search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "man arrested"

    • வெங்கடேசன் தினசரி ஒரு சைக்கிள் திருடுவதை இலக்காக வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார்.
    • திருடிய சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று மதுகுடித்தும், உல்லாசமாக ஊர் சுற்றியும் செலவு செய்து இருக்கிறார்.

    போரூர்:

    சென்னை, அசோக் நகர், மேற்கு மாம்பலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி திருடு போனது.

    இதுகுறித்து போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அசோக் நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் டிப்-டாப் நபர் ஒருவர் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மேற்கு மாம்பலம், ரெயில்வே பார்டர் சாலையில் சந்தேகப்படும் படி சைக்கிளில் வந்த டிப்-டாப் நபரிடம் போலீசார் விசாரித்த போது அவர், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கிற பாபு (53) என்பதும் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 41 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வெங்கடேசன் தினசரி ஒரு சைக்கிள் திருடுவதை இலக்காக வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார். மேலும் திருடிய சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று மதுகுடித்தும், உல்லாசமாக ஊர் சுற்றியும் செலவு செய்து இருக்கிறார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அந்த சைக்கிள்கள் அசோக் நகர் போலீஸ் நிலையம் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த இடம் புதிய சைக்கிள் கடை போல் காட்சி அளிக்கிறது.

    கைதான வெங்கடேசனிடம் இந்த திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உமா சங்கரை கைது செய்தனர்.
    • அவரிடமிருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த சுல்தான் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (34). அரிசி மண்டி உரிமையாளர். இவர் சம்பவத்தன்று தனது கடையின் முன்பு தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

    பின்னர் வாகனத்தை வந்து பார்த்தபோது அதில் பேட்டரியை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரபு புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இதேப்போல் அதே பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (50).டெம்போவை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சம்பத் தன்று இவரது டெம்போவில் மர்ம நபர் யாரோ பேட்டரியை திருடி விட்டார்.

    இது குறித்தி காந்தி புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் புளியம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் புளியம்பட்டி டானாபுதூர் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்கிற உமா சங்கர் (47) என தெரிய வந்தது. இவர் தற்போது சத்தியமங்கலம் அடுத்த மலையடி புதூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருவதும் இரண்டு வாகனங்களின் பேட்டரியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உமா சங்கரை கைது செய்தனர். அவரிடமிருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    • கடந்த 2020-ம் ஆண்டு எனது பேஸ்புக் பக்கத்தை பார்த்த போது விளம்பரம் ஒன்று வந்தது.
    • நான் விசாவை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தாரணி (வயது 27). இவர் காட்டூர் போலீசில் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கம்யூட்டர் என்ஜினீயரிங் படித்து முடித்து உள்ளேன். கடந்த 2020-ம் ஆண்டு எனது பேஸ்புக் பக்கத்தை பார்த்த போது விளம்பரம் ஒன்று வந்தது. இதில் நார்வே நாட்டில் வேலை இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து நான் அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.

    அதன் பின்னர் சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் இருந்து மேலாண்மை இயக்குனர் முருகன் பேசுவதாகவும், அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கூறினார். இதனையடுத்து நார்வே நாட்டில் வேலை கிடைக்க போகிறது என்ற மகிழ்ச்சியில் நானும் எனது கணவரும் அந்த அலுவலகத்துக்கு சென்றோம்.

    அங்கு இருந்த முருகன் விசா, விமான டிக்கெட் உள்பட ரூ.6 லட்சம் செலவாகும் என கூறினார். இதனையடுத்து நான் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அதன் பின்னர் அவர் கொடுத்த கூகுள்பே எண்ணுக்கு பல்வேறு பரிவர்த்தனைகளில் ரூ.5 லட்சம் அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் முருகன் நார்வே நாட்டிக்கு செல்வதற்கு விசா கொடுத்தார். விமான டிக்கெட் பின்னர் வரும் என தெரிவித்தார்.

