search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magic"

    • விருதுநகர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் காளிசெல்வி (28). இவர் பட்டமேற் படிப்பு முடித்து கோவையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார்.

    6 மாதங்களுக்கு முன்பு விருதுநகர் அய்யனார் நகர் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்து அங்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுக்க சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிசெல்வியை தேடி வருகின்றனர்.

    பாறைப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி நாயக்கர் (95). இவர் அப்பகுதியில் உள்ள ஜக்கம்மாள் கோவிலுக்கு தினசரி சென்று வருவது வழக்கம். கடந்த 21-ந் தேதி கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சக்கையா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (37). இவருக்கு திருமாணமாகிவிட்டது. ஒரே வீட்டில் இருந்த போதும் மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு முன்பு வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை தந்தையிடம் கொடுத்துள்ளார். தற்போது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்ட போது அவர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மூலம் முத்துகாமாட்சியை காணவில்லை.பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என மனைவி உமாமகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் காணாமல் போன 628 பேர் மாயமான 95 பேர் நிலைமை என்ன வென்று தெரியவில்லை.
    • அவர்கள் எங்குசென்றார்கள்? என்ன ஆனார்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பள்ளி- கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், வயதானவர்கள் மாயமாகி வருவது தொடர் கதையாக உள்ளது.

    குடும்பத்தில் விரக்தி, காதல் தோல்வி, தொழில் நஷ்டம், தேர்வு பயம், தனிமை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் உள்பட பலர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    குறிப்பாக இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயமாவது அதிக அளவில் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர கவனம் செலுத்தி போலீசார் விசா ரணை நடத்தினர்.

    கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிறுவர்-சிறுமி கள்,பெண்கள், மாணவிகள் என 628 பேர் மாயமாகி இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இதுவரை 533 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் வெளியூர் மற்றும் உறவினர்கள் மற்றும் பழக்கமான நபர்களின் வீடுகளில் இருந்ததை கண்டறிந்து மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இதில் இன்னும் 95 பேர் நிலைமை என்ன வென்று தெரிய வில்லை. அவர்கள் எங்குசென்றா ர்கள்? என்ன ஆனார்கள்? என போலீ சார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், சமுதாயத்தில் தற்போது எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை எதிர்கொள்ள முடியாமல் சிலர் குடும்பத்தை விட்டு செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே குடும்பத்தில் யாரேனும் இது போன்ற நிலைமையில் இருந்தால் உடனே அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் வாழ்க்கையை எதிர்நோக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றனர்.

    • கள்ளக்காதல் மூலம் கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயமானார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் விவேகானந்தர் புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவரது மனைவி அழகு ராணி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில மாதங்களாக அழகு ராணி தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் பழகி வந்தார். இது குறித்து கணவர் கேட்டபோது தான் சகோதர முறையில் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அழகு ராணி தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி தான் காரணம் என கூறியுள்ளார். இதனால் மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அழகு ராணி தனது 5 வயது மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மாயமான தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 7 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் மாடாத்தி அம்மாள். இவரது மகள் பிரியலட்சுமி (வயது 19). சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகனுடன் மாயம்

    சாத்தூர் வெங்கடாசல புரத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு தர்ஜித் (5) என்ற மகன் உள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா அணிந்திருந்த 5 ½ பவுன் நகை மாயமானது. இதுகுறித்து வீரகுமார் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த பிரியா தனது மகனுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வருகின்றனர்.

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தேக்கங்குளத்தைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன் நித்தின் (16). இவர் காரியாபட்டியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று நித்தின் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி

    சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியைச் சேர்ந்தவர் பத்திரகாளி. இவரது மகள் ராஜரா ஜேஸ்வரி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ்லைனைச் சேர்ந்தவர் கதிரேஷ். எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீமா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மனைவி செல்போனில் பேசுவதை கதிரேஷ் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த லீமா மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் முத்தண்டியா புரத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஈஸ்வரபாண்டி (17). தீபாவளி மறுநாள் வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    • இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குப்பைச்சி பட்டியை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் ரேணுகா (வயது 24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 28-ந் தேதி கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது தாய் செல்வி கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரேணுகாவை தேடி வருகின்றனர் .

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மதுராபுரியை சேர்ந்தவர் ராமர் (70). இவர் கடந்த 28-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மகன் வீட்டிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு செல்வதாக மதுராவூரிலிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் ஊத்துக்கோட்டைக்கு செல்லவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுபற்றி அவரது மகன் ஆறுமுகம் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராமரை தேடி வருகின்றனர்.

    சிவகாசியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தினார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீத்தாராமன் மகன் நாராயணன் (வயது 24) விவசாயி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (20) என்பவருக்கும் கடந்த 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் நாராயணன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
    • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியில் தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    அவர் விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

    உடனடியாக அந்த தொழிலாளி அக்கம் பக்கத்தார் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் மாசாணமுத்து. இவரது மகள் மாரீஸ்வரி (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கீழபட்டியை சேர்ந்தவர் மோகனலட்சுமி (22). தையல் முடித்திருந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பசுபதி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள பாவாலி காமாட்சி நகரை சேர்ந்தவர் வளர்மதி. இவரது மகள் முத்துலட்சுமி (25). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டிலிருந்த முத்துலட்சுமி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில் உறவினர் குமார் என்பவருடன் மகள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை அருகே பெண் தொழிலாளி-மாணவன் மாயமானார்கள்.
    • 2 பேர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குப்பச்சிபட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மகள் கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.

    வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மதன்குமார் (வயது 14). 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார்.

    2 பேர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே கணவன் மனைவியை திட்டியதால் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.
    • இது குறித்து கணவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொரவம் பாளையம் நடராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ரத்தினாள் (34). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்னர்.

    இந்த நிலையில் ரதினால் வேலைக்கு சென்று விட்டு வந்து சரியாக வீட்டு வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனைவியை கணவன் கண்டித்து வந்தார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து தங்கராஜ், ரதினாலை திட்டினார். இதனால் ரத்தினாள் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.

    அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து தங்கராஜ் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுச்சத்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே மணிக்கொல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சிலம்பிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவரது பவானி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகின்றன.2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி அன்று தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே மணிக்கொல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கி இருந்த பவானி 2 மகள்களுடன் மாயமானார்.அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பவானி மற்றும் குழந்தைகளை தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவேஇதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தாயார் சாந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பவானி மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்கள்.

    • இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
    • மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரது மகள் லில்லி (வயது 42). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்துமருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து மாயமான லில்லியை தேடி வருகிறார்.

    ×