search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டர்நெட்"

    • ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • தமிழகத்தின் 21 மாவட்டங்களில் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

    ஜியோ நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பிராட்பேண்ட்-போன்ற இணைய சேவையை ஜியோ 5ஜி கனெக்டிவிட்டி மூலம் வழங்குவதே ஜியோ ஏர் ஃபைபர் சேவை ஆகும். முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர் ஃபைபர் சேவை தற்போது நாடு முழுக்க 115 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஜியோ ஏர் ஃபைபர் சேவை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கிறது. இந்த மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆம்பூர், மதுரை, கரூர், நாமக்கல், நெய்வேலி, பொள்ளாச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர், கும்பகோணம், திருச்சி, திருப்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஜியோ ஏர் ஃபபைர் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 599 என துவங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் 30Mbps வரையிலான இணைய வேகம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் உள்பட 11 ஒ.டி.டி. சேவைக்கான சந்தா, 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர ஜியோ ஏர் ஃபைபர் சேவை ரூ. 899, ரூ. 1199, ரூ. 1499, ரூ. 2499 மற்றும் ரூ. 3999 விலைகளில் வழங்கப்படுகின்றன. ரூ. 3999 சலுகை 30 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1Gbps வேகம் கொண்ட இணைய சேவை, அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைக்கான சந்தா மற்றும் 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.

    • இண்டர்நெட் கேபிளுக்காக சாலை ஓரத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றது.
    • 10 நாட்களாக சீலாத்திகுளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.

    வள்ளியூர்:

    ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 இடங்களில் குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சமூகரெங்கபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்ல கூடிய சாலை ஓரத்தில் இண்டர்நெட் கேபிளுக்கு குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.

    இதுகுறித்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் தற்போது வரை குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யவில்லை. இதனால் 10 நாட்களாக சீலாத்திகுளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விரைவில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்கவில்லை என்றால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்த போவதாக தெற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் அறிவித்துள்ளார்.

    ×