search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage desire"

    திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்ட தாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் மவுலானா ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகைராஜா. இவருடைய மகள் ராஜலட்சுமி என்ற செல்வி (வயது 21). பட்டதாரியான இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் படித்தபோது அதே கல்லூரியில் படித்த திருமால் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலமாக மாறியது.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அஜித்குமார் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். இந்த நிலையில் அவர் திடீரென என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

    இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்னை திருமணம் செய்ய அஜித்குமாருக்கு அறிவுறுத்த வேண்டும்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருமணம் ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.

    பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 20). கல்லூரி மாணவர். இவர் அதே பகுதியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் பிரவீன் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர். இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்ததால் அந்த முயற்சியை கைவிட்டனர். மேலும் மாணவியை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் உல்லாசமாக இருந்த சிவகிரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அந்த சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த பெண் கர்ப்பம் தரித்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் ஈரோடு மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    இது குறித்து மகளிர் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போத அந்த சிறுமி கூறியதாவது:-

    சிவகிரி பகுதியை சேர்ந்த வாழை தோட்டம் கார வலசு ஜே.ஜே. நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் என்னிடம் பழகி ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். திருமணம் செய்வதாக கூறி என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதில் நான் கர்ப்பமாகி இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்த போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் சண்முகத்தை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்தவர் போத்திராஜா. இவரது மகள் திவ்யா (வயது 19). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு அலங்காநல்லூரைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    திவ்யா நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த செல்வமணி, நாம் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறி திவ்யாவை கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கிடையே வேலை முடிந்து வீடு திரும்பிய போத்திராஜா, வீட்டில் திவ்யா மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது திவ்யாவை செல்வமணி கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக போத்திராஜா, அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    திருவையாறு அருகே திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகி ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    திருவையாறு:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தம்பட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளம்பகுடியில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அழகர் மகன் சரத்குமார் (வயது 24) என்பவர் திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இதுபற்றி இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்ததும் அவர்கள் இது தொடர்பாக பேசி இளம்பெண்ணுக்கு திருமண வயது வந்ததும் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறினர்.

    இந்த நிலையில் சரத்குமார் வேறு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முதலில் விரும்பிய பெண்ணை திருமண செய்ய முடியாது என்று கூறி உள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோர் திருவையாறு மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பாகூர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்று திறனாளியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் உறுவையாறு அருகே களிச்சிகுப்பத்தை சேர்ந்த தனது தங்கை மகள் மாற்றுதிறனாளி பெண்ணை சிறுவயது முதல் வளர்த்து வந்தார். 37 வயதாகும் அந்த பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி தங்கராசு (40) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி உல்லாசம் அனுபவித்து வந்தார்.

    இதில் அந்த பெண் 8 மாத கர்ப்பமானார். இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கராசுவிடம் பலமுறை லட்சுமணன் வலியுறுத்தியும் அதற்கு தங்கராசு மறுத்து வந்தார். இதையடுத்து லட்சுமணன் இதுபற்றி பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்குபதிவு செய்து தங்கராசுவை தேடிவருகிறார்.

    இதற்கிடையே திருமணம் செய்வதாக மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய தங்கராசுவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல் அருகே இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் - கரூர் சாலை எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் புவனா (வயது 16). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் கனகபாண்டி (24). இவர் டாடா மேஜிக் வாகனம் ஓட்டி வருகிறார்.

    இருவரும் கடந்த சில நாட்களாக பேசி பழகி வந்துள்ளனர். கனகபாண்டி காதலிப்பதாக புவனாவிடம் கூறி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த புவனாவை தனது வேனில் ஏற்றி தனியார் கல்லூரி அருகே அழைத்துச் சென்றார்.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்தார். அதன் பின்னர் வீட்டுக்கு போக வேண்டும் என புவனா கூறவே சிறிது நேரம் கழித்து தானே கொண்டு போய் விடுவதாக கூறியுள்ளார்.

    அப்போது மழை பெய்யவே அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இரவு முழுவதும் புவனாவிடம் ஆசை வார்த்தை பேசியபடியே கனகபாண்டி உல்லாசமாக இருந்துள்ளார்.

    வேலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அதிகாலையில் புவனாவை தனது நண்பரான சீனிவாச நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (18) என்பவரை வரவழைத்து அவரது மோட்டார் சைக்கிளில் வீட்டில் விடுமாறு கூறியுள்ளார். மோட்டார் சைக்கிளில் புவனாவை அழைத்துச் சென்ற ஸ்டீபன் ராஜ் பாடியூரில் உள்ள உறவினர் வீட்டில் அவரை விட்டுச் சென்று விட்டார். உடல் சோர்வாக காணப்பட்ட புவனாவை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் நடந்த விபரங்களை கூறியுள்ளார். 

    இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. பாலகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மும்தாஜ்மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை கற்பழித்த கனகபாண்டியையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்டீபன் ராஜையும் கைது செய்தனர்.

    கனகபாண்டி மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்ணிடம் திருமண ஆசைகாட்டி 1 பவுன் தங்கம் மற்றும் ரூ.80 ஆயிரம் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சஸ்பெண்டு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை மேல சோத்தூரணி கிராமத்தைச் சேர்ந்த ராமு மகள் பஞ்சவர்ணம் (வயது 33), அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் எனக்கும், முனியாண்டி மகன் ராஜ்குமார் (30) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    என்னை திருமணம் செய்வதாக அவர் கூறினார். இதனை நம்பி 1 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுப்பதோடு கொலை மிரட்டலும் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் (பொ) கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இவர் டெல்லி 8-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி சஸ்பெண்டு ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரையில் திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மைனர் பெண் திருப்பாலையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாய மானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது பெற்றோர் பெருங்குடி போலீசில் புகார் செய்தனர். அதில், மேலூர் அருகே உள்ள பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் மகன் பெரியசாமி (வயது20) என்பவர் திருமண ஆசை காட்டி மகளை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டு இருந்தனர்.

    இதன் அடிப்படையில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

    பின்னர் மைனர் பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை கடத்திய பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

    உவரி அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள குட்டம் தஞ்சபுரத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிளஸ்-1 படித்து விட்டு திசையன்விளையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று கடைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவா (வயது 21) திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக அவரது தாய் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்.

    ×