search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathon"

    • முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
    • 25 மாணவ- மாணவிவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் கல்வியே நாட்டின் முதல் அரண், போதை பொருள் தடுப்பு மற்றும் சிறுவர்- சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வுக்காக இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 3-வது ஆண்டு தேசிய அளவிலான மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு தணுவர்சன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் உலகநாதன், கவுரவத் தலைவர் டாக்டர் சாத்தப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்த மாரத்தான் போட்டியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ( ஓபன் ) பிரிவில் 20 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 3 பிரிவுகளிலும் சேர்த்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ( ஓபன் ) பிரிவில் முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    இதேபோல் 2 முதல் 5-ம் இடத்தை பிடி த்தவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் 50 வீரர்- வீராங்கனைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    இதேபோல் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர், மாணவிக்கு தலா ரூ.10 ஆயிரம், கோப்பை வழங்கப்பட்டன. 2 முதல் 5-வது இடங்களைப் பிடித்த மாணவ -மாணவிகளுக்கு முறையே தலா ரூ .6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    மேலும் 25 மாணவ- மாணவிவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், ஆலோசகர் ரத்தினவேல் , போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொ றியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை, மடத்துக்குளம் பகுதி பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் வழி நடத்தினர்.
    • குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சிலம்ப போட்டி, சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    உடுமலை:

    76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் கள் சங்கம் , லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி , உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ், பிரியா நர்சிங் கல்லூரி சார்பில் போதைப் பொருள் ,நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மாரத்தான் போட்டி நடத்தியது. போட்டியை முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம்,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்முடன் கலந்து கொண்டனர்.

    ஜூனியர் ,சீனியர், சூப்பர் சீனியர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இந்த மாரத்தான் போட்டியில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக அறக்கட்டளை வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை ஜிவிஜி., கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் கற்பகவல்லி ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இதில் கேப்டன் வெள்ளியங்கிரி, நாயப் சுபேதார் நடராஜ் கலந்து கொண்டனர். பின்னர் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ராகல்பாவி பிரிவிலிருந்து போட்டி ஆரம்பித்து மாரத்தான் ஓடினர்.

    மாரத்தான் போட்டிகளுக்கு உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உடுமலை ,மடத்துக்குளம் பகுதி பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் வழி நடத்தினர். தொடர்ந்து மூன்று இடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கேப்டன் வெள்ளியங்கிரி, உடுமலை ஜிவிஜி., மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் கற்பகவல்லி, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை டிரஸ்டி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சிலம்ப போட்டி, சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி ,பொருளாளர் சிவக்குமார், விளையாட்டு இயக்குனர் வெள்ளைச்சாமி (பணி நிறைவு), சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி நிறுவனர் செல்வராஜ், டிரஸ்டிகள் கணேசன் , என்ஜினீயர் பாலமுருகன் மற்றும் பிரியா நர்சிங் கல்லூரி தவசு மணி செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு தொகுத்து வழங்கினார்.

    • பரமக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
    • துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடியில் உள்ள மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இணைந்து இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை புத்தக கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் புத்தக கண்காட்சியில் தினந்தோறும் மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பிரபலங்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியினை புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழு தலைவர் சேகர் செயலாளர் வழக்கறிஞர் பசுமலை,ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியாக பெருமாள் ராஜா உள்ளிட்ட புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
    • துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடியில் உள்ள மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இணைந்து இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை புத்தக கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் புத்தக கண்காட்சியில் தினந்தோறும் மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பிரபலங்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியினை புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழு தலைவர் சேகர் செயலாளர் வழக்கறிஞர் பசுமலை,ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியாக பெருமாள் ராஜா உள்ளிட்ட புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

    • மினி மாரத்தான் போட்டி 5 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
    • 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் கருணாநிதி நூற்றாண்டு விழா திட்டத்தின் தொடர்ச்சியாக தஞ்சை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அதன் அமைப்பாளர் விஜயகுமார் மினி மாரத்தான் விளையாட்டு போட்டிக்கான நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார்.

    இந்த மினி மாரத்தான் போட்டியை இன்று காலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த போட்டிகளில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு , 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவு, 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு, 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு, 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவு என ஐந்து பிரிவுகளில் இந்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை பட்டுக்கோட்டை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ரவி தலைமையில் ஒருங்கிணைந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வழி நடத்தினர்.

    • போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்காக மினி மாரத்தான் போட்டி நடக்கிறது.
    • உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி மற்றும் உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ் பிரியா நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் போட்டி வருகிற ஆகஸ்ட் 13 .8 .23 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

    உடுமலை இராகல்பாவிபிரிவு முதல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் ரூ. 50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணத் தொகை புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவுக்காக அளிக்கப்படுகிறது.

    உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.9865275123 , 830056811 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். தவிர பள்ளி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு 8.8.23 (செவ்வாய்க்கிழமை )மாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. இப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி பெறுபவருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது

    போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவகுமார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் நாயப் சுபேதார் நடராஜ். ஏ.ஒய்.கான், லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கே .ஆர் .செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு பெற்றது.
    • 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப்பரிசு,கேடயம் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாம்பியன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி மாதாங்கோவில் தெரு, எட்டையாபுரம் சாலை, புதூர்ரோடு, ரெயில் நிலையம், வழியாக எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு பெற்றது.

    இதில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், 2-வது பரிசு 2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 1,000 மற்றும் 7 பேர்களுக்கு ஊக்க பரிசாக ரூ. 500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி செயலர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி உதவி பேராசிரியர் சந்திரன், கல்லூரி அனைத்துதுறை உதவி பேராசியர்கள் செய்திருந்தனர்.

    • முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
    • விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முத்துப்பேட்டை:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை யொட்டி முத்துப்பேட்டையில் இன்று காலை காவல்துறை மற்றும் த.மு.மு.க. ஆகியவை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மினி மாரத்தானை முத்துப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவிலூர் பைபாஸ் தனியார் வனத்துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் மன்னார்குடி சாலை, ஆண்கள் பள்ளி, பழைய பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர் வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

    இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    முடிவில் போட்டியில் வென்ற முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதில் அல்மஹா அறக்கட்டளை நிறுவன ஹைதர் அலி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், த.மு.மு.க. மாநில நிர்வாகி வக்கீல் தீன் முகம்மது, நகர தலைவர் அலிம், மன்சூர், காமிம், நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இளைஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    போதை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந் தேதி கடைபிடிக்கப்படு கிறது. இதனை முன்னிட்டு திருக்கோவிலூரில் மாரத் தான் போட்டி கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் துறையின் சார்பில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 13 வயது முதல் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள், இளை ஞர்கள் மற்றும் 60 வயதிற் குட்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர். இந்த மாரத்தான் போட்டி யில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். திருக்கோ விலூர் அரசினர் அங்கவை சங்கவை பெண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காலை 7 மணி அளவில் மாரத்தான் போட்டி தொடங்கியது.

    போட்டியை கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 5 முனை சந்திப்பு, கிழக்கு தெரு, தெற்கு வீதி, ஏரிக்கரை வழி யாக ஆசனூர் ரோட்டில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு வரும் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த வெற்றி யாளர்களுக்கு முதல் பரி சாக ரூ.5000, 2-வது பரி சாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றி தழ்களை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • பள்ளி மாணவ -மாணவிகளு க்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
    • ஆறுதல் பரிசு தலா 25 நபர்களுக்கு வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தணுவர்சன் அறக்கட்டளை சார்பில் கல்வியே நாட்டின் முதல் அரண், போதை பொருள் தடுப்பு மற்றும் சிறுவர்- சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வுக்காக வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது.ஆண் மற்றும் பெண் ( ஓபன் ) பிரிவில் 20 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டமும் நடைபெற உள்ளன.

    இதில் ஆண் மற்றும் பெண் (ஓபன்) பிரிவிற்கு நுழைவு கட்டணமாக ரூ.250- செலுத்த வேண்டும். முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    மேலும் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் மற்றும் ஆறுதல் பரிசாக 50 பேர்களுக்கும் பரிசு வழங்கப்படும்.

    இதே போல் பள்ளி மாணவ -மாணவிகளு க்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். முதல் பரிசு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்க ப்படும்.

    இந்த பிரிவிலும் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் மற்றும் ஆறுதல் பரிசு தலா 25 நபர்களுக்கு வழங்கப்படும்.

    இந்த மாரத்தானில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.

    இந்தியாவில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும்.

    நிர்வாகம் எடுக்க முடிவே இறுதியானது.

    போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7598093559 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தணுவர்சன் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் உலகநாதன் தெரிவித்துள்ளார்.

    • உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
    • பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும், பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தூரம் நிர்ணியக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த மராத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மாரத்தானில் ஆண்களுக்கான போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும், பெண்களுக்கான போட்டியை திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு பெருந்துறையில் முடிவுற்றது. ஆண்கள் பிரிவின் சார்பில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

    நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

    இப்போட்டியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் மற்றும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் திரளாக பங்கேற்றனர். 

    இந்த மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
    ×