search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaysia"

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கதிரியக்க இரிடியம் மாயமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Radioactive #Malaysia
    கோலாலம்பூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே ஷா ஆலம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்காக செரம்பன் பகுதியில் இருந்து கதிரியக்க தன்மை வாய்ந்த இரிடியத்தை எடுத்துக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கோலாலம்பூர் அருகே சென்றபோது இந்த பொருள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    23 கிலோ எடை கொண்ட இந்த இரிடியம், ரேடியோகிராபி தொழில்துறையில் பயன்படுத்தக்கூடியது ஆகும். கதிரியக்க தன்மை கொண்ட இந்த பொருள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால், தவறான வழிக்கு பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே இரிடியம் மாயமான சம்பவம், மலேசிய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரை அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

    மிகவும் ஆபத்தான இரிடியம் மாயமான தகவலை அறிந்த ஐ.நா. அணுசக்தி நிறுவனம், ‘கதிரியக்க பொருள் மாயமாகி அல்லது திருடப்பட்டு பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிட்டால், அணுகுண்டு அல்லது பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்துவிடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.  #Radioactive #Malaysia  #tamilnews 
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சி முகாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சி முகாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் வருகிற திங்கட்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்கள். பயிற்சி முகாம் பயணத்துக்காக சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி ஏற்கனவே சென்னை வந்து விட்டார். 

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சென்னையின் எப்.சி. அணியின் 4 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மலேசியா செல்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு சென்று அணியினருடன் இணைகிறார்கள்.

    மலேசியாவில் 4 வாரம் பயிற்சியில் ஈடுபடும் சென்னையின் எப்.சி. அணியினர் அங்குள்ள அணியுடன் 4 நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். பயிற்சி முகாம் முடிந்து சென்னையின் எப்.சி. அணி செப்டம்பர் 11-ந் தேதி சென்னை திரும்புகிறது.  #ChennaiyinFC
    ஊழல் பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் 60 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.), கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். உடனே அவர் மீதான ஊழல் புகார்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    ‘1 எம்.டி.பி.’ என்று அழைக்கப்படுகிற 1 மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் அங்கமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதி 10.3 மில்லியன் டாலரை ( சுமார் ரூ.69 கோடி) தன் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி ஊழலில் ஈடுபட்டார் என்பதுதான் நஜிப் ரசாக் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு.

    இந்த ஊழல் பணத்தை அவர் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்து உள்ளதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வழக்கு, கோலாலம்பூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நஜிப் ரசாக் மீது நீதிபதி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி பதிவு செய்தார்.

    அப்போது கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் அமைதியாக நின்ற நஜிப் ரசாக், பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதியின் சகோதரர், நஜிப் ரசாக் கட்சியில் முக்கிய பதவி வகித்தவர். எனவே அவர் இப்போது மாற்றப்பட்டு, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு நேற்று விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.  #Malaysia #NajibRazak #Tamilnews 
    மலேசியா நாட்டில் கடத்தப்பட்ட இந்தியர் சஞ்சீவ் பத்திரமாக மீட்கப்பட்டார் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 28ம் தேதி மர்ம நபர்கள் சிலர் இவரை கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கிடைத்த்து. வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    இந்நிலையில், கடத்தப்பட்ட சஞ்சீவ் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தொடர்புடைய 3 பாகிஸ்தானியர்களை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக, சுஷ்மா சுவராஜுக்கும் தகவல் கொடுத்தனர்.

    கடத்தப்பட்ட இந்தியர் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு சுஷ்மா சுவராஜ் தூதரக அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். 

    தகவலறிந்து மத்திய பிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    அதில், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் மலேசியன் ஹை கமிஷன் மற்றும் மலேசிய போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பையே முக்கிய அம்சமாக கொண்டு சுஷ்மா சுவராஜ் செயல்பட்டு வருகிறார் என டுவிட்டரில் பாராட்டியுள்ளார். #SushmaSwaraj
    மங்கோலிய மாடல் அழகி அல்டன்ட்டுயா ஷாரிபு கொல்லப்பட்ட விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹாதிரை சந்தித்து மறு விசாரணை நடத்த கோரிக்கை விடுக்க இருப்பதாக மாடல் அழகியின் தந்தை கூறியுள்ளார். #Malaysia #AltantuyaShaariibu #MahathirMohamad
    அங்கோர்வாட்:

    மங்கோலியா நாட்டை சேர்ந்த பிரபல மாடல் அழகியான அல்டன்ட்டுயா ஷாரிபு கடந்த 2006-ம் ஆண்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இரு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும், மலேசிய முன்னாள் பிரதமர் நசீப் ரசாக்கின் நண்பரும் அரசியல் ஆலோசகருமான அப்துல் ரசாக் பகிண்டாவுக்கும் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

    கடந்த 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழலில் அப்துல் ரசாக் பகின்டாவுக்கும், அல்டன்ட்டுயா ஷாரிபுவுக்கும் பங்கு இருந்ததாகவும், இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.



