என் மலர்
நீங்கள் தேடியது "united kingdom"
மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறியதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். #RahulGandhi
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடுகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்கள் அவர் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசுகிறார். மேலும், ஹம்பர்க் மற்றும் பெர்லின் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பேசவுள்ளார்.
அதைத்தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடுவதுடன், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்திய வம்சாவளியினருடன் ராகுல் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi
தாய்லாந்தில் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #ThaiCaveBoys #TherasaMay
லண்டன்:
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.
குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் அனைவரும் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
எண், 10 டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமரின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை அந்நாட்டு பிரதமர் தெரசா மே சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #ThaiCaveBoys #TherasaMay






