search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycle theft"

    • வெங்கடேசன் தினசரி ஒரு சைக்கிள் திருடுவதை இலக்காக வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார்.
    • திருடிய சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று மதுகுடித்தும், உல்லாசமாக ஊர் சுற்றியும் செலவு செய்து இருக்கிறார்.

    போரூர்:

    சென்னை, அசோக் நகர், மேற்கு மாம்பலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி திருடு போனது.

    இதுகுறித்து போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அசோக் நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் டிப்-டாப் நபர் ஒருவர் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மேற்கு மாம்பலம், ரெயில்வே பார்டர் சாலையில் சந்தேகப்படும் படி சைக்கிளில் வந்த டிப்-டாப் நபரிடம் போலீசார் விசாரித்த போது அவர், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கிற பாபு (53) என்பதும் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 41 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வெங்கடேசன் தினசரி ஒரு சைக்கிள் திருடுவதை இலக்காக வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார். மேலும் திருடிய சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று மதுகுடித்தும், உல்லாசமாக ஊர் சுற்றியும் செலவு செய்து இருக்கிறார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அந்த சைக்கிள்கள் அசோக் நகர் போலீஸ் நிலையம் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த இடம் புதிய சைக்கிள் கடை போல் காட்சி அளிக்கிறது.

    கைதான வெங்கடேசனிடம் இந்த திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார்.
    • துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது.

    கோவை:

    கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நடேஷ்குமார் (வயது 42). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    நடேஷ்குமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பினார். அங்கு சைக்கிள் நிறுத்தும் பகுதியில் தனது சைக்கிளை நிறுத்தி வீட்டுக்குள் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது சைக்கிளை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    உடனே நடேஷ்குமார் துரத்தி அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபரை துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் துடியலூர் வெற்றிலைகாளி பாளையம் மாரியம்மன் கோவில் 2-வது வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பதும் கூலிவேலை செய்து வந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர் அருகே பள்ளி மாணவியிடம் நூதன முறையில் சைக்கிள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Theftcase

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ரம்யா என்ற மாணவியிடம் சைக்கிள் நூதன முறையில் திருடப்பட்டது. நேற்று முன்தினம் வழக்கம்போல் காலையில் பள்ளிக்குச் சென்றார். அப்போது பள்ளி வளாகத்தில் டிப்டாப் ஆசாமி ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த மாணவிகளிடம் நான் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறேன். அவசர வேலையாக வெளியில் செல்வதாகக் கூறி அங்கிருந்த மாணவி ரம்யாவிடம் புது சைக்கிளை வாங்கி கொண்டு சென்றார். மதியம் வரை திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மாணவி பின்னர் அங்கிருந்து சக மாணவிகளிடம் தெரிவித்தும் ஆசிரியரிடம் கூறினார். பின்னர் விசாரித்தபோது அப்படி ஒரு நபர் இங்கு பணிபுரியவில்லை என்று தெரியவந்தது.

    மாணவியின் பெற்றோர்கள் பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி மாணவிகளிடமும் அப்பகுதி பெற்றோர்களிடமும் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

    ×