search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistani. terrorists"

    • காஷ்மீரில் இன்று 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
    • பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஸ்ரீநகர்:

    ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் நேற்று காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதன் முடிவில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இந்நிலையில் இன்றும் தொடர்ந்து தேர்தல் வேட்டை நடைபெற்றது. இதில் புல்வாமா உள்பட இரண்டு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
    • சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 2 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.

    குப்வாரா:

    ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

    இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் குல்காம் பகுதியில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் என்று நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். #NawazSharif #MumbaiAttack
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உண்டு என்பதை அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முதன் முறையாக ஒப்புக்கொண்டார்.இது தொடர்பாக ‘தி டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா?” இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா?” என்று குறிப்பிட்டார்.

    மும்பை தாக்குதல் தொடர்பாக ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்த விசாரணை முடங்கிப்போய் இருப்பது நினைவுகூரத்தக்கது. 
    ×