    நான் விசாவை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் விசாரித்த போது முருகன் என்னை போல 10-க்கு மேற்பட்டவர்களிடம் இதே போல நார்வே நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. எனவே நான் கொடுத்த ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணிடம் மோசடி செய்த முருகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • கந்துவட்டி கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
    • கந்து வட்டி சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை (53) இவர், சேடபட்டியில் வாழைப் பழக்கடை வைத்துள்ளார்.

    தன்னுடைய வாழைப்பழக்கடையை விரிவுபடுத்துவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு சேடபட்டி கணபதிபட்டி தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி (65) என்பவரிடம் மோட்டார் சைக்கிள் உரிமம் புத்தகத்தைக் கொடுத்து ரூ.20 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், இதுவரை வாங்கிய தொகை மற்றும் வட்டி சேர்த்து ரூ.27 ஆயிரம் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வட்டிக்கு பணம் கொடுத்த ரத்தினசாமி என்பவர், மேலும், தனக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்தால் தான் உன்னுடைய மோட்டார் சைக்கிள் உரிமம் புக்கை கொடுப்பேன் என தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யாதுரை செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் கந்து வட்டி சட்டத்தின்கீழ் ரத்தினசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்துவட்டி சட்டத்தில் செம்பட்டி பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம்

    பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணர் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளக்கிணர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் சென்னை வடபழனியைச் சேர்ந்த பாண்டியன் (58) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் பகுதியில் சினிமா பாணியில் பணம் பறிக்க முயன்ற வாலிபரை ஒரு பெண், செருப்பால் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ManArrested
    ஜாம்ஷெட்பூர்:

    திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பண மோசடி செய்வதற்காக வினோதமான முறைகளை கதாபாத்திரங்கள் கையாளும் விதங்கள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம்.

    அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றார்போல் உடை, நடை, பேச்சு என அனைத்தையும் மாற்றிக் கொண்டு நடிப்பவர்களை காணும்போது நமக்கே உண்மையான அதிகாரி போல் தான் தென்படுவார்கள். அவர்களை காணும்போது நாமும் இது தான் அவர்களது கதாபாத்திரம் என உறுதி செய்து விடுவோம்.

    ஆனால், சிறிது நேரம் கழித்து படத்தின் கதை நகர நகர, பணத்திற்காக வேடமிட்டு  ஏமாற்றியுள்ளதும், கதாபாத்திரம் அதுவல்ல  என்பதும் தெரிய வரும். இந்த சினிமா பாணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.



    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்று ஒருவர், தான் லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி  சோதனை செய்துள்ளார். அதன்பின் அவரது கணவர் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்திருப்பதாகவும், அதனை மறைக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    அவரது பேச்சில் இருந்த தெளிவையடுத்து, நிஜமாகவே இவர் அதிகாரிதான் என நம்பியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் தனது தோழிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சந்தேகிக்கவே அந்த நபர் குறித்து விசாரித்து வந்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த நபர் பணத்திற்காக இவ்வாறு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து அந்த பெண் பணம் தருவதாக கூறி  மாங்கோ நகருக்கு தனியே வரச்சொல்லிவிட்டு, வீட்டில் இருந்து கிளம்பும்போது போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த நபரை சரியான நேரத்திற்கு வந்து போலீசாரும் கைது செய்தனர். கைது செய்வதற்கு முன், தான் ஏமாற்றம் அடைந்த ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக போலீசார் முன்னதாகவே அந்த நபரை செருப்பால் சரமாரியாக தாக்கினார். #ManArrested   

    தேன்கனிகோட்டை அருகே மகனை அடித்த தகராறில் அங்கன்வாடி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    தேன்கனிகோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள என்.உச்சனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 36). இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கும் சந்திரகலா மகனுக்கும் இடையே வாய் தகராரு ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரகலா என் மகனை ஏன் அடித்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆசிரியையை அவர் தகாத வார்த்தைகளால் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சந்திரகலா தேன்கனிகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலைவாணி நாராயண சாமியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
    கனடாவில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் இந்தியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #IndianManArrested
    ஒட்டாவா:

