என் மலர்
நீங்கள் தேடியது "former pm"
- கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா இறுதிச்சடங்கு நடந்தது.
- அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது.
அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஒடிங்காவின் மறைவு 7 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நைரோபி விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நைரோபி விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.
எனவே சில மணி நேரம் கழித்தே விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் மோய் கால்பந்து மைதானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தடுப்புச் சுவரை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எனவே பொதுமக்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் மக்கள் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் கென்யாவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆப்பிரிக்க நாடான சாட்டில் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா கலவரத்தை தூண்டினார்.
- இதற்காக அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
என்ஜாமினா:
ஆப்பிரிக்க நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா (41). தற்போது பிரதான எதிர்க்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் 30 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அதிபர் இட்ரிஸ் டெனி இட்னோ கொல்லப்பட்டார்.
இதனால் அவரது மகன் மஹாமத் டெபி ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் பதவியை சட்டப்பூர்வமாக மாற்றினார்.
இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரான மஸ்ரா, அதிபர் மஹாமத் டெபியை கடுமையாக விமர்சித்தார்.
இதனையடுத்து லோகோன் ஆக்சிடென்டல் பகுதியில் கடந்த மே மாதம் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 35 பேர் பலியாகினர்.
இதற்கு மஸ்ராவே முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. எனவே கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு தலைநகர் என்ஜாமினாவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் மஸ்ராவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.15 கோடி அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மஸ்ரா இதனை எதிர்த்து மேல்–மு–றை–யீடு செய்ய போவ–தாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய சம்பவம் சாட் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
33 ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், மாநிலங்களவையில் சிங் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். நான்கு மாதங்கள் மேலவையில், ஜூன் மாதம் பி.வி.நரசிம்மராவ் அரசின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பதவியேற்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.
காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.
எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.
தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்- சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால், கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவி அக்கட்சிக்கு கிடைக்கிறது. அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
மலேசியாவில் 60 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.), கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். உடனே அவர் மீதான ஊழல் புகார்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.
‘1 எம்.டி.பி.’ என்று அழைக்கப்படுகிற 1 மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் அங்கமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதி 10.3 மில்லியன் டாலரை ( சுமார் ரூ.69 கோடி) தன் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி ஊழலில் ஈடுபட்டார் என்பதுதான் நஜிப் ரசாக் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு.
இந்த ஊழல் பணத்தை அவர் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்து உள்ளதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த வழக்கு, கோலாலம்பூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நஜிப் ரசாக் மீது நீதிபதி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி பதிவு செய்தார்.
அப்போது கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் அமைதியாக நின்ற நஜிப் ரசாக், பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதியின் சகோதரர், நஜிப் ரசாக் கட்சியில் முக்கிய பதவி வகித்தவர். எனவே அவர் இப்போது மாற்றப்பட்டு, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு நேற்று விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது. #Malaysia #NajibRazak #Tamilnews
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் இன்று மாலை 6 மணியளவில் பாகிஸ்தான் வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்பை வரவேற்க அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் என பலர் லாகூரில் கூடியுள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப்பை வரவேற்க காத்திருப்பது கழுதை கூட்டம் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது நவாஸ் ஷெரீப் கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #NawazSharif #ImranKhan
வாஜ்பாயின் உடல்நிலை இன்று மதியம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வாஜ்பாய் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பணக்கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின. நஜிப் ரசாக்க்கிடம் ஊழல் தடுப்பு போலீசார் சமீபத்தில் இரண்டு நாட்கள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். கோலாலம்பூர் நகரில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு தலைமையகத்தில் 3 அடுக்குகளாக நடைபெற்ற இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நீடித்தது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ரோஸ்மாவின் வழக்கறிஞர் குமரேந்திரன், ரோஸ்மா அளித்த வாக்குமூலத்தை விசாரணை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவும், எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் வர தயாராக ரோஸ்மா இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #Malaysia #NajibRazak
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உண்டு என்பதை அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முதன் முறையாக ஒப்புக்கொண்டார்.இது தொடர்பாக ‘தி டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா?” இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா?” என்று குறிப்பிட்டார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்த விசாரணை முடங்கிப்போய் இருப்பது நினைவுகூரத்தக்கது.