    இந்த கொலை தொடர்பாக அப்துல் ரசாக் பகின்டா மீது குற்றம்சாட்டப்பட்டு பின்னர் கடந்த 2008-ம் ஆண்டில் அவர் விடுதலையும் செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. 

    இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தேர்தலில் மஹாதிர் முகமது பிரதமராக பதவி ஏற்றார். புதிய பிரதமர் மஹாதிர் முகமதுவுக்கு வாழ்த்து தெரிவித்த மங்கோலியா அதிபர் பட்டுல்கா கல்ட்மா தனது வாழ்த்து செய்தியில், இரு குழந்தைகளுக்கு தாயான மங்கோலியா நாட்டுப் பெண்ணும் மாடல் அழகியுமான அல்டன்ட்டுயா ஷாரிபு மலேசியாவில் கொல்லப்பட்ட விவகாரத்தை உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கொல்லப்பட்ட மாடல் அழகியின் தந்தை செடவ் ஷாரிபு மலேசியா தலைமை வழக்கறிஞரை மலேசியாவில் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செடவ் ஷாரிபு, தனது மகளின் கொலை வழக்கை மீண்டும் விசாரித்து உரிய நீதி வழங்க வேண்டும் என பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். #Malaysia #AltantuyaShaariibu #MahathirMohamad
    மலேசியாவில் கடந்த 5 மாதங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கோலாலம்பூர்:

    மலேசிய அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 4,000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அருகாமை நாடுகளை குறி வைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். 

    இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றி பணியில் வைத்துள்ளனர். 

    இந்நிலையில், சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கடந்த 5 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார். முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்கள், சுற்றுலா மற்றும் மாணவர் விசாவில் வந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என பலர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலர் மசாஜ் மையங்களில், விபச்சார விடுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

    ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரிடம் ஊழல் தடுப்பு போலீசார் இன்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

    அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

    அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பணக்கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின. நஜிப் ரசாக்க்கிடம் ஊழல் தடுப்பு போலீசார் சமீபத்தில் இரண்டு நாட்கள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். கோலாலம்பூர் நகரில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு தலைமையகத்தில் 3 அடுக்குகளாக நடைபெற்ற இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ரோஸ்மாவின் வழக்கறிஞர் குமரேந்திரன், ரோஸ்மா அளித்த வாக்குமூலத்தை விசாரணை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவும், எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் வர தயாராக ரோஸ்மா இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #Malaysia #NajibRazak
    மலேசிய அரசின் அட்டார்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாம்மி தாமஸ் நியமனத்துக்கு அந்நாட்டு மன்னர் சுல்தான் முஹம்மது ஒப்புதல் அளித்துள்ளார். #Malaysiaattorneygeneral #ethnicIndianttorneygeneral
    கோலாலம்பூர்:

    இயற்கை எழில் கொஞ்சும் மலேசிய நாட்டில் சுமார் 3 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் மூன்றில் இரு மடங்கினர் பூர்வீக மலாய் மக்களாவார்கள். இதுதவிர புத்த, இந்து, கிறிஸ்தவ மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் இந்நாட்டில் மலேசிய அரசின் ஆட்சி மதமாக இஸ்லாம் இருந்து வருவதால், இங்கு பெரும்பாலும் அரசின் உயர் பதவிகளை முஸ்லிம்களே வகித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மலேசிய அரசின் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றிவந்த முஹம்மது அபான்டி அலி என்பவர் வகித்த பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாம்மி தாமஸ் என்பவரின் நியமனத்துக்கு மன்னர் சுல்தான் முஹம்மது ஒப்புதல் அளித்துள்ளார்.

    கடந்த 55 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பதவியில் நியமிக்கப்படும் முஸ்லிம் அல்லாத நபர் இவர் என்பதால் இந்த நியமனத்துக்கு அந்நாட்டில் பலதரப்பினரிடையே அதிருப்தி நிலவி வருவதாக தெரிகிறது.



