search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magic"

    • டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் பாலாஜி (வயது 43). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவர்கள் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்தபோது, பாலாஜி கடன் தொல்லையால் தவித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் எங்காவது சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 31). இவரது மனைவி பொன் பாண்டியம்மாள் (26). சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மகேந்திரன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் கணவரை கண்டுபிடித்து தருமாறு பொன் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சின்ன அத்திகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (47). ரெயில்வே ஒப்பந்ததாரரிடம் பணி செய்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு வேலைக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து கிருஷ்ண சாமியின் மனைவி பால் பாக்கியம் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதயசூரியன். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
    • காலையில் கூலி வேலைக்குச் சென்ற மனைவி சவுந்தர்யா மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் வழக்கம் போல் காலையில் கூலி வேலைக்குச் சென்ற மனைவி சவுந்தர்யா மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உதயசூரியன், மனைவியை தேடினார். எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.

    • 2 வயது குழந்தையுடன் தாய் மாயமானார்.
    • சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பசும்பொன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்பாண்டி. இவரது மனைவி கலைமலர் (வயது23). இவர்களது 2 வயது மகன் அருள்கருப்பு. கடந்த 31-ந் தேதி அருள்கருப்புடன் வெளியே சென்ற கலைமலர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சதீஷ்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சாமுவேல் (வயது 59). இவரது சகோதரி அபூர்வம் (65)சாமுவேல் மகன் நிச்சய தார்த்தம் நடை பெற்றது. அங்கு சென்ற அபூர்வம் அதன் பின்னர் மாயமாகி விட்டார்
    • உறவினர்கள் வீடுகள் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 59). இவரது சகோதரி அபூர்வம் (65) கடந்த 3-ந் தேதி சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சாமுவேல் மகன் நிச்சய தார்த்தம் நடை பெற்றது. அங்கு சென்ற அபூர்வம் அதன் பின்னர் மாயமாகி விட்டார்.

    உறவினர்கள் வீடுகள் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாமுவேல் அளித்த புகாரின் அடிப்படை யில் கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பரங்கிப்பேட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் டிப்ளமோ நர்சிங் முடித்து வீட்டில் இருந்து வந்தார். திடீரென காணவில்லை.
    • சிதம்பரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு விடுதியில் படித்து வந்தார் மாணவி விடுதிக்கு வரவில்லை.

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் டிப்ளமோ நர்சிங் முடித்து வீட்டில் இருந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் இளம் பெண்ணுக்கும் தஞ்சாவூர் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அவரைக் காண சென்று விட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணாங்குப்பத்தில் தனியார் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சிதம்பரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு விடுதியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி விடுதிக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் (47). இவர் கூலி வேலை செய்து வருகிறார். உடல்நிலை சரியில்லை என்று ஆஸ்பத்திரக்கு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
    • அவரதுமனைவி பிரபாவதி அளித்த புகாரின் பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர்..

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வில்லியநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதியின் கணவர் ரமேஷ் (47). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 23-ந்தேதி அன்று உடல்நிலை சரியில்லை என்று கூறி ஆஸ்பத்திரக்கு சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது இவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பிரபாவதி அளித்த புகாரின் பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை தேடி வருகின்றனர்.

    • சிவகாசியில் 4 பெண்கள் திடீரென மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவருக்கு 17 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டின் அருகிலேயே காளிராஜின் மாமனார் வீடு உள்ளது.

    காளிராஜின் மகள் அங்கிருக்கும் தனது சித்தி ஆனந்த ஈஸ்வரியை அடிக்கடி சென்று பார்த்து வருவார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த காளிராஜ் மகளை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மகளையும், ஆனந்த ஈஸ்வரியையும் காணவில்லை. எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மனைவி இசக்கியம்மாள் மற்றும் அவரது மகள் நாகஜோதியையும் காணவில்லை என தெரியவந்தது.

