ நடந்தது என்று கூட சொல்லட்டும். அவர் யார், யாரின் பெயர்களை கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை சொல்லட்டும். அதற்கும் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியதற்கும் தொடர்பு இல்லை.

    சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவித்து வருகிறார். தற்போது மீ டூவை ஆறப்போட்டுவிட்டு டப்பிங் சங்கம் பக்கம் வந்துள்ளார். நான் விஷாலுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

    விஷால் ஒரு வீட்டிற்கு இரவு 3 மணிக்கு வந்துவிட்டு 5 மணிக்கு சுவர் ஏறி குதித்துச் சென்றதாக கூறுகிறார்கள். அதுவரை அவர் பாலியல் குற்றம் செய்ய முயற்சி செய்தாரா? அப்படி இல்லையே.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Chinmayi #RadhaRavi

    துபாயில் வசிக்கும் நபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை நேகா சக்சேனா ‘மீ டூ’ மூலம் புகார் தெரிவித்துள்ளார். #MeToo #NehaSaxena
    மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’, மோகன்லால் நடித்த ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா சக்சேனா. தமிழில், நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒரு மெல்லிய கோடு’, லொடுக்கு பாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் நேகாவின் மேனேஜருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். அதில் ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அந்த வாட்ஸ்அப் செய்தியை நேகா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு அந்த நபரை மீடூ மூலம் அடையாளம் காட்டியுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்த நாய்க்கு பாடம் கற்பிக்க இதை நான் அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்புகிறேன். அவர் பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவரின் குடும்பம் தெரிந்து கொள்ளட்டும். இது போன்ற வி‌ஷயங்களுக்கு எதிராக பேச நான் பயப்படவில்லை. ஒரு நடிகை என்பதையும் தாண்டி நான் ஒரு பெண்.



    ஒரு பிரபலமாக இருந்து கொண்டு இதற்கு எதிராக நான் குரல் கொடுக்கவில்லை என்றால் இதுபோன்ற சங்கடங்களை அனுவிக்கும் சாதாரண பெண்ணுக்கு நான் எந்த மாதிரியான முன் உதாரணமாக இருக்க முடியும்? இந்தியா மாற வேண்டும் என்கிறோம்.

    ஆனால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் பொறுப்பேற்றால் தான் இந்தியா மாறும். அப்படி செய்தால் தான் சில நாய்கள் காணாமல் போகும். இன்னொரு நிர்பயா, ஜிஷா இருக்காது. நான் எனக்காகவும், பிற பெண்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன். இது தான் நான். நான் மாற மாட்டேன்’.

    இவ்வாறு நேகா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    நேகா தன்னை அழைத்த நபரின் முகவரியை கண்டுபிடித்து அதையும் வெளியிட்டுள்ளார். அந்த நபரின் பெயர் எல்சன் லோகிதட்சன். நேகாவின் பதிவுகளை பார்த்த எல்சன் தனது செல்போனை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    எல்சன் பொய் சொல்வதாக நேகா கூறி இருக்கிறார். #MeToo #NehaSaxena

    ரெட்கார்டு போடுவேன் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி மிரட்டியதாக பாடகி சின்மயி புகார் கூறியுள்ளார். #Chinmayi #RadhaRavi
    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். பாலியல் புகார் கூறியதால் அவர் டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக இன்று சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் மீ டூ தொடர்பாக குரல் கொடுக்கத் துவங்கியதால் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். யார் எதிராக பேசினாலும் உடனே டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி அவர்களை நீக்கிவிடுவார். இது பல முறை நடந்துள்ளது. நான் 2006-ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன்.

    தேர்தல் பற்றி எனக்கு தெரிவித்ததே இல்லை. ஒரு கண்டன பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் முன்பணம் வாங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்து முன்பணத்தை திருப்பி தர வைத்தார் ராதாரவி.

    பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் ரெட்கார்டு கொடுப்பேன் என்று மிரட்டினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தியபோது வருகைப்பதிவேடு வைத்திருந்தனர்.