    இதை உணர்ந்துள்ள மன்னர் முஹம்மது சுல்தான், நமது நாட்டில் அனைவருக்கும் சம உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். இதில் மதம் மற்றும் இன வேறுபாடு காட்டாமல் அனைவரும் புதிய அட்டார்னி ஜெனரலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். #Malaysiaattorneygeneral #ethnicIndianttorneygeneral  
    ஆசிய கோப்பை பெண்கள் டி 20 கிரிக்கெட் போட்டியில் மலேசியா அணியை 27 ரன்களில் சுருட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது. #AsiaCupt20 #India #Malaysia
    கோலாலம்பூர்:

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    தொடக்க நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. மிதாலிராஜ் அபாரமாக விளையாடினார். அவர் 69 பந்தில் 97 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.



    இதையடுத்து, 170 ரன்களை இலக்காக கொண்டு மலேசியா விளையாடியது. ஆனால், இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மலேசியா அணி 13.4 ஓவரில் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    அந்த அணியில் 6 பேர் டக் அவுட் ஆனார்கள்.

    இந்திய தரப்பில் பூஜா வஸ்தர்கர் 3 விக்கெட்டும், பட்டீல், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும், பாண்டே ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் இந்தியா 142 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
    இந்தோனிசியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்றடைந்த இந்திய பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #modimeetsMahathir
    கோலாலம்பூர்:

    இந்தோனேசியா நாட்டுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, உற்பத்தி குறித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று மலேசியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார். அதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படும் மோடி, நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். #modimeetsMahathir
    இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார். #PMModithreenationtour #PMModiIndonesia
    புதுடெல்லி:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு சென்றார்.

    பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த நான்காண்டுகளில் அவர் இந்தோனேசியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    30-ம் தேதி இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, 31-ம் தேதி சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அவரது பயண திட்டம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த பயண திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் செல்வதற்கு முன்னதாக மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மஹாதிர் முஹம்மதுவை மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் வரும் 31-ம் தேதி இந்தியா - சிங்கப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி, தொழிலதிபர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் உரையாற்றுகிறார்.

    ஜூன் முதல் தேதி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நான்யாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றும் அவர், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள இந்தியர்களையும் சந்திக்கிறார்.



    மகாத்மா காந்தி மறைந்தபோது அவரது அஸ்தி கரைக்கப்பட்ட சிங்கப்பூரின் கிளிப்போர்ட் பையர் பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை ஜூன் 2-ம் தேதி திறந்து வைக்கிறார். #PMModithreenationtour #PMModiIndonesia 
    கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோ மீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளார். #Singaporehighspeedraillink
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டின் அருகாமையில் இருக்கும் செல்வ செழிப்பு மிகுந்த நாடான சிங்கப்பூர், குடிநீர் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகளுக்கு மலேசியாவை நாடி வாழ வேண்டிய நிலையில் உள்ளது.

    முன்னர், மலேசியா பிரதமராக மஹாதிர் முஹம்மது பதவிவகித்தபோது, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளில் சற்று பூசல் காணப்பட்டது. ஆனால், அவருக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான அரசு சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமான உறவுகளை பேணி வந்தது.

    சமீபத்தில் மலேசியா பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மஹாதிர் முஹம்மது தற்போது மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சுமார் 2500 கோடி அமெரிக்க டாலர் அளவிலான கடன் சுமையில் மலேசிய அரசு சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.

    முன்னாள் பிரதமர் நஜீப் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்யப் போவதாகவும் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளார்.

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சாலை வழியாக சிங்கப்பூர் சென்றடையும் பயணநேரம் 5 மணி நேரமாக உள்ளது. விமானம் மூலம் ஒருமணி நேரத்தில் சென்றடையலாம் என்பதால் சிங்கப்பூர் - கோலாலம்பூர் விமானச் சேவைகள் வெகு பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    இதை கருத்தில் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு நஜீப் ரசாக் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூர் - கோலாலம்பூர் இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த புல்லட் ரெயில் மூலம் சிங்கப்பூர் - கோலாலம்பூர் சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் சென்றடையலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    வரும் 2026-ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் 1400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பரிசீலனை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாகவும், இது இறுதி முடிவு என்றும் மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Singaporehighspeedraillink
    ×