search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு
    X

    திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு

    உவரி அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள குட்டம் தஞ்சபுரத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிளஸ்-1 படித்து விட்டு திசையன்விளையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று கடைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவா (வயது 21) திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக அவரது தாய் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்.

    Next Story
    ×