    மேலும் விசாரித்தபோது இந்த 4 பேரும் அந்தப்பகு தியில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனி முன்பு நின்று பேசிக் கொண்டிருந்ததாக தெரியவந்தது. ஆனால் இந்த 4 பேரும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து பெண்கள் மாயமானது குறித்து காளிராஜ் மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்கள்-கல்லூரி மாணவர் மாயமானார்கள்.
    • சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி அம்மச்சி யாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது 16 வயது மகள் திருச்சுழியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை சிவானந்த புரத்தை சேர்ந்தவர் தேவ ஜோதி. இவரது மகள் திலக வதி (20). சம்பவத்தன்று வெம்பக்கோட்டை அருகே சிப்பிப்பாறையில் தங்களது பழைய வீட்டிற்கு தாய்-மகள் வந்துள்ளனர். அங்கி ருந்த திலகவதி திடீ ரென மாயமானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர்

    சிவகாசி சுப்பிரமணிய புரம் காலனியை சேர்ந்தவர் முக்தீஸ்வரி. இவரது மகன் தனமகேந்திரன் (16). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவர், சம்ப வத்தன்று சென்னை செல்வ தாக கூறி விட்டு சென்றார். அதன் பின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. சிவகாசி கிழக்கு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கல்பனாதேவி(வயது38). இவரது கணவர் லட்சும ணன் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு போனில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் கல்பனா தேவி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் அப்போதும் போனில் அழைத்து மனை வியை லட்சுமணன் தகாத வார்த்தைகளை பேசி திட்டி யதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கல்பனாதேவி தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து அவரது தாய் கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம் பட்டியை சேர்ந்தவர் லதா(45). இவரது தாயார் லட்சுமி(80). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரைக்கு செல்வதற்காக தாயாருடன் அருப்புக்கோட்டை பஸ் நிலையத்திற்கு லதா வந்தார். அங்கு லட்சுமி மாயமானார். எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து லதா அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் லட்சுமியை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி புலவர்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் ராமலட்சுமி(வயது 23). இவருக்கும், சங்கரன் கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் திருமணமாகி வானதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமலட்சுமியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தும்படி கூறி மகேந்திரன் விட்டுச்சென்றுள்ளார்.

    இந்தநிலையில் பெற்றோர் வீட்டிலிருந்த ராமலட்சுமி, குழந்தையுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் மகாலிங்கம் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் திடீர் மாயமானார்கள்.
    • சாத்தூர் டவுன் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது36). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் விமரிசையாக நடந்தது. புதுமண தம்பதியர் விருந்துக்காக சிவகாசி வந்திருந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று உறவினர்களுடன் வெளியே சென்ற தேவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ்வரன் மற்றும் குடும்பத்தினர் தேவியை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதுகுறித்து விக்னேஷ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சுகப்பிரியா(20). அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரு கிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சுகப்பிரியா திடீரென மாயமானார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். சாத்தூர் ஒரிஜினல் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் வெற்றி ஈஸ்வரன். தற்காலிக மின் ஊழியரான இவர் திடீரென மாயமானார். சாத்தூர் டவுன் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாா்.
    • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    வெள்ளகோவில்:

    முத்தூா் சின்னமுத்தூா் பழனியப்பபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நூற்பாலையில் அரிச்சந்திரன் என்பவா் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் மதீஷ் (வயது 13) சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாா்.

    இவா் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வர தாமதமாகியுள்ளது. இதனால் அவரது தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றவா் வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • பெண்கள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள காந்தி நகரில் தனியார் சிறுவர் காப்பகம் உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மாசாணிமுத்து (வயது 15) சேர்க்கப்பட்டார். சம்பவத்தன்று காப்பகத்தில் இருந்த சிறுவன் திடீரென மாயமானார். இதுகுறித்து காப்பக நிர்வாகி அருணா கிரேசி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஹரிப்பிரியா (19). தையல் கடையில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி பொன்னு லட்சுமி (24). குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த இவர் திடீரென மாயமானார். ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×