search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுவிசாரணை"

    சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மறுவிசாரணைக்கு உத்தரவிடுமாறு மும்பை வக்கீல்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 1-12-2014 மராட்டிய மாநிலம் நாக்பூரில் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதால் இதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கூடாது என மகாராஷ்டிரா மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை நடைபெற்று வந்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாகவும், மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் கடந்த 19-4-2018 அன்று அறிவித்தனர்.

    இந்நிலையில்,  நீதிபதி லோயா மரணத்தில் சுதந்திரமான விசாரணைக்கு அனுமதி மறுத்த சுப்ரீம் கோர்ட்டில் மும்பையை சேர்ந்த வக்கீல்கள் கடந்த 21-5-2018 அன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.


    இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி லோயா மரணத்தில் மறுவிசாரணைக்கு உத்தரவிட நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘மறுவிசாரணை கோரும் சீராய்வு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை இந்த அமர்வு கவனமாக பரிசீலித்தது. ஆனால், ‘மறுவிசாரணைக்கு உத்தரவிடுவதற்கான காரணம் எதுவும் அவற்றில் காணப்படாததால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர். #SCdismissesReviewPetition in #JudgeLoyacase # #JudgeLoyacaseReviewPetition
    மங்கோலிய மாடல் அழகி அல்டன்ட்டுயா ஷாரிபு கொல்லப்பட்ட விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹாதிரை சந்தித்து மறு விசாரணை நடத்த கோரிக்கை விடுக்க இருப்பதாக மாடல் அழகியின் தந்தை கூறியுள்ளார். #Malaysia #AltantuyaShaariibu #MahathirMohamad
    அங்கோர்வாட்:

    மங்கோலியா நாட்டை சேர்ந்த பிரபல மாடல் அழகியான அல்டன்ட்டுயா ஷாரிபு கடந்த 2006-ம் ஆண்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இரு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும், மலேசிய முன்னாள் பிரதமர் நசீப் ரசாக்கின் நண்பரும் அரசியல் ஆலோசகருமான அப்துல் ரசாக் பகிண்டாவுக்கும் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

    கடந்த 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து மலேசியாவுக்கு இரு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழலில் அப்துல் ரசாக் பகின்டாவுக்கும், அல்டன்ட்டுயா ஷாரிபுவுக்கும் பங்கு இருந்ததாகவும், இந்த விவகாரம் வெளியே கசியாமல் இருப்பதற்காக அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.



    இந்த கொலை தொடர்பாக அப்துல் ரசாக் பகின்டா மீது குற்றம்சாட்டப்பட்டு பின்னர் கடந்த 2008-ம் ஆண்டில் அவர் விடுதலையும் செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. 

    இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தேர்தலில் மஹாதிர் முகமது பிரதமராக பதவி ஏற்றார். புதிய பிரதமர் மஹாதிர் முகமதுவுக்கு வாழ்த்து தெரிவித்த மங்கோலியா அதிபர் பட்டுல்கா கல்ட்மா தனது வாழ்த்து செய்தியில், இரு குழந்தைகளுக்கு தாயான மங்கோலியா நாட்டுப் பெண்ணும் மாடல் அழகியுமான அல்டன்ட்டுயா ஷாரிபு மலேசியாவில் கொல்லப்பட்ட விவகாரத்தை உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கொல்லப்பட்ட மாடல் அழகியின் தந்தை செடவ் ஷாரிபு மலேசியா தலைமை வழக்கறிஞரை மலேசியாவில் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செடவ் ஷாரிபு, தனது மகளின் கொலை வழக்கை மீண்டும் விசாரித்து உரிய நீதி வழங்க வேண்டும் என பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். #Malaysia #AltantuyaShaariibu #MahathirMohamad
    ×