என் மலர்
நீங்கள் தேடியது "anganwadi teacher"
தேன்கனிகோட்டை அருகே மகனை அடித்த தகராறில் அங்கன்வாடி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
தேன்கனிகோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள என்.உச்சனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 36). இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கும் சந்திரகலா மகனுக்கும் இடையே வாய் தகராரு ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரகலா என் மகனை ஏன் அடித்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆசிரியையை அவர் தகாத வார்த்தைகளால் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சந்திரகலா தேன்கனிகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலைவாணி நாராயண சாமியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.






