என் மலர்tooltip icon

    சினிமா

    சின்மயியை சும்மா விடமாட்டேன்- ராதாரவி ஆவேசம்
    X

    சின்மயியை சும்மா விடமாட்டேன்- ராதாரவி ஆவேசம்

    ‘டத்தோ’ பட்டம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளதால் சின்மயியை சும்மா விடமாட்டேன் என்று ராதாரவி ஆவேசமாக கூறியுள்ளார். #ChinmayiSripada #RadhaRavi

    சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து ராதாரவியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை.

    இப்போது என்னிடம் வந்து இருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. உண்மை மட்டுமே இருக்கிறது.

    மலேசியாவில் ‘டத்தோ’ பட்டம் யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் இருக்கிறார்.

    நான் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது புதுக்கோட்டையில் இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் சென்னை திரும்புவேன். சென்னை வந்ததும் ஆதாரங்களை வெளியிடுவேன்.

    சின்மயி வெளியிட்டு இருக்கும் கடிதமே போலியாக இருக்கும் என்று சந்தேகிக்கிறேன். சின்மயியை சும்மா விடப்போவதில்லை. எனக்கு பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Chinmayi Sripada #RadhaRavi

    Next Story
    ×