    அவர் அழைக்கும் போராட்டங்களுக்கு வராதவர்களுக்கு வேலை கிடையாது. இல்லை என்றால் அபிபுல்லா சாலையில் இருந்த டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டபடி திட்டுவார். ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் கேவலமாக திட்டுவார்.

    நான் ஒரு முறை அப்படி திட்டு வாங்கியபோது என் அம்மாவும் உடன் இருந்தார். சுசித்ராவும் திட்டு வாங்கியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால் நானும், சுசித்ராவும் திட்டு வாங்கினோம். ஆனால் கூட்டம் நடப்பது குறித்து யாருமே எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    ஒட்டப்பாலத்தில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தார் ராதாரவி. நான் ராதாரவிக்கு போன் செய்து நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டது பற்றி தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது.

    அதற்கு அவரோ, எனக்கும் ஷூட்டிங் இருக்கு. நான் கேன்சல் பண்ணிட்டு வரல? நீ வரவில்லை என்றால் ரெட்கார்டு கொடுப்போம் என்றார். டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். அதற்கு உதாரணம் பூமாராவ் என்ற பெண்’

    இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.
    பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது என்று நடிகை இலியானா கூறியுள்ளார். #MeToo #Ileana
    தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    ‘மீ டூ’வில் நிறைய பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை சொல்கிறார்கள். இது நல்ல மாற்றத்தை கொண்டு வரும். சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. அவர்களுடைய கசப்பான அனுபவங்களை ‘மீ டூ’வில் பேசுவது வேதனைக்குரிய வி‌ஷயம்.

    பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது. ‘மீ டூ’ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். ‘மீ டூ’வால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன். 

    எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம் குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. எனது நண்பர் ஆண்ட்ரூ உறவு வி‌ஷயத்தில் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதற்கு மேல் பேசமுடியாது. 



    நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு இலியானா கூறினார்.
    மீடூ புகார்களை யாரும் கேலி செய்ய வேண்டாம் என்று பெரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #MeToo
    சென்னை:

    இசை அமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கி இருக்கும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஆல்பமான ‘கெட் யுவர் ப்ரீக்கிங் ஹேண்ட்ஸ் ஆப் மீ’ என்னும் இசை குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆல்பத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்பே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார்.

    பெண்ணுக்கு தலைவர் பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது. பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான்.

    மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்வது நன்றாக உள்ளது. நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உள்ளடக்கிய சொல்தான் அது. தற்போது இது கோரசாக எழுகிறது.

    இப்போது ஏன் அதனை சொல்கிறார்கள் என்று சிலர் கோபித்துக் கொள்கிறார்கள். எப்போது எழுந்தால் என்ன? நியாயமாக, தைரியமாக எழ வேண்டிய குரல் எழுந்து கொண்டிருக்கிறது, அது எழட்டும். அதனை கேலி செய்யாதீர்கள். உடன்கட்டை ஏறுதல் என்பதை 200 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னாலும் தவறுதான், அதை தற்போது சொன்னாலும் தவறுதான். எப்போது கேட்டால் என்ன. நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது.

    வலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி. நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான்.


    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன். கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது.

    நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது. மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நிகழ்வுக்கு பிறகு பெரும்பாக்கம் அருகே எழில் நகரில் உள்ள தமிழக அரசின் குடிசை மாற்று வாரியை குடியிருப்பு வளாகத்துக்கு கமல்ஹாசன் சென்றார்.

    அப்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள், புகார் தெரிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHaasan #MeToo
    பாலியல் புகாரால் பதவி விலகிய முன்னாள் மத்திய மந்திரி அக்பர் 23 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை மிரட்டி கற்பழித்தார் என்று மேலும் ஒரு பெண் பத்திரிகையாளர் குற்றம்சாட்டியுள்ளார். #MJAkbar #MeToo #Pallavigogoi
    புதுடெல்லி:

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்திய “மீடூ” இயக்கத்தால் முதலில் பாதிக்கப்பட்டவர் எம்.ஜே. அக்பர்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை இணை மந்திரியாக இருந்த அவர் மீது அடுத்தடுத்து பெண் பத்திரிகையாளர்கள் சிலர் பாலியல் தொல்லை புகார்களை வெளியிட்டனர். இதனால் எம்.ஜே.அக்பர் கடந்த மாதம் மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

    தன் மீது மீடூ மூலம் பாலியல் புகார்களை வெளியிட்ட பெண் பத்திரிகையாளர்கள் மீது அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் பல்லவி கோகோய் தன்னிடம் எம்.ஜே.அக்பர் எப்படியெல்லாம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டார் என்ற தகவலை “த வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    23 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிகையில் நான் சேர்ந்தேன். ஒரு நாள் நான் ஒரு செய்திக்கு வித்தியாசமாக தலைப்பிட்டிருந்தேன். அந்த செய்தியை பத்திரிகை ஆசிரியராக இருந்த எம்.ஜே. அக்பரிடம் கொண்டு சென்று காட்டினேன்.

    அந்த செய்தியை பார்த்து விட்டு அவர் என்னை வெகுவாக புகழ்ந்து பாராட்டினார். திடீரென என்னைப் பிடித்து முத்தமிட்டார். நான் உடனே அவரிடம் இருந்து என்னை விடுவித்து கொண்டு வெளியில் வந்து விட்டேன். இந்த சம்பவம் எனக்கு அவமானமாக குழப்பமாக இருந்தது.


    சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு தடவை என்னிடம் அவர் தவறாக நடக்க முயன்றார். நான் அவரைப் பிடித்து தள்ளிவிட்டு, கண்ணீர் விட்டு அழுதபடி ஓடி சென்று விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை போனில் அழைத்து சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

    இதையடுத்து அவரை சந்திப்பதை நான் தவிர்த்தேன். சில மாதங்கள் கழித்து பத்திரிகை பணிக்காக நாங்கள் ஜெய்ப்பூருக்கு சென்றிருந்தோம். அப்போது கட்டுரை தொடர்பாக பேச வேண்டும் என்று அக்பர் என்னை மட்டும் அழைத்தார்.

    அவரது அறையில் மற்ற ஊழியர்களும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றேன். அவரது அறைக்குள் சென்றதும் அவர் திட்டமிட்டு வலுக்கட்டாயமாக என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தார். அவரது பலத்தை எதிர்த்து போராடி என்னால் தப்ப முடியாமல் போய் விட்டது.

    என்னை மிரட்டி கற்பழித்தார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதை விட அவமானம் அதிகமாக தாக்கியது. இதனால் என்னால் அன்று புகார் கொடுக்க இயலவில்லை.

    அடுத்த மாதங்களிலும் அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். என் வயது சக ஊழியர்களுடன் நான் பேசினால், என்னை அழைத்து திட்டினார். நான் லண்டனுக்கு சென்ற பிறகும் அக்பரின் தொல்லை நீடித்தது.

    ஒரு தடவை அவர் என்னை தாக்கவும் முயற்சி செய்தார். இதனால் நான் அவருக்கு கீழ் பணியாற்றாமல் விலகினேன்.

    இவ்வாறு பெண் பத்திரிகையாளர் பல்லவி கோகோய் கூறினார். இது குறித்து அக்பரிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் “பல்லவி சொல்வதெல்லாம் பொய்” என்றார். #MJAkbar #MeToo #Pallavigogoi
    மீடூ விவகாரம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கூகுள் பணியாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். #GoogleWalkout



    ‘மீ டூ’ இயக்கம் தற்போது உலகம் முழுவதும் பிரபல மடைந்துள்ளது. தொடக்கத்தில் ஆசிய நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த அமைப்பு ஐரோப்பாவிலும், அதை தொடர்ந்து வடஅமெரிக்கா நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது இது சர்வதேச அளவில் பிரபல நிறுவனமான கூகுளையும் அதிர வைத்துள்ளது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. அதை ஏற்றுக் கொண்ட கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர்பிச்சை. இது தொடர்பாக 2 ஆண்டுகளில் 48 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியர்கள், கூகுளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள குர்கான், ஐதராபாத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஷீரீச், டியூப்ளின், பெர்லின், சிங்சப்டர், லண்டன் உள் ளிட்ட நகரங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.



    இந்தியாவில் உள்ள 4 கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 150 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுன்டெயின் வியூ பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

    ‘செக்ஸ்’ குற்றம் இழைப்பவர்களுக்கு எதிராக வாசகங்களுடன் கூடிய அட்டைகளை ஏந்தி இருந்தனர். நீலநிற ரிப்பன்களை அணிந்திருந்தனர். நியூயார்க், மேன்காட்டன், அட்லாண்டாவில் உள்ள கூகுள் நிறுவனங்களின் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை இது குறித்து ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஊழியர்களின் பாதுகாப்பு ஒரு திடமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
    அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், ‘அர்ஜுன் நல்ல மனிதர்’ என்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் விளக்கம் அளித்துள்ளார். #MeToo #ArjunSarja
    நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில், போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரான ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் ‘நடிகர் அர்ஜுன் நல்ல மனிதர்’ என்று கூறினார்.

    ‘விஸ்மய’ (தமிழில் ‘நிபுணன்’ என்ற பெயரில் வெளியானது) படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டினார். இதுகுறித்து நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜுன் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான படத்தின் உதவி பெண் இயக்குனர் மோனிகா, நடிகை சுருதி ஹரிகரனின் உதவியாளர் கிரண் ஆகியோர் நடிகை சுருதி ஹரிகரன் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று நடிகை சுருதி ஹரிகரனின் தோழி யசஸ்வினி கப்பன்பார்க் போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் ‘நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதிஹரிகரன் என்னிடம் கூறி கண்ணீர் சிந்தினார்’ என்பன போன்ற விவரங்களை கூறியுள்ளார்.

    இதேபோல், ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் வழக்கு சம்பந்தமாக நேற்று போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் ‘நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் தெரிவித்து இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு பற்றி தனக்கு எதுவும் தெரியாது. நடிகர் அர்ஜுன் அப்படிப்பட்ட நபர் இல்லை. அவர் நல்ல மனிதர். படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன், நடிகை சுருதி ஹரிகரன் ஆகியோர் நன்றாக பழகினர். படப்பிடிப்புக்கு வெளியே என்ன நடந்தது? என்பது பற்றி நான் அறிந்து கொள்ளவில்லை’ என்று கூறியுள்ளார்.



    இதேபோல், படத்தின் தயாரிப்பாளர் உமேசும், ‘படப்பிடிப்பின்போது நடிகை சுருதி ஹரிகரன் கூறுவது போன்று எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இதுதொடர்பாக என்னிடம் எந்த புகாரும் வரவில்லை’ என்று நேற்று போலீசாரிடம் கூறினார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan #ArunVaidyanathan #Nibunan #Vismaya 

    மீடூ இயக்கத்தில் பிரபல சாமியாரான நித்யானந்தா மீது ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. #Nithyanandha #metoo
    பெங்களூரு:

    மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

    திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.

    பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.

    நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்‌ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்துகிறேன். இதுவரை இதை சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. மீடூ இயக்கத்தால் துணிச்சல் வந்தது.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    இவர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையின் போது நித்யானந்தாவுக்கு ஆதரவாக வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டார்.

    நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்துவரும் வெளி நாட்டவர் ஒருவரும் மீடூ வில் நித்யானந்தா என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நித்யானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.

    அது மட்டுமல்லாமல், பெண் சீடருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக வீடியோ வெளியானது குறித்தும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை தற்போது பெங்களூரு ராம நகரா கூடுதல் மாவட்ட மற்றும் செ‌ஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. #Nithyanandha #metoo


    ×