    கனடாவின் ஒட்டாவா பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உட்பட 29 பேர் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பஸ் நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக வந்த டிரக், பஸ்சின் மீது  வேகமாக மோதியது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து தொடர்பாக டிரக் ஒட்டுனர் ஜஸ்கிரத் சிங் சித்து (இந்தியர்) மீது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மெபோர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நெடுஞ்சாலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும், அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி இனிஸ் கார்டினல் நேற்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த வழக்கின் முக்கிய ஆவணமான, விபத்து நடந்த பகுதியின் தடயவியல் நிபுணர்கள் அளித்த ஆதாரங்களில், எவ்வித இயற்கை காரணிகளும் இவ்விபத்துக்கு காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது.  சித்து நெடுஞ்சாலையின் குறியீடுகளை சரியாக பின்பற்றவில்லை.



    இவ்விபத்தை சித்துவால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. நெடுஞ்சாலைகளின் வளைவுகளில் இருக்கும் பெரிய குறியீடுகளை கவனிக்காமலும், ஒளிரும் விளக்குகளை கவனிக்காமலும் அலட்சியமாக வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் இந்த கோரச்சம்பவம் நடந்திருக்கிறது. எனவே விபத்துக்கு காரணமான சித்துவிற்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #IndianManArrested

     
    ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர். #GST #GSTFraud #Mumbai
    மும்பை:

    தனியார் நிறுவனங்கள் போலி ரசீதுகளை தாக்கல் செய்து ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாங்காத பொருட்களை வாங்கியது போல ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் மராட்டிய மாநிலம் ராய்காட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஜி.எஸ்.டி.யில் ரூ.650 கோடி செலவுக்கான ரசீதுகளை தாக்கல் செய்து, கட்டிய வரியில் ரூ.110 கோடியை திரும்ப பெற்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த நிறுவனத்தை சேர்ந்த ரகேஷ் அனுமன் பிரசாத் (வயது38), அவரது உறவினர் ஆனந்த் (40) ஆகியோர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.110 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வாங்காத பொருட்களுக்கு போலி ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரகேஷ் அனுமன் பிரசாத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

    மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.

    இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறியதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    மேற்கு வங்க மாநிலத்தில் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்தனர். #GoldSmuggled #Myanmar #3Crore
    சிலிகுரி:

    மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நோக்கி சென்ற காம்ருப் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மநபர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு வங்க மாநிலம் புது ஜல்பய்குரி ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்தபோது மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது மேற்கு வங்க மாநிலம் கூக்ளியை சேர்ந்த ராஜூ ஆதாஷ் என்பவர் இடுப்பில் சுற்றி இருந்த பெல்ட் மற்றும் ஷூவில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 9 கிலோ எடையுள்ள, ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்தனர்.

    அந்த தங்க கட்டிகள் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக கடத்திவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. 
    வேலாயுதம்பாளையத்தில் காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    வேலாயுதம்பாளையம்:

    ஸ்ரீரங்கம் அருகே உள்ள குழுமணி வடக்கு மூலக்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் (59) இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். 
    இதை அறிந்த அரவக்குறிச்சி பெரிய திருமங்கலம் வடகரையைச் சேர்ந்த நல்லசுப்பிரமணியம் என்பவர் முருகேசனிடம் உங்களது மகனுக்கு புகளுரில் உள்ள செய்தித்தாள் காகித ஆலையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் ரூ. 3 லட்சம் வாங்கியுள்ளார். 

    ஆனால்  கூறியபடி நல்ல சுப்பிரமணியம் வேலை வாங்கி  தரவில்லை. உடனே முருகேசன் பணத்தைகேட்டார். ஆனால் நல்ல சுப்பிரமணியம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து நல்லசுப்பிரமணியை கைது செய்தனர். 